கொழும்பு மாவட்டச் செயலாளரது வெற்றிகரமான வீட்டுத்தோட்டம் பிரதமர் அவர்களாலும், பிரதம நீதியரசராலும் பார்வையிடப்பட்டது.

கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன அவர்கள், தமது உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்தில் மேற்கொண்ட வெற்றிகரமான வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பார்வையிட்டார்.

பிரதம நீதியரசர் திரு. ஜயந்த ஜயசூரிய அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.