பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

அறிவுசார் சொத்துரிமைக்கான சர்வதேச விருதைப் பெற்ற கலாநிதி நதீஷா சந்திரசேன பிரதமரைச் சந்தித்தார்

அறிவுசார் சொத்துரிமை, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (WIPO) நடத்தப்பட்ட விருது விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான WIPO சர்வதேச விருதை வென்ற கலாநிதி நதீஷா சந்திரசேன, ஜூலை 21 அன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளால் அடைபடும் வடிகால்களில் ஏற்படும் தடைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, கலாநிதி நதீஷாவினால் உருவாக்கப்பட்ட ’ஸ்மார்ட் வடிகால் அமைப்புக்கான’ (Smart Drainage System) எண்ணக்கருவிற்கே சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற WIPO விருது விழாவில் 95 நாடுகளைச் சேர்ந்த 780 நிறுவனங்களையும் தாண்டி வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இச்சந்திப்பின்போது பிரதமர், கலாநிதி நதீஷா சந்திரசேனவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹர நிறைவடைந்தது

புத்தல யுதகனாவ ராஜமகா விகாரையின் 2025 ஆம் ஆண்டுக்கான எசல மகா பெரஹர நேற்று (19) நிறைவடைந்தது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இறுதி ரந்தோலி ஊர்வலத்தின் வீதி வலா ஆரம்பமானது.புனிதச் சின்னம் அடங்கிய பேழையை ’வாசனா’ யானையின் மீது வைத்ததன் பின்னர், மொனராகலை மாவட்ட செயலாளர் திரு. பசன் ரத்நாயக்க, யுதகனாவ எசல மகா பெரஹரா இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றதற்கான சாசனத்தை ஊவா வெல்லஸ்ஸ இரு பிரதேசங்களுக்குமான பிரதம சங்க நாயக்கரும், யுதகனாவ ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமாகிய கல்டெம்வத்தே நந்தரதன நாயக்க தேரரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,ஹரினி அமரசூரிய,

யுதகனாவ ராஜ மகா விகாரையானது, தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலமாகும். ஊவா வெல்லஸ்ஸயின் பண்டைய பெருமையையும் கலாச்சார பாரம்பரியங்களையும் பாதுகாக்க இந்த வருடாந்த பெரஹர விழா மிகவும் முக்கியமானதாக அமைவதோடு உலக வாழ் மக்கள் மத்தியில்இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைகின்றது.

ராஜாவலிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து மூல வரலாற்றின் படி,"மஹாநாக, காவந்திஸ்ஸ, துட்டகைமுனு, சத்தாதிஸ்ஸ, மகா பராக்கிரமபாகு , மகா விஜயபாகு, நிஸ்ஸங்கமல்ல, ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க போன்ற மன்னர்கள் இப்புனிதத் தலத்தின் வளர்ச்சிக்காக தமது பங்களிப்பினை பெற்று கொடுத்திருக்கின்றனர்.

"பண்டைய காலத்தில் நாட்டை ஒன்றிணைக்கும் கடினமான பணியில் யுதகனாவ புனிதத் தலம் பெற்றுக் கொடுத்திருக்கும் பாரிய பலமும்,ஆசீர்வாதமும் சிறப்பு மிக்கதாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க மகா தாதுகோபுரமானது அதனை உலகிற்கு பறைசாற்றி நிற்கின்றது. இதனாலேயே யுதகனாவ வருடாந்த எசல பெரஹரா பலரின் கவனத்தையும் ஈர்க்கின்றது.

"இறுதியாக, வரலாற்று சிறப்புமிக்க யுத்தாகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த எசல பெரஹராவை உடரட்ட,பஹத்தரட்ட, சப்ரகமுவ, நடனங்கள் மற்றும் யானைகள் அடங்கிய கலாச்சார அம்சங்களுடன் நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊவா வெல்லஸ்ஸ இரு பிரதேசங்களினதும் பிரதான சங்க நாயக்கரும், யுதகனாவ ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமாகிய கல்டெம்வத்தே நந்தரதன நாயக்க தேரர் அவர்களுக்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.

அஸ்கிரி விகாரை பிரிவின் ரத்னபுர மாவட்ட சங்க நாயக்கரான அதி வணக்கத்துக்குரிய வத்துரக்கும்புரே தம்மரதன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்க சங்கத்தினரும், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஒரு வகுப்பறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25க்கும் 30க்கும் இடையில் கொண்டுவருவது ஒரு இலக்காகும். – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நோக்குடன் காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் ஜூலை 19ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது:

"கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் பெற்றுத்தரும் ஆதரவுக்கு நான் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டு, திட்டமிடப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிபுணர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றே, இந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

புதியக் கல்வி மறுசீரமைப்பில் பாடத்திட்டத்தினை மட்டுமின்றி, ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்துதல், புதிய மறுசீரமைப்புக்கு ஏற்ப கல்வி நிர்வாக அமைப்பை மறு சீரமைத்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான,தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது எமது தனிப்பட்ட தேவைக்காகச் செய்யும் ஒன்றல்ல, நாட்டின் தேவையை உணர்ந்து, நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பாகும் என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும்.

நேர்மையான எண்ணத்துடன், சமூகத்தில் இது குறித்த ஒரு புரிந்துணர்வை விவாதத்தை ஏற்படுத்தும் ஒரு தரப்பினர் அது போலவே, சரியான புரிதலை பெறாது விமர்சிக்கும் தரப்பினரும் இருக்கின்றனர். இன்னும் சிலர் அரசியல் இலாபங்களுக்காகவும் விமர்சிக்கின்றனர். இந்த மறுசீரமைப்பை மேற்கொள்வது ஒரு சவாலாகும். அது எளிதானதல்ல என்பதை நாம் அறிவோம். இருப்பினும் இதனை செய்யாதிருக்க இயலாது. இவை அனைத்தையும் நிவர்த்திச் செய்யவே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள்

புதிய கல்வி மறுசீரமைப்பிற்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் 16 வருடங்களாக மாற்றப்படவில்லை, அவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆசிரியர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த உயர்கல்வி பிரதி அமைச்சர் திரு. நலின் ஹேவாகே,

"புதிய கல்வி மறுசீரமைப்புடன் தொழில்சார் கல்வி நிறுவனங்களை முன்னோக்கிக் கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். இதன் மூலம், தேர்ச்சியடையாத மாணவர்கள் தொழில்சார் கல்விக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்களின் திறமை மற்றும் ஆற்றலின் அடிப்படையில் பாடசாலைக் கல்வியின் ஊடாகவே தொழில்சார் கல்வியை கௌரவமான முறையில் கற்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்" என தெரிவித்தார்.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர, நிஹால் கலப்பத்தி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அலஹகோன், கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம், தென் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தென் மாகாண கல்வி அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Economics or entrepreneurship must go beyond monetary values and be tied to humanity — Minister of Education, Higher Education, and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya

The Minister of Education, Higher Education, and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya stated that despite the fact that societal tendencies give priority to the monetary value, economics and entrepreneurship should be disciplines rooted in humanity, and the concept of a “care economy” serves as a good example of this approach.

The Prime Minister made these remarks while participating in a program held today (18) at the Ministry of Education to inform officials about the development of modules for financial literacy and entrepreneurship, which are included as subjects under the new educational reforms.

Chairman of the Securities and Exchange Commission of Sri Lanka, Senior Professor Harendra Dissabandara, shared his insights on the current state of financial literacy in Sri Lanka and the way forward and the Chairman of the Colombo Stock Exchange, Mr. Dimuthu Abeysekara, expressed his views on the financial literacy activities in the country.

Further addressing the event, Minister of Education, Higher Education, and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya stated:

We clearly come to see that your support and bless have forwarded for the new education reforms we are trying to implement. As the Ministry of Education, it brings forward a great strength and these reforms are more than just curriculum changes.

What we need is a developed society, not just economically, but spiritually and ethically as well. Wealth is not just about money.

In that sense, the transformation we are trying to bring about through education is deeply significant.

The theft, corruption, and fraud we see in today’s society are not committed by people lacking subject knowledge but by those who know the subject very well. That is why it has been so hard to address. Therefore, we must learn financial literacy and entrepreneurship together with human values, to develop them as ethical disciplines. What we need are entrepreneurs who love the environment, society, and have compassion for one another.

The Prime Minister further emphasized the importance of considering what state society would fall into if women were only engaged in financially valuable work.

Addressing this event the Deputy Minister of Labour and Economic Development, Professor Anil Jayantha Fernando, added:

Incorporating financial literacy into school education is extremely important. Many people fall victim to pyramid-like financial scams due to a lack of proper understanding. Therefore, the public must have a strong grasp of financial literacy. It is often those with high financial literacy who carry out financial fraud. Along with subject knowledge, we need to empower society with values to manage this situation

The event was attended by the Secretary to the Ministry of Education, Mr. Nalaka Kaluwawa; officials from the Ministry of Finance; the Securities and Exchange Commission of Sri Lanka; the Colombo Stock Exchange; and other institutional representatives.

Prime Minister’s Media Division

உண்மையான தகவல்களுடன் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்த உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பு, ஜூலை 17, 2025 – சமூகத்திற்கு உண்மையான தகவல்களைக் கொண்டு செல்லும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு, இன்று (ஜூலை 17) மேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அனைவரும் பெரும் அக்கறை கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. கல்விச் சீர்திருத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே பலரும் பல்வேறு கருத்துகள், கருத்துரைகள் மற்றும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க நிலைமையே. இதன் மூலமே எம்மால் சிறந்த நிலையை அடைய முடியும்," என்றார்.

"நாம் அரசாங்கம் என்ற வகையில், கொள்கைகளை உருவாக்கும் இடத்திலிருந்தே கல்வி மீது பெரும் கவனம் செலுத்துவோம் என வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். எமது கொள்கைப் பிரகடனத்திலும், எமது அரசியல் மேடைகளிலும் நாம் இதைக் கூறியுள்ளோம். இது இன்று நேற்று ஆரம்பித்த விடயமல்ல. நாம் அனைவரும் இந்த நாட்டின் அபிவிருத்தி இலக்குகளுக்காகவே குரல் கொடுத்தோம். ஆயினும், அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மாத்திரம் இந்த சமூகம் எதிர்பார்க்கவில்லை. கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"ஆகையால், உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் நாம் எதிர்பார்ப்பது, குறுகிய அறிவை அளிக்கும் புத்தகம், பாடம், பாடத்திட்டம் என்பவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தனிநபர் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட நபர்களை உருவாக்குவதல்ல. நாம் எதனை உருவாக்க முயற்சிக்கிறோம்? பரந்த மனமுடைய, சுதந்திர சிந்தனையுடைய, உலகத்தை பரந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே எமது இலக்காகும்."

"பாட வகுப்பை மாத்திரம் இலக்காகக் கொண்டதல்ல இந்த சீர்திருத்தம். இது கட்டமைப்பு மாற்றம் வரை ஐந்து தூண்கள் மீது நிற்கக்கூடிய வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி எதையும் அறியாது ஜனரஞ்சகமான முடிவுகளை எடுத்ததன் விளைவாகவே இன்று கல்வி இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது," என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

புதிய சீர்திருத்தத்தால் ஏற்படும் முதன்மை மாற்றம், மாணவர்கள் வேலை உலகில் நுழையக்கூடிய வகையில் அவர்களின் திறன்களை வளர்ப்பதாகும். "நாம் பத்தாம் வகுப்பிலிருந்தே அதனை அறிமுகப்படுத்துகிறோம். சிலர் இந்தத் திருத்தத்தைத் தவறான இடத்தில் பிடித்துக் கொண்டு பல்வேறு அபாண்டக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள், பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். சரியான ஆய்வுகளைச் செய்து இதுபற்றிய விமர்சனங்களை செய்யவும், கருத்துகளை முன்வைக்கவும், உரையாடல்களை உருவாக்குவதற்கும், நாம் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்," என்று அவர் வலியுறுத்தினார்.

கல்வித்துறை சார்ந்த அனைவரும் புதிய சீர்திருத்தத்தைப் புரிந்துகொண்டு சரியான விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், "நம் நாட்டின் குழந்தைகளுக்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள். பல பிரிவுகளாகப் பிரிந்து இதனைச் சாதிக்க இயலாது. நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்," என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளின் நலனுக்காக புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவருக்கும் இடையிலான உரையாடல் உருவாகுவது அவசியமாகும் என்றும் பிரதமர் கலாநிதி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் கலாநிதி மதுர சேனேவிரத்ன, தொழில்நுட்பக் கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணாரச்சி, சஞ்சீவ ரணசிங்க, ருவன் மாபலகம, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேல் மாகாண பிரதமச் செயலாளர் பிரதீப் புஷ்பகுமார, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம், மேல் மாகாண கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு, அழகியல் மற்றும் தொழில்சார் பாடங்கள் கட்டாயம்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல் மாகாண கல்வித் துறை சார்ந்த உத்தியோகத்தர்களிடையே புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (ஜூலை 17) மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் அழகியல், வரலாறு ஆகிய பாடங்களோடு தொழில்சார் பாடமும் கட்டாயமாகக் கற்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார். எனினும், இந்த தேசிய வேலைத்திட்டம் குறித்த சரியான ஆய்வை மேற்கொள்ளாத சிலர், வரலாறு மற்றும் அழகியல் கல்வி நீக்கப்பட்டுவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேற்கண்ட பாடங்கள் தொடர்பாகப் பாட நிபுணர்களுடன் பல நாட்கள் கலந்துரையாடி, அனைத்து மாணவர்களிடமும் வரலாறு குறித்த அறிவையும், மனிதநேயம் குறித்த குணாதிசயங்களையும் வளர்க்க உதவும் அழகியல் கல்வியைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையிலேயே இந்த கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் விளக்கமளித்தார்.

"நாம் அரசியல் செய்வோம், ஆனால் கல்வியையும் குழந்தைகளையும் அதன் பால் ஈர்க்காமல் இருப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் இந்தப் பாடங்களை எவ்வாறு கற்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறியிருப்பதாகவும், தனது துறைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாத தரமான சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் புரிந்துகொண்டே இந்தச் சீர்திருத்தத்தைச் செய்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆகவே, புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்துகொண்ட அனைவரும் உண்மை நிலவரத்தைச் சமூகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனேவிரத்ன, தொழில்சார் கல்வி இணை அமைச்சர் நலின் ஹேவகே, தொழிலாளர் இணை அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணஆரச்சி, சஞ்சீவ ரணசிங்ஹ, ருவன் மாபலகம, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார் ஆகியோரும், தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம், மேல் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு