பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் பாகிஸ்தான்

உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கிக்கும் இடையிலான சந்திப்பு 17.08.2022 அன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நீண்ட மற்றும் வலுவான நட்புறவைக் கொண்ட தனது நாட்டின் ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்தும் பெறும் என உயர்ஸ்தானிகர் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச மேடைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து பிரசன்னமாகியமைக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் கால்நடைப் பண்ணைகள் மற்றும் பால் பண்ணைகள் ஆகிய துறைகளில் உறவுகளை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீண்ட கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.

இலங்கை பௌத்தர்கள் தக்ஷிலா உள்ளிட்ட புராதன பௌத்த யாத்திரை மையங்களை பார்வையிடுவதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு அனுர திஸாநாயக்கவும் கலந்து கொண்டார்