பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமானவையல்ல; எமக்கு முக்கியமானது பிள்ளைகள் மாத்திரமே, எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கான விஜயத்தின் ஓர் அங்கமாக, ஜனவரி 17ஆம் திகதி புத்தளம் ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தைப் பார்வையிடச் சென்றபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, புத்தளம் ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பிரதமர் அங்கு ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அதிபர் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலளித்த பிரதமர், விஞ்ஞானப் பாடம் மட்டுமல்லாது ஏனைய அனைத்துப் பாடங்கள் தொடர்பாகவும் பிள்ளைகளுக்கு அறிவு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், பிளவுகளைக் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பிள்ளைகளுக்காகச் சிறந்தவற்றைச் செய்ய வேண்டும் எனவும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனைகளைப் பாடசாலை மட்டத்தில் கூட்டு முயற்சியாகக் கலந்துரையாடித் தனக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். பாடசாலைகளாகப் பிரிந்து நின்று பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்க இயலாது எனவும், எப்போதும் பிள்ளைகளின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம். ஆயினும் எமக்கு முன்னால் தற்போது ஒரு சிறந்த எதிர்காலம் உருவாகியிருக்கின்றது. எனவே, இதற்கு மேல் அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தீர்மானங்களை எடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

பல்வேறு திறமைகளைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதே சிறந்தது என்பதால், ஒரு பாடத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத, அனைத்துத் துறைகள் குறித்தும் அறிவுமிக்க பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்பதையும் பிரதமர் இங்கே வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக குமார, அஜித் கிஹான், முஹம்மது பைசல் மற்றும் ஹிருணி விஜேசிங்க ஆகியோருடன் புத்தளம் நகர முதல்வர், வடமேல் மாகாணக் கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ ක්‍රියාවලියේ පරිවර්තනීය වෙනස අපි අඩියක්වත් පස්සට තියලා නෑ, තියන්න සූදානමකුත් නෑ. දියත් කරපු සැලසුම් ඒ ලෙසටම ක්‍රියාත්මක වෙනවා. - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

ගුරුවරුන් 23,000ක් බඳවා ගැනීමට අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය හිමි වුණා.

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ ක්‍රියාවලියේ පරිවර්තනීය වෙනස සිදු කිරීමේ ක්‍රියාවලිය අඩියක්වත් පස්සට ගෙන නැති බවත්, දියත් කළ සැලසුම් ඒ ලෙසටම ක්‍රියාත්මක කරන බවත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

පුත්තලම දිස්ත්‍රික්කයේ ඉදිරි අධ්‍යාපන කටයුතු පිළිබඳ දැනුවත් කිරීම සඳහා පුත්තලම කලාපයේ අධ්‍යාපන නිලධාරීන් සහ විදුහල්පතිවරුන් සමග අද (17) පැවැති සාකච්ඡාවකට එක්වෙමින් පුත්තලම දිසාපති කාර්යාලයේ ප්‍රධාන ශ්‍රවණාගාරයේදී අග්‍රාමාත්‍යතුමිය මේ බව ප්‍රකාශ කළාය.

මෙහිදී අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය,

මෙම අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ සැලසුම් දීර්ඝකාලීන ක්‍රියාවලියක් තුළ සාක්ෂාත් කර ගැනීමට සැලසුම් කර ඇති ඒවා, ඒ සඳහා වන යටිතල පහසුකම් සංවර්ධනය, ගුරු-විදුහල්පති බඳවා ගැනීම්, ඩිජිටල් තාක්ෂණික උපකරණ බෙදාදීම් අඛණ්ඩව සිදුකරමින් පවතිනවා. මෙවැනි බරපතළ ක්‍රියාවලියකදී සුළුතර කණ්ඩායම් ඔවුන්ගේ පටු අරමුණු සාක්ෂාත් කර ගැනීම සඳහා ඉදිරිපත් කරන විරෝධතා නොතකා, රජය හා නිලධාරීන් අතර ඇති අන්‍යෝන්‍ය විශ්වාසය ඉදිරියටත් පවත්වාගත යුතුයි. මෙය දරුවන්ගේ අනාගතය හැඩගස්වන, සමස්ත රටේම ඉදිරි අනාගතය තීරණය වන ක්‍රියාවලියක් බැවින් ඒ පිළිබඳ ජනතාවගේ විශ්වාසය තහවුරු කිරීම අත්‍යවශ්‍ය යි.

අධ්‍යාපන පරිවර්තන ක්‍රියාවලියේ විශේෂ වැඩසටහන්වලට අප මුදල් වෙන් කරලා තියෙනවා. යටිතල පහසුකම් ඇතුළු ඩිජිටල් අධ්‍යාපන පහසුකම් වන අන්තර්ක්‍රියාකාරී තිර සහ අන්තර්ජාල සබඳතා ලබාදීම මුල් මාස දෙක ඇතුළත තෝරාගත් ද්විතීයික පාසල්වලට ලබාදීමට සැලසුම් කර තිබෙනවා.

ගුරුවරුන් 23,000ක් බඳවා ගැනීමට අපට අනුමැතිය ලැබුණා. එහි පවතින වයස් සීමා ගැටලු නිරාකරණය කරමින් ගුරුවරුන් හා විදුහල්පතිවරුන් බඳවා ගැනීමට සැලසුම් කරනවා. නායකත්ව ගුණාංග ඇති අය පාසල් පද්ධතියට අවශ්‍යයි. එවැනි අයට මම ආරාධනා කරනවා මෙම ක්ෂේත්‍රයට පිවිසෙන්න කියා.

එසේම, සංවර්ධනය කිරීමට තෝරාගත් පාසල්වල යටිතල පහසුකම් පමණක් නොව දරුවන්ගේ පහසුව, ප්‍රවාහනය සහ සෞඛ්‍ය වැනි දෑ සම්බන්ධවත් සමස්ත සැලසුමක් සකස් කරන්න. ඒ සඳහා අනුමැතිය ලබාගැනීමට දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කවුන්සිලයට යොමු කරන්න. ගුරු පුහුණු මධ්‍යස්ථාන ආරම්භ කිරීම, විද්‍යාපීඨ ප්‍රතිසංස්කරණය කිරීම වැනි මානව සම්පත් ගොඩනැගීමේ වැඩසටහන් ද අප ආරම්භ කර තිබෙනවා

අග්‍රාමාත්‍යතුමියගේ උපදෙස් මත මූල්‍ය ප්‍රතිපාදන වෙන්වූ වැඩසටහන් වන දරුවන්ගේ ජල හා සෞඛ්‍ය පහසුකම් නංවාලීම සඳහා සැලසුම් සකස් කොට නුදුරේදීම ක්‍රියාත්මක කරන බවත්, ප්‍රාථමික පාසල් සහ සිසුන් 50ට අඩු පාසල් සංවර්ධන ක්‍රියාකාරකම් ඉදිරියේදී ක්‍රියාත්මක කරන බවත් නිලධාරීහු අග්‍රාමාත්‍යතුමිය වෙත පැවසූහ.

මෙම අවස්ථාවට රාජ්‍ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය මහාචාර්ය ඒ.එච්.එම්.එච්. අබයරත්න මහතා, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන ගයාන් ජානක කුමාර මහතා, අජිත් ගිහාන් මහතා, මොහොමඩ් ෆයිසාල් මහතා, හිරුණි විජේසිංහ මහත්මිය සහ පුත්තලම දිස්ත්‍රික් අධ්‍යාපන අධ්‍යක්ෂක, කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්, විදුහල්පතිවරුන් ඇතුළු මහා සංඝරත්නය සහ කන්‍යා සොයුරියන් ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எந்தவொரு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பு குறித்துப் புத்தளம் மாவட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் இடையே, இன்று (17) முற்பகல் புத்தளம் விஞ்ஞானக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

இலங்கையின் தற்போதைய நிலவரத்தின்படி, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், விஞ்ஞான மற்றும் கணித பாடத்துறைகளின் ஊடாகக் கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான தங்கு தடையற்ற, சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் கொள்கையுமாகும்.

விஞ்ஞானப் பாடத்துறைக்காக முன்னெடுக்கப்படும் இந்தப் பரீட்சார்த்த முயற்சிகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் விஞ்ஞானம் அல்லது கணிதம் என்பதற்காக நாம் மிகை மதிப்பீடுகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை. விஞ்ஞானம் மற்றும் கணிதத்தைப் போலவே ஏனைய அனைத்துத் துறைகளும் நமக்கு முக்கியமானவை.

ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ இருப்பினும், அவர் மக்களுடன் மக்களுக்காகவே பணியாற்றுகின்றார். அங்கே மனிதநேயம் போன்ற மானுடப் பண்புகளும் அவசியமாகின்றன. எதிர்காலத்தில் எமது நாட்டை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையான மனிதநேயம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மானுட உறவுகளை மதிக்கும் பரிபூரணமான பிரஜைகளை, ஒரு தரமான கல்வியின் ஊடாக மட்டுமே உருவாக்க முடியும்.

பாடசாலைகளில் பெருமளவு ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதற்காகச் சுமார் 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கற்றல் என்பது விடயங்களை மனப்பாடம் செய்வது மாத்திரமல்ல. தேடலின் ஊடாகத் தகவல்களைக் கண்டறியும் ஆர்வம் பிள்ளைகளிடம் உருவாக வேண்டும். எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும், எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கல்வி நிலையத்தின் பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு

புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்துப் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துதல் மற்றும் ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுதல் ஆகிய பணிகளுக்காக மேற்கொண்ட பயணத்தின் இடையே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கல்வி நிலையத்தைப் பார்வையிடுவதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (17) பிற்பகல் சென்றார்.

தற்போது திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கல்வி நிலையம் இயங்கிவரும் பழைய மருந்துக் களஞ்சியசாலைக்குச் சொந்தமான கட்டடத்திற்குப் பதிலாக, நிரந்தரக் கட்டடமொன்றை நிர்மாணிப்பது குறித்தும், அதுவரை நிர்வாக மற்றும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான தற்காலிகக் கட்டடமொன்றைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் நகர சபைக்குச் சொந்தமான கட்டடமொன்றைத் தற்காலிகமாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகப் புத்தளம் நகர முதல்வர் ரின்ஷாட் அஹமட் இணக்கம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன உள்ளிட்ட புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாணக் கல்வி அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණය තවත් ශක්තිමත්ව ක්‍රියාත්මක කරනවා - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

නව අධ්‍යාපන ප්‍රතිසංසංකරණය තවත් ශක්තිමත්ව ක්‍රියාත්මක කරන බවත්, කිසිදු ලෙසකින් අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ හකුළන්න කටයුතු නොකරන බවත් අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍ය අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

දිට්වා සුලිකුණාටුවෙන් ආපදාවට පත් පාසල් නිරීක්ෂණය කිරීමෙන් අනතුරුව අද (16) හලාවත ශ්‍රි විජයාරාමයේ විහාරාධිපති, වයඹ පළාත් උප ප්‍රධාන සංඝනායක පූජ්‍ය සුමනසිරි ස්වාමීන් වහන්සේ බැහැදැක අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ පිලිබඳ පැහැදිළි කරමින් අග්‍රාමාත්‍යතුමිය මෙසේ සඳහන් කළාය.

නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණය කාලීන අවශ්‍යතාවක්, විවිධ දේශපාලන ක්‍රියාකාරීන් ජනතාව මුලාවට පත්කරමින් ඉතාම වැදගත් ප්‍රතිසංස්කරණයක් නතර කරන්න උත්සාහ කරනවා. මේ නිසා ආසාධරණයක් වෙන්නේ තමන්ගේම දරුවන්ට කියලා ඒ ජනතාවට අවබෝධයක් නැහැ. ජල ගැලීම් නිසා හලාවත විශාල හානියක් සිදු වුණා. හලාවත රෝහලේ ඖෂධාගාරයටත් විශාල ලෙස හානි සිදු වුණා. එය නැවත ගංවතුරට හසු නොවන ලෙස යථාතත්වයට පත්කර ගැනීමට අවශ්‍යයි. ඒ වගේම හලාවත නගරය ගංවතුරෙන් ආපදාවට පත්නොවන ලෙස සංවර්ධනය කිරීමටත් අවශ්‍යයි. සංචාරක ආකර්ශනයක් තිබෙන හලාවත වෙරළ උද්‍යානය ඉදිකිරීමට කටයුතු කිරීම පිළිබඳවද සතුටු වන බව වයඹ පළාත් උප ප්‍රධාන සංඝනායක පූජ්‍ය සුමනසිරි ස්වාමීන් වහන්සේ මෙහිදී පැවසූහ.

නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණය පිලිබඳ ජනතාවගේ ප්‍රසාදය තව තවත් පළවෙමින් තිබෙනවා. අපි කිසිම ලෙසකින් අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ හකුළා ගන්න කටයුතු කරන්නේ නැහැ. තවත් ශක්තිමත්ව මේ අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණය සිදු කරනවා. හලාවත සංවර්ධන කටයුතු පිලිබඳ යෝජනා අපිට ඉදිරිපත් කරන්න දිස්ත්‍රික් සංවර්ධන කමිටුව හරහා ඒ පිලිබඳ සොයා බලා අවශ්‍ය කටයුතු සිදු කරනවා යැයි මෙහිදී අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

මහා සංඝරත්නය, පාර්ලිමේන්තු මන්ත්‍රිවරුන්, ප්‍රාදේශිය නියෝජිතයින් හා රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

நாட்டிற்குப் பொருத்தமான ஒரு சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டிற்குப் பொருத்தமான ஒரு சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாகவும், தரமான கல்வியை வழங்குவதென்பது பாடத்திட்ட மாற்றத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் பிரதமர் தெரிவித்தார். அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிடைக்க வேண்டிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி ஆரம்பிக்கப்பட வேண்டிய, நீண்ட காலம் எடுக்கக்கூடிய ஒரு பாரிய பணியாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

’திட்வா’ சூறாவளியினால் கடும் பாதிப்புக்குள்ளான சிலாபம் சேனாநாயக்க தேசிய பாடசாலையைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அகில இலங்கை ரீதியில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட அவ்வித்தியாலய மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இப்பாடசாலைக்கு ஒரு நீண்ட கால வரலாறு இருக்கின்றது. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர அவர்கள் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்கிய 54 பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

கன்னங்கர அவர்கள் ஒரு பாரிய தொலைநோக்கின் அடிப்படையிலேயே இலவசக் கல்வியைக் கொண்டு வந்தார். அதன் மூலம் நாட்டிற்குத் தேவையான சிறந்த பிரஜையை உருவாக்குவதற்கான தரமான கல்விக்கான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதே எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும் இன்று போலவே அன்றைய காலத்திலும் தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக்கொண்ட ஒரு தரப்பினர் இலவசக் கல்விக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நான் பாராளுமன்ற நூலகத்திலுள்ள இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது இடம்பெற்ற பாராளுமன்ற விவாதங்களை வாசித்துப் பார்த்தேன். அதில் சில தலைவர்களின் கூற்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலவசக் கல்வியினால் தமது தோட்டத்தில் ஒரு தேங்காயைப் பறித்துக்கொள்ளக்கூடப் படிப்பறிவற்ற ஒருவரைத் தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதாலேயே அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் நான் மற்றுமொரு விடயத்தையும் அறிந்துகொண்டேன். சகோதரர் வெனுர எதிரிசிங்க இப்பாடசாலையிலேயே கல்வி கற்றிருக்கின்றார். வெனுர எதிரிசிங்க அவர்கள் அடுத்த சந்ததியினருக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும், பிறரது நலனுக்காகவும் போராடித் தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான உன்னத நோக்கங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், எமது நாடு இன்றுள்ள நிலையில் அல்லாமல் மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கும்.

இவ்வாறான உன்னத நோக்கங்களைக் கொண்ட இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் விரும்பவில்லை. அவ்வாறான சிறந்த பண்புகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான குடிமக்களை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

உங்களது திறமைகள் மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் மிக உயர்ந்த நிலைகளை எட்டக்கூடிய ஒரு பொருத்தமான சூழலையும் கல்வி முறைமையையும் உருவாக்குவதே எமது நோக்கமாகும். தனக்காக மாத்திரம் அல்லாது தான் சார்ந்த சமூகத்தை மாற்றுவதற்கும், சமூகத்திற்குத் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும், ஒரு நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், பிறரைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள, மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதையே எமது கல்விக் கொள்கையின் மூலம் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இத்தகைய சிறந்த வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். நாட்டுக்கு மாத்திரமன்றி உலகிற்கே முக்கியமான ஒரு பாடசாலையாக இதனை மாற்றியமைக்க உங்களால் முடியும் என நான் நம்புகின்றேன். பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு முகம் கொடுத்த சிலாபம் கல்வி வலயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அதற்கான சக்தியும் தைரியமும் இருக்கின்றது என்பது புலப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, ஹிருணி விஜேசிங்க, முஹம்மது பைசல் மற்றும் சிலாபம் சேனாநாயக்க தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.பி.என்.எஸ். பத்திரண உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு