தீமையை எதிர்ப்போம்! நன்மையை விதைப்போம்!

தீமை என்னும் இருளை அகற்றி நன்மை என்னும் ஒளியை சமூகத்தில் பரப்புவதை மையப் பொருளாகக் கொண்டு, உலகம் முழுவதும் வாழ் இந்துக்கள் தீபங்களை ஏற்றி, எங்கும் ஒளி பரப்பி, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
பிரிவினைக்கு ஆயிரம் காரணங்களை உருவாக்கினாலும், கட்சி, நிற, மத, இன பேதங்களை ஒதுக்கி, பொது அக்கறையுடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தை இன்று நாம் அடைந்துள்ளோம். தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் இத்தருணத்தில், தீபாவளியின் உண்மையான அர்த்தத்தை மனதில் இருத்தி, பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்த சவாலான நேரத்தை எதிர்கொள்ள உறுதி எடுத்தல் வேண்டும்.
"ஆன்மீக இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, தீமையை அழித்து நன்மை, அறியாமையிலிருந்து அறிவொளி" என்பனவற்றைக் குறிக்கும் தீபாவளிப் பண்டிகையை அர்த்தமுள்ளதாக்கி, தனிமனித வெற்றியை விட பொதுவான ஆன்மீக முன்னேற்றத்தின் வெற்றியில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு

Download Release