கொழும்பு றோயல் கல்லூரியினால் ஜனாதிபதி, பிரதமர் கௌரவிக்கப்பட்டனர்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 2023.02.22ஆந் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய , அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான றவூப் ஹக்கீம், கெவிந்து குமாரதுங்க, பிரியங்கர ஜயரத்ன, துமிந்த திசாநாயக்க, மகிந்தானந்த அலுத்கமகே, டிலான் பெரேரா, யதாமினி குணவர்தன, காவிந்த ஜயவர்தன, நிபுன ரணவக்க ஆகியோருடன் இன்னும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.