பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள் பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கங்காராமய விகாரையில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த இடமான குஜராத் பிரதேசத்தில் 60களில் கண்டெடுக்கப்பட்டதும், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படாததுமான புத்த பெருமானின் இந்த உடல்சார் புனிதச் சின்னங்களை நாட்டு மக்கள் வழிபடுவதற்காக இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி அவர்களின் பங்களிப்புடன் கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஜனவரி 31ஆம் திகதி இது குறித்த விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பெறுபேறாக, இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் கொண்டுவரப்படும் இப்புனிதச் சின்னங்கள், பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்குக் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் காட்சிப்படுத்தப்படும்.

அதிகளவிலான பக்தர்கள் வழிபடுவதற்காக புனிதச் சின்னங்கள் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வு 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் அதேவேளை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட முன்னுரிமை வரிசை முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தச் சமய நிகழ்விற்கு வருகை தரும் பக்தர்களுக்காகப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை முறைப்படுத்துவதற்கு அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து திட்டங்களை வகுத்துள்ளன. இதற்கமைய புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் இணைந்து விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை முன்னெடுப்பதோடு, பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குவிதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளனர்.

வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்காகத் ’அன்னதானம்’ மற்றும் உபசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாவட்ட வர்த்தகச் சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தி, பக்தர்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றி இந்த அரிய புனிதச் சின்னங்களை வழிபடுவதற்கான அனைத்து ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த விசேட கலந்துரையாடலில் கங்காராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

​“දුප්පත්කම නිසා කිසිදු දරුවෙකුට වෘත්තීය හෝ උසස් අධ්‍යාපන අයිතිය අහිමි නොවිය යුතුයි” - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

ආර්ථික අපහසුතා හේතුවෙන් රටේ කිසිදු දරුවෙකුට වෘත්තීය අධ්‍යාපනය හෝ වෙනත් කිසිදු අධ්‍යාපන අවස්ථාවක් අහිමි නොවන ආකාරයෙන් රජයේ සියලු උපාය මාර්ගික සැලසුම් සකස් කළ යුතු බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය ප්‍රකාශ කළාය.

​අග්‍රාමාත්‍යවරිය මේ බව අවධාරණය කළේ 2026 ජනවාරි 29 සහ 30 යන දෙදින තුළ ග්‍රෑන්ඩ් මොනාක් පරිශ්‍රයේදී පැවැති, වෘත්තීය අධ්‍යාපන අංශයට අනුබද්ධ ආයතනවල අයවැය හා උපාය මාර්ගික සැලසුම්කරණය පිළිබඳ වැඩමුළුව අමතමිනි.

වෘත්තීය අධ්‍යාපන අංශයට අනුබද්ධ විශ්වවිද්‍යාල දෙකක් ඇතුළු ආයතන නවයක ප්‍රධානීන් සහ මාණ්ඩලික නිලධාරීන්ගේ සහභාගිත්වයෙන් මෙම වැඩමුළුව සංවිධානය කර තිබුණි.

​ජාතික ආර්ථික සංවර්ධන සැලැස්මට අනුකූලව ප්‍රධාන ආයතනවල සංවර්ධන සැලසුම් සහ ඒවාට අනුයුක්ත සෙසු ආයතනවල සැලසුම් පෙළගැස්වීම අත්‍යවශ්‍ය කරුණක් බව අග්‍රාමාත්‍යවරිය මෙහිදී පෙන්වා දුන්නාය.

අධ්‍යාපන ආයතන මඟින් වෘත්තීය දැනුම සහිත පුද්ගලයින් බිහි කරනවා සේම, ඔවුන් තුළ මානව දයාව, සහකම්පනය, අන්‍යයන් කෙරෙහි දක්වන කරුණාව සහ සදාචාරාත්මක වටිනාකම් වර්ධනය කිරීමට හැකි වන පරිදි ප්‍රතිසංස්කරණ සිදුවිය යුතු බව අග්‍රාමාත්‍යවරිය පැවසුවාය. මෙහි අරමුණ ​මානව දයාවෙන් පිරිපුන් වෘත්තිකයෙකු නිර්මාණය කිරීම බවත් සඳහන් කළාය.

විශේෂයෙන්ම, ආර්ථික දුෂ්කරතා සහිත පවුල්වල දරුවන්ට වෘත්තීය අධ්‍යාපනයට පිවිස තම අනාගතය ජය ගැනීමට ඇති මාවත් තවදුරටත් පුළුල් කිරීම රජයේ වගකීමක් බව ද මෙහිදී සඳහන් කළාය.

​AI විප්ලවය සහ වෘත්තීය අධ්‍යාපනයේ අනාගතය පිළිබඳවද මෙහිදී අග්‍රාමාත්‍යවරියගේ අවධානය යොමු විය. කෘතිම බුද්ධිය (AI) නිසා ලෝකයේ රැකියා වෙළඳපොළ සහ වෘත්තීය ක්ෂේත්‍රයන්හි සිදුවන වෙනස්කම් පිළිබඳව තවමත් ලෝක මට්ටමින් නිසි අවබෝධයක් ගොඩනැගී නොමැති බවත්, අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ හරහා වෘත්තීය අධ්‍යාපන ධාරාව සාමාන්‍ය අධ්‍යාපන ක්‍රියාවලියට ඒකාබද්ධ කිරීම මෙකල අත්‍යවශ්‍ය බවත් අග්‍රාමාත්‍යවරිය අවධාරණය කළාය.

​"AI තාක්ෂණය හරහා සිදුවන විප්ලවය බොහෝ විට ලාභය මුල් කරගත් එකක්. අතීත කාර්මික විප්ලවයන්හිදී අප සූරාකෑමට ලක් වූවාක් මෙන්, මෙම විප්ලවය තුළ අප අතරමං නොවීමට වගබලා ගත යුතුයි. අප හුදු දත්ත සැපයුම් මධ්‍යස්ථානයක් (Data Center) පමණක් නොවිය යුතුයි," යනුවෙන් අග්‍රාමාත්‍යවරිය වැඩිදුරටත් පැවසුවාය.

​කෙසේ වෙතත්, ඉගැන්වීම් කටයුතු මාර්ගගත (Online) ක්‍රමයට සිදු කළ හැකි වුවද, දරුවන් රැකබලා ගැනීම සහ සාත්තු සේවය වැනි මානුෂීය බැඳීම් සහිත වෘත්තීන් සඳහා තාක්ෂණයෙන් එල්ල වන බලපෑම අවම බව පෙන්වා දුන් අග්‍රාමාත්‍යවරිය, මෘදු කුසලතා (Soft Skills) සංවර්ධනය සහ මානවවාදී ප්‍රවේශයක වැදගත්කම පැහැදිලි කළාය.

​නම්‍යශීලී අධ්‍යාපන අවස්ථා සහ ගුණාත්මකභාවය

සිසුවෙකුට වෘත්තීය අධ්‍යාපනය ඔස්සේ ආචාර්ය උපාධිය දක්වා අඛණ්ඩව ගමන් කිරීමටත්, රැකියාවක නිරත වෙමින් නැවත අධ්‍යාපනයට පිවිසීමටත් (Lateral Entry) හැකි නම්‍යශීලී අවස්ථා නිර්මාණය විය යුතුය. එලෙස පද්ධතිය නම්‍යශීලී වන අතරම, අධ්‍යාපනයේ ගුණාත්මකභාවය සහ ප්‍රමිතිය ඉහළින්ම පවත්වා ගැනීම විශ්වසනීයත්වය තහවුරු කිරීමට අත්‍යවශ්‍ය බව ද මෙහිදී සාකච්ඡා විය.

​මෙම අවස්ථාවට අධ්‍යාපන හා උසස් අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය වෛද්‍ය මධුර සෙනෙවිරත්න, වෘත්තීය අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය නලින් හේවගේ, අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ලේකම් නාලක කළුවැව, වෘත්තීය තාක්ෂණ විශ්වවිද්‍යාලයේ උපකුලපති මහාචාර්ය ප්‍රසන්න ප්‍රේමදාස, සාගර විශ්වවිද්‍යාලයේ උපකුලපති මහාචාර්ය නලින් රත්නායක, NIBM ආයතනයේ සභාපති ආචාර්ය ජී. තන්තිරිගම සහ අධ්‍යක්ෂ ජනරාල් ඩී.එම්.ඒ. කුලසූරිය යන මහත්වරුන් ඇතුළු නිලධාරීන් පිරිසක් සහභාගී වූහ.

​අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு காத்திரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நமது நாட்டைப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாக்க வேண்டுமாயின், தரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பிரதான கருவி கல்வியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வித் துறையில் ஒரு பரிவர்த்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பெரும் அர்ப்பணிப்புடனும் முயற்சியுடனும் செயற்பட்டு வருவதாகவும், அந்தப் பயணத்தில் எத்தகைய தடைகள் ஏற்பட்ட போதிலும், உரிய இலக்கும் நோக்கமும் இருப்பதால் அவை அனைத்தையும் வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்வோம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

2023/2024 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான கல்விச் கூட்டுறவுச் சங்க (EDCS) உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக இன்று (31) அலரி மாளிகையில் நடைபெற்ற "EDCS சிசு நெண பிரணாம" கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், வரையறுக்கப்பட்ட கல்விக் கூட்டுறவுச் சிக்கன சங்கத்தினால் (EDCS) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், வெறும் கல்வி உதவித்தொகை வழங்குவது மாத்திரமன்றி, நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் ஒரு உன்னதமான சந்தர்ப்பமாகும் எனத் தெரிவித்தார்.

1930ஆம் ஆண்டில் 58 உறுப்பினர்களுடனும் ஒரு ரூபாய் அங்கத்துவக் கட்டணத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம், இன்று சுமார் இரண்டு இலட்சத்து பதினைந்தாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாக வளர்ச்சி பெற்றிருப்பது ஒரு விசேட வெற்றியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகம் வேகமாக மாற்றமடைந்து வரும் விதம் மற்றும் பொருளாதார, சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மனித வள மேம்பாட்டின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைக் கல்வியிலிருந்தே இன்றைய உலகிற்குப் பொருத்தமான வகையில் கல்வி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களுக்குப் பிரவேசிக்கும் மாணவர்கள் இந்த மாற்றத்தின் முன்னோடிகளாகவும் பங்குதாரர்களாகவும் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஆரம்பக் கல்வியில் இணையும் சுமார் மூன்று இலட்சம் மாணவர்களில் 40,000 பேர் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர் என்பதால், அந்த அரிய வாய்ப்பை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துமாறு பிரதமர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும் தொழில் பிரதி அமைச்சருமான மகிந்த ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஊழலற்ற செயற்பாடுகள் காரணமாக இதற்கு முன்னர் 1,200 மில்லியன் ரூபாவாக இருந்த சங்கத்தின் நிதி ஸ்திரத்தன்மை, ஒன்பது மாதக் குறுகிய காலத்திற்குள் 1,700 மில்லியன் ரூபா வரை வளர்ச்சி அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுத் திட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 2,292 பிள்ளைகளுக்காக 13.7 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

1984ஆம் ஆண்டு 15 மாணவர்களுடனும் 3,500 ரூபாவுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 41 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 75,000 ரூபா வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது ஆசிரியர் சமூகத்தின் கூட்டு வலிமையைப் பிரதிபலிக்கின்றது.

இதன்போது, அடையாளச் சின்னமாக பிரதமரினால் சில மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வில் கல்விச் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் லால் குமார, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

1ஆம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சகலவித நற்பண்புகளும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும் மிக்க எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதற்கான ஆரம்ப அடித்தளமே இன்றைய தினம் இடப்படுகின்றது – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சகலவித நற்பண்புகளும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும் மிக்க எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதற்கான ஆரம்ப அடித்தளமே இன்றைய தினம் இடப்படுகின்றது. புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் இப்பண்புகள் வளர்த்தெடுக்கப்படும் என்றும், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை வழங்குவதற்கான பாரிய பொறுப்பை அரசாங்கம் என்ற வகையில் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அத்துருகிரிய, ஜயவர்தனபுர குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தில் இன்று (29) நடைபெற்ற, 2026ஆம் ஆண்டிற்காக முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தும் தேசிய நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மாணவ மாணவிகளுடன் இணைந்துகொண்ட பிரதமர், பாடசாலை வளாகத்தில் கருங்காலி கன்று ஒன்றினை நட்டு வைத்ததோடு, புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட முதலாம் தர வகுப்பறைகளைக் கண்காணித்த பின்னர் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணையாக, நாடு தழுவிய ரீதியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதைக் குறிக்கும் வகையில், அத்துருகிரிய ஜயவர்தனபுர குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவர் பதிவு இடாப்பில் முதலாம் தர மாணவர்களின் பெயர்களைப் பிரதமர் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பாடசாலைச் சீருடைகள் மற்றும் பாடவிதானம் சார்ந்த செயற்பாட்டுப் புத்தகங்களையும் வழங்கிவைத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

"நாட்டின் பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்வதைக் காணும் வகையில், புத்தகப் பையின் சுமையைக் குறைத்து, அழுத்தங்களற்ற கற்றல் சூழலை உருவாக்குவது புதிய கல்வி மறுசீரமைப்பின் மிக முக்கியமான அம்சமாகும். மனதிற்கு இனிய பாடசாலைச் சூழலை உருவாக்குவதற்கான ’கனவுப் பாடசாலை’ திட்டத்தை யதார்த்தமாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதேபோன்று, 2026ஆம் ஆண்டில் ஆறாம் தர மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்த முடியாமல் போன கல்வி மறுசீரமைப்புகளை, எதிர்காலத்தில் அந்தப் பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்களையும் நாம் வகுத்து வருகின்றோம்.

புதிய மறுசீரமைப்புகளின் ஊடாகத் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய பாடத்துறைகளுக்கான அடித்தளத்தை அமைப்பதும், விஞ்ஞானக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சூழல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதும், ஆங்கிலம் மற்றும் இரண்டாம் மொழிக் கற்பித்தலுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் ஆரம்பக் கல்வியின் அடிப்படையாக அமைந்துள்ளன.

பல தசாப்தங்களாக நாம் புத்தக அறிவை மாத்திரம் பெற்றுக்கொடுக்கும், போட்டித்தன்மை மிக்க கல்வி முறைமைக்கே பழகியிருக்கின்றோம். அத்தகைய முறைமையினால் பிள்ளைகள் கல்வியைவிட்டு விலகும் போக்கு அதிகரித்து வருகின்றது. எனவே, ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியைப் பாதுகாக்கும் எமது அரசாங்கத்தின் பொறுப்பிலிருந்து எம்மால் ஒருபோதும் விலகிவிட முடியாது.

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமையொன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். இந்த மறுசீரமைப்பை ஒரு ’பரிவர்த்தனை ரீதியான மாற்றம்’ என நாம் அழைப்பதற்குக் காரணம், இது பாடவிதானத்தை மாத்திரம் மாற்றாமல் ஒட்டுமொத்த கல்வி முறைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதனாலேயே ஆகும்.

இந்தப் பரிவர்த்தனை செயல்முறையின் போது பிள்ளைகளின் மனச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாகச் சமநிலையான ஆளுமையைக் கொண்ட எதிர்காலப் பிரஜையை உலகிற்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

எழுத்துகளை மாத்திரமன்றி வாழ்க்கையைப் பற்றியும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்தக் கல்வி மறுசீரமைப்பினூடாகத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

பெற்றோரின் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிள்ளையின் கல்வி பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற வகையில் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதை மிக உறுதியாக உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்,எனக் கூறினார்

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன, கடுவலை நகர முதல்வர் ரஞ்சன் ஜயலால், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, அத்துருகிரிய குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் நதீகா தர்மதாச, கல்விச் செயலாளர்கள், கல்வித்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வாழ்த்துச் செய்தி

அன்புக்குரிய பிள்ளைகளே, பெற்றோர்களே,

பாடசாலை செல்லும் முதல் நாள் எமது அன்புக்குரிய பிள்ளைகளின் வாழ்க்கையில் பசுமையானதொரு நினைவாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த நோக்கத்தை நனவாக்கும் வகையில், பாடசாலைப் பருவத்தை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் சுதந்திரமாகக் கழிப்பதற்கு ஏற்றவாறு பாடசாலைச் சூழலையும், கற்றல் - கற்பித்தல் செயல்முறையையும் மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு நாம் பெரும் முயற்சி எடுத்து வருகின்றோம்.

நீங்கள் சுமந்து வரும் புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நாம் முயற்சிப்பது, நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன்களில் எவ்விதக் குறைபாடும் ஏற்படாத வகையில், எதிர்கால உலகிற்குப் பொருத்தமானவர்களாக உங்களை ஒரு முழுமையான பிரஜையாக உருவாக்குவதற்காகவே ஆகும்.

அன்புக்குரிய பெற்றோர்களே, ஒரு வளமான நாட்டில் உங்கள் பிள்ளைக்கு ஒரு வளமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி, அவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலையைக் கொண்டு தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கமைய, ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். எமது இந்த நேர்மையான முயற்சியை வெற்றிகொள்வதற்கு உங்கள் அனைவரதும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை என நாம் கருதுகிறோம்.

நெகிழ்வுத்தன்மை மிக்க சிநேகபூர்வமான அணுகுமுறையுடன் அந்த நேர்மறையான வழிகாட்டல்களையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, ஓடி ஆடி விளையாடியவாறு வளரும் உங்கள் பிள்ளைகளின் அனுபவங்களைச் செயல்திறன் மிக்க, அர்த்தமுள்ளவையாக மாற்றி, அவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம்.

அன்புக்குரிய பிள்ளைகளே, தாயின் மடியிலிருந்து விலகி, ஆசிரியர் எனும் பெற்றோரின் அரவணைப்புக்குள் வரும் உங்கள் அனைவரதும் எதிர்காலம் எல்லா விதத்திலும் வெற்றிபெற வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.

கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.
2026 ஜனவரி 29 ஆம் திகதி

The National Strategic Action Plan to monitor and combat human trafficking (2026-2030) was officially launched.

The Prime Minister Dr. Harini Amarasuriya participated in the official launch of the National Strategic Action Plan to monitor and combat human trafficking (2026-2030) held on 28th of January at the Cinnamon Life Hotel, Colombo. The event was jointly organized by the Ministry of Defence, National Anti Human Trafficking Task Force ( NAHTTF), International Organization for Migration (IOM).

This five-year Action Plan was unveiled under the leadership of the Ministry of Defence, in its capacity as Chair of the NAHTTF and with the technical support from the International Organization for Migration (IOM). The National Strategic Action Plan 2026-2030 establishes a unified national framework to prevent human trafficking, protect and assist victims, strengthen law enforcement responses, and enhance accountability.

Addressing the event, the Prime Minister reaffirmed the Government’s commitment to strengthening national efforts to prevent and address human trafficking and stated that the Action Plan must transcend its symbolic launch into concrete, coordinated, and sustained implementation.

The Prime Minister also noted that the launch of the National Strategic Action Plan is timely, as it operationalizes the four internationally recognized pillars of the anti-trafficking framework namely prevention, protection, prosecution, and partnership.

The Prime Minister further stated,

Caring for trafficking survivors in Sri Lanka requires a holistic, gender-sensitive, and survivor-centered approach that addresses both immediate protection and long-term recovery. This includes safe shelter, medical care, and trauma-informed psychological support, with particular attention to women and girls who experience more severe and gendered forms of violence, alongside legal assistance, economic empowerment, and skills development to prevent re-trafficking.

Human trafficking is a structural and social challenge that requires sustained, multi-sectoral action. Ministries and government agencies must embed anti-trafficking priorities into their core strategies and day-to-day operations, ensuring institutional integration and professional accountability.

The event was also attended by Parinda Ranasinghe Jnr, PC, Attorney General of the Democratic Socialist Republic of Sri Lanka, the Secretary to the Ministry of Defence and Chair of the NAHTTF, Air Vice Marshal Sampath Thuyacontha; and Kristin Parco, IOM Chief of Mission in Sri Lanka and Maldives. Members of the NAHTTF representing 23 key government entities, along with representatives of the diplomatic community, United Nations entities and Civil Society Organizations (CSOs).

Prime Minister’s Media Division