பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

අපේ රජයේ ප්‍රතිපත්තිය සීමිත පිරිසකට සැප සම්පත් ලබා දීම නෙමෙයි. - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

රජය ආර්ථික කළමනාකරණය කරන්නේ සියලු ජනතාවට ප්‍රයෝජනවත් වන විදිහටයි

රජයේ ප්‍රතිපත්තිය සීමිත පිරිසකට සැප සම්පත් ලබා දීම නොවන බවත්, ජනතාවට ප්‍රයෝජනවත් වන ලෙස භාවිත කිරීමට හැකි පරිදි රජය ආර්ථික කළමනාකරණය සිදු කරන බවත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

2024 වසරේ අපොස උසස් පෙළ විශිෂ්ඨයින් ඇගයීම වෙනුවෙන් දෙසැම්බර්21 දින කිලනොච්චිය, ඉරණමඩු යුද හමුදා කඳවුරේ නෙළුම් පියස ශාලාවේ පැවති උතුරු පළාතේ දූදරුවන් වෙත ශිෂ්‍යත්ව පිරිනැමීමේ අවස්ථාවට එක්වෙමින් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මේ බව පැවසීය.

උතුරු පළාතේ යාපනය, කිළිනොච්චිය, මන්නාරම සහ වව්නියා දිස්ත්‍රික් නියෝජනය කරමින් 2024 වසරේ උසස්පෙළ විශිෂ්ඨ ලෙස සමත් දරුවන් 300 දෙනෙක් වෙත මෙහිදී ශිෂ්‍යත්ව පිරිනැමිනි.

මෙහිදී වැඩි දුරටත් අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙසේද කීය.

අපේ රජයේ ප්‍රතිපත්තිය සීමිත පිරිසකට සැප සම්පත් ලබා දීම නෙමෙයි. අපි ආර්ථිකය කළමනාකරණය කරන්නේ ජනතාවට ප්‍රයෝජනවත් වන විදිහට භාවිත කරන්නයි.

දිට්වා සුලි කුණාටුව නිසා රටේ සෑම දිස්ත්‍රික්කයකම හානි සිදු වුණා. අත්‍යවශ්‍ය යටිතල පහසුකම්, පාසල්, රෝහල්, මාර්ග රැසකට හානි සිදු වුණා අදටත් පනස් දහසක් පමණ ජනතාවට තමන්ගේ නිවාස වලට යන්න බැහැ.

උතුරු ප්‍රදේශයේ වැඩිහිටි ජනතාවට කඳවුර ජීවිතේ ගැන අත්දැකීම් ඇති එහි දුෂ්කර බව අපි ඔබට කිවයුතු නැහැ, යුද්ධය නිසා වසර ගණනාවක් අවතැන් කඳවුරු වල හිටියා. නමුත් අපේ රජය මේ සුළිකුණාටුවෙන් පසු එහෙම කඳවුරු වල තියාගන්න අදහසක් නැහැ.

සුළිකුණාටුවෙන් හානියට, අපදාවට පත් සියලු දේ යථාතත්වයට පත්කරමින් යනවා. පසුගියදා රුපියල් බිලියන 500ක් අපි සම්මත කර ගත්තා. ඒ සඳහා ණය ගන්නවත්, වෙනත් ප්‍රතිලාභ කපන්න වත් අවශ්‍ය වු⁣ණේ නැහැ. ජනාධිපතිතුමා ඇතුළු රජයේ ආර්ථික කළමනා කරණය නිසා ඒ මුදල් වෙන්කර ගැනීම පහසු වුණා.

භාණ්ඩාගාරය ශක්තිමත් කරමින් මුදල් නිවැරදිව කළමනාකරණය කරමින් ජනතාවට ප්‍රතිලාභ ලබා දෙන්න රජය කටයුතු කරනවා.

නිවාස පිරිසිදු කර ගැනීමේ සිට නිවාස ඉදිකරන්න, යටිතල පහසුකම් සංවර්ධනයට වගේම ජීවනෝපාය සංවර්ධනය කරන්නටත් රජය වැඩ කරමින් යනවා. අපි ⁣විශේෂයෙන් අවධානය යොමු කළා අධ්‍යාපන වෙනුවෙන්. දරුවන්ගේ දෛනික ක්‍රියාකාරකම් සාමාන්‍ය තත්ත්වය ගේන්න අවශ්‍යයි ඒ වෙනුවෙන් අපි පාසල් ආරම්භ කළා. පාසල ඉගෙන ගන්න ස්ථානයක් පමණක් නෙමෙයි, ආරක්ෂිත, සතුට පිරුණු තැනක් කළ යුතුයි.

උසස් පෙළ විභාගය පැවැත්වෙන අතරතුර අපි ආපදා තත්වයට මුහුණ දුන්නේ, එහිදී දරුවන්ගේ ආරක්ෂාව වෙනුවෙනුත්, විභාග ප්‍රශ්ණ පත්‍ර, පිලිතුරු පත්‍ර ආරක්ෂා කරමින් ලබා දුන් සහයෝගයට සියළු දෙනාට ස්තුතිවන්ත වෙනවා.

අපි 2025 සිට අධ්‍යාපනයට වෙන් කරන මුදල වැඩි කරමින් අධ්‍යාපන පද්ධතිය ශක්තිමත් කරමින් සිටිනවා. වව්නියාව සහ කිළිනොච්චියේ ව්ශ්වවිද්‍යාලවල පැවති නේවාසික ගැටළුව විසදන්න 2026 අයවැය තුළින් අපි මුදල් වෙන් කළා. උතුරු පළාතේ මෙන්ම සමස්ත රටේම පාසල් පද්ධතිය සංවර්ධනය කිරීමටත්, ඩිජිටල් තාක්ෂණය සංවර්ධනය කරන්නත් අපි මුදල් වෙන් කරමින් අවශ්‍ය කටයුතු සිදු කරමින් යනවා.

අධ්‍යාපන අමාත්‍යංශය පසුගියදා 2025 වසරේ ප්‍රගති සමාලෝචනය සිදු කළා. උතුරු ප්‍රදේශයේ ප්‍රගතිය ගැන අපිට සතුටු වෙන්න බැහැ. අපි වෙන් කළ මුදල් නිසියාකාරව යොදවා නැහැ. මීට වඩා ප්‍රගතියක් අපි උතුරු පළාතෙන් බලාපොරොත්තු වෙනවා. ඉතා ඕනෑකමින් දිස්ත්‍රික් සම්බන්ධිකරණ කමිටු කටයුතු කළ යුතු බව මම සිහිපත් කරනවා.

2026 ගුරු පුරප්පාඩු පුරවන්න අපි කටයුතු කරනවා. නිලධාරී පුරප්පාඩුත් සම්පූර්ණ කරන්න අපි කටයුතු කරනවා. අමාත්‍යංශයෙන් වගේම පළාතෙන් හොද සහයෝගයක් රජයේ නව වැඩපිළිවෙල සඳහා අවශ්‍යයි.

යාපනය අධ්‍යාපනයේ ⁣කේන්ද්‍රස්ථානයක් බව අපි පිළි ගන්නවා. ඒවගේම උතුරු පළාතට අයත් වව්නියාව,මන්නාරම කිළිනොච්චි දිස්ත්‍රික්ක තුලත් අධ්‍යාපනය සංවර්ධනය කළ යුතුයි, සෑම පාසලක්ම අපේ පාසල්, ඒ පාසල් තුළ සිටින්නේ අපේ දරුවන්, ඒ නිසා සියළු දරුවන්ට ගුණාත්මක අධ්‍යාපනයක් ලබා දෙන්න අවශ්‍යයි. ගුරුවරු ස්ථාන මාරු කරද්දි සියළු දිස්ත්‍රික්වලට සමානව ලබා දීමට කටයුතු කරන ලෙසත්, පෞද්ගලික දියුණුව මෙන්ම සාමූහික දියුණුවද අවශ්‍ය බව අවබෝධයෙන් කටයුතු කරන ලෙසත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය

මෙහිදී අදහස් දැක් වූ කථානායක ජගත් වික්‍රමරත්න,

ජනාධිපති අරමුදල ජනතාවගේ එදිනෙදා භාවිතයට ගැනෙන වචනයක් වූණේ මෙි වසරේ සිටයි. වසර 44ක කාලයක් ලංකාවෙි ක්‍රියාත්මක වුණත් එහි සැබෑ කාර්යය ඉටුවෙමින් තිබෙන්නේ 2025 ජනවාරි ජනාධිපතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් පැවති රැස්වීමෙන් අනතුරුවයි. එහිදී තීරණය කළා ජනාධිපති අරමුදලේ කටයුතු ප්‍රාදේශිය ලේකම් කාර්යාල මට්ටමින් සිදු කරන්න එය අපි 2025 පෙබරවාරි වනවිට ක්‍රියාත්මක කළා.

පසුගිය මාස 11 තුල ප්‍රාදේශිය ලේකම් කාර්යල හරහා අයදුම්පත් 4200ක් ලැබුණා. උතුරු පළාතෙන් පමණක් අයදුම්පත් 200ක් ලැබුණා. ඉස්සර ජනාධිපති අරමුදලෙන් ප්‍රතිලාභ ඉල්ලුවේ ලංකාවෙන්ම පනහක් හෝ හැටක් පමණයි.

මිලියන 4899ක් මෙවර ජනාධිපති අරමුදලෙන් අධ්‍යාපනය වෙනුවෙන් වෙන් කර තිබෙනවා, බිලියන 6112ක් රටේ ජනතාව වෙනුවෙන් මේ වසරේ වෙන් කළා.

උතුරු පළාත් ආණ්ඩුකාර රාමලිංගම් වේදනායගම්, ධිවර හා ජලජ සම්පත් අමාත්‍ය රාමලිංගම් චන්ද්‍රසේකරන්, වෙළඳ නියෝජ්‍ය අමාත්‍ය උපාලි සමරසිංහ, පාර්ලිමේන්තු මන්ත්‍රිවරුන් වන ශ්‍රි භවනේනද්‍ර රාජා, ඉලන් කුමාර්, ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අත්රේක ලේකම් රෝෂන් ගමගේ, පළාත් සභා ලේකම්තුමන්, දිස්ත්‍රික් ලේකම් තුමන් ඇතුළු රාජ්‍ය නිලධාරීන්, ශිෂ්‍යත්වලාභින්, දෙමාව්පියන් විශාල පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பிரதமரிடம் தெரிவிப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 2025 டிசம்பர் 20 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை அண்மையில் சந்தித்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயற்பட்டதற்கு திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பாராட்டு தெரிவித்தார்.

உலகின் ஏனைய நாடுகளின் அனுபவங்களுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட ஈடுபாட்டை முழுமையாகப் பயன்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், இந்த பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் அரசியல் அதிகார தரப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆற்றிய பணி சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு, குறிப்பாக மாவட்டத் தலைமை முதல் பிரதேச மட்டத்தில் கீழ் மட்ட அதிகாரிகள் வரை அனைவரின் கூட்டு முயற்சியே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பை முறையாக நிர்வகிப்பதற்கும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் யுனிசெப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட தருணத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தைப் பாதுகாக்கவும், சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதன்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிரதமர் இதன்போது விளக்கினார்.

மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களுக்கு அண்மையிலுள்ள பாடசாலைகளை மீண்டும் அதே இடங்களில் திறப்பது ஆபத்தானது என்பதால், அத்தகைய பாடசாலைகளை இனங்கண்டு, விஞ்ஞானபூர்வமான தரவுகளின் அடிப்படையில் அவற்றை மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களுக்கு மேலதிகச் சுமையை ஏற்படுத்தாத வகையில் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டிற்கு அடுத்தபடியாகப் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் பாடசாலை என்பதால், அங்கு அவர்களின் உள ஆரோக்கியம் மேம்படும் எனத் தாம் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இடமாற்றம் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல், சில பாடசாலைகளை ஒன்றிணைத்து நடத்திச் செல்லல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உத்திகள் மூலம் கற்றல் - கற்பித்தல் செயன்முறையை எளிதாக்குதல் மற்றும் விசேட போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்ற விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து நீண்டகாலத் தீர்வுகளைக் காண்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், அதற்காகச் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் பாராட்டிய யுனிசெப் பிரதிநிதிகள், அரசாங்கத்திற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், எதிர்கால நடவடிக்கைகளை இரு தரப்பினரும் இணைந்து முன்னெடுப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிகாம் (Emma Brigham), லட்சுமி சுரேஷ்குமார், நிஷாந்த சுபாஷ், யஷிங்க ஜயசிங்க ஆகியோருடன் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விப் பணிப்பாளர் தக்‌ஷிண கஸ்தூரியாராச்சி, பிரதிப் பணிப்பாளர் கசுன் குணரத்ன மற்றும் உதார திக்கும்புர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாம் உறுதியளிக்கிறோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நல்வாழ்வுக்காகவே பாடசாலைகள் திறக்கப்பட்டன. குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், இன்று டிசம்பர் 19 ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது.

அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது.

நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம்.

எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகி றோம்.

பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம்.

2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது.

குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது.

இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும்.

மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.

தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மாகாண சபைத் தேர்தல்களைக் கூடிய விரைவில் நடத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும், நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்தோடு, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் விதிகளால் தடைப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எழுப்பப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (2025 டிசம்பர் 19) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

’வளமான நாடு, அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் 194ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றைத் தயாரித்து, அதனைப் பொதுமக்களிடம் சமர்ப்பித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர், தேவையான மாற்றங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அதனை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். தற்போது புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் ஏனைய அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து அதன் அடிப்படை எண்ணக்கருப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும், நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போதே முன்னெடுக்கப்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவராமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க இயலாது. இந்த முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான குறிப்பிட்ட கால எல்லை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

மாகாண சபைத் தேர்தல்களை மிக விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 3(ஆ) பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளின்படி, ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் எல்லை நிர்ணயக் குழுவினால் தேர்தல் தொகுதிகள் மற்றும் எல்லைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும்.

மேற்படி சட்ட விதிகளின் கீழ் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாமையே மாகாண சபைத் தேர்தலை இதுவரை நடத்த முடியாமல் போனதற்கான காரணமாகும். எனவே, எல்லை நிர்ணயத்தைப் பூர்த்தி செய்து தேர்தலை நடத்துவதா? அல்லது 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து தேர்தலை நடத்துவதா? என்பது குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். எவ்வாறாயினும், இச்செயற்பாடுகளின் இறுதியில் தேர்தலை நடத்துவதற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், அரச குற்றவியல் வழக்குத் தொடரகம் ஒன்றை நிறுவுவதற்குத் தேவையான புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு, Noritake Company Limited நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் ரூபா நிதியுதவி

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக, ஜப்பானின் நோரிடேக் (Noritake Company Limited) நிறுவனம் 20 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கென்ஜி ஒபாரா (Kenji Obara) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் 2025 டிசம்பர் 18ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்நிகழ்வில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான சுஜாதா எகொடகெதர, உதவிப் பொது முகாமையாளர் கப்டன் எம்.எம். அதுல ரோஹான் சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு