கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 2023.02.22ஆந் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய , அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான றவூப் ஹக்கீம், கெவிந்து குமாரதுங்க, பிரியங்கர ஜயரத்ன, துமிந்த திசாநாயக்க, மகிந்தானந்த அலுத்கமகே, டிலான் பெரேரா, யதாமினி குணவர்தன, காவிந்த ஜயவர்தன, நிபுன ரணவக்க ஆகியோருடன் இன்னும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.