பிரதமர் மற்றும் ஆளுனர்களுக்கிடையிலான சந்திப்பு….

340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலமானது மார்ச் 19ஆந் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதன் காரணமாக, அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கிடையேயும் ஆளுனர்களுக்கிடையேயுமான கலந்துரையாடலொன்று, 2023.03.14ஆந் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்தர்ப்பத்தில் ஆளுனர்களான டிகிரி கொப்பேகடுவ (சப்பிரகமுவ), வசந்த கரன்னாகொட (வடமேல்), எம்.ஜே.எம்.முசம்மில் ( ஊவா ), மகிபால ஹேரத் (வடமத்திய), விலீ கமகே (தெற்கு), லலித் யு.கமகே (மத்திய), அநுராதா யகம்பத் (கிழக்கு), ரொஷான் குணதிலக (மேல்), ஜீவன் தியாகராஜா (வடக்கு) மற்றும் பிரதமரது செயலாளர் அநுர திசாநாயக்க, அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன மற்றும் பிரதமரது சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு