மறுசீமைப்புக்களை விரைவுபடுத்துவதற்கான அரசியல் அபிலாஷைகள் பாராட்டப்பட வேண்டும். - டாக்டர் சுப்ரமணியன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும், கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும், இலங்கைத் தலைமைத்துவம் காட்டிய, அரசியல் முனைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் அவர்கள் கூறினார்.

26.01.2023 அன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த கலாநிதி சுப்ரமணியன், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணப் பொதியின் மூலம் பூர்த்தி செய்ய வேண்டிய அனைத்துத் தேவைகளையும் இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகவும், பிரதான கடன் வழங்கும் நாடுகளின் உறுதிப்படுத்தல்களின் பின்னர் உரியசெயற்பாடுகள் நிறைவுபெறும் எனவும் கூறினார்.

டாக்டர் சுப்பிரமணியன் 2018 முதல் 2021 வரை இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். "நாங்கள் உங்களுக்காக நேராக முன்னோக்கி விளையாடுவோம், தேவைப்பட்டால், நாங்கள் கவர் டிரைவ்களையும் விளையாடுவோம்," என்றும் அவர் கிரிக்கெட் பாணியில் கூறினார்.

முன்னெப்போதுமில்லாத வகையில் நாடு எதிர்கொள்ளும், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையிலும், உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ஏற்றுமதிக்காகவும் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து IMF பிரதிநிதிகளிடம் பிரதமர் விளக்கினார்.

அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் குறைப்பதற்கும், ஏற்றுமதிப் பொருட்களை அதிகரிப்பதற்கும், சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கான நலன்புரிச் செயற்பாடுகளின் அவசியம் தொடர்பிலும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

பிரதமர் சுட்டிக்காட்டியபடி, கடன்களை மறுசீரமைப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் திட்டங்களை தயாரிக்கும் செயற்பாட்டில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான பாதுகாப்பும் அவசியம் என கலாநிதி சுப்ரமணியன் அவர்கள் கூறினார். எவ்வாறாயினும், ஆகக் குறைந்த்து அரச துறையில் ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், பலர் தங்கள் வருமான மார்க்கங்ளை இழந்துள்ளதால், பொதுத்துறையினர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாரான மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிச்சந்திர மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் துறைப் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி வி. டி. விக்கிரமாராச்சி அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.