பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

தொழில்நுட்பப் பயன்பாட்டின் போது சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் திட்டம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கல்விச் சீர்திருத்த உரையாடலுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்!

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

6ஆம் தர ஆங்கில மொடியூலில் (Module) ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகா நாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தும் போதே, இன்று (08) கண்டியில் வைத்து பிரதமர் இதனைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மொடியூல்களினதும் அச்சுப் பிரதிகள் மகா நாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.

இன்று காலை கண்டி மல்வத்து விகாரைக்குச் சென்ற பிரதமர், மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்து, 6ஆம் தர ஆங்கில மொடியூலின் முதலாம் பதிப்பில் ஏற்பட்டுள்ள பிழை குறித்து விளக்கமளித்தார்.

அதன்போது, கல்வி என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம் எனவும், இவ்வாறான விடயங்களில் அதிக கரிசனையுடனும் சரியான மேற்பார்வையுடனும் செயற்பட வேண்டும் என்றும், முறையான விசாரணையை நடத்தி கல்விச் சீர்திருத்தப் பணிகளை முறையாக முன்னெடுத்துச் செல்லுமாறு மகா நாயக்க தேரர் ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற பிரதமர், அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து, ஆங்கில மொடியூலில் உள்ள சிக்கல் குறித்து விளக்கமளித்தார்.

கல்விச் சீர்திருத்தம் என்பது காலத்தின் தேவை என்றும், அது பற்றி முறையான மேற்பார்வையுடனும் மிகுந்த கவனத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த மகா நாயக்க தேரர், இலங்கையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் விதத்திலிருந்து அது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டார்.

மகா நாயக்க தேரர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இந்தச் சிக்கல் குறித்து ஆராய நாம் ஒரு குழுவை நியமித்தோம். பின்னர் தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரையுடன் அந்தப் பாடத்தை நீக்க நடவடிக்கை எடுத்ததோடு, சம்பந்தப்பட்ட மொடியூலின் அனைத்து அச்சுப் பிரதிகளையும் முத்திரையிட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆகையினால், எந்தவொரு மொடியூலும் பாடசாலை மாணவர்களின் கைகளுக்குச் செல்லவில்லை. இச்சம்பவம் குறித்து அமைச்சினால் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்பு குறித்த கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்து வருகிறோம், எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

எதிர்க்கட்சியினர் இந்தத் தேசியப் பணியையும் தமது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும், சமூகத்தில் பலரும் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்துத் தவறுகளைத் திருத்தும் நோக்கில் நேர்மறையாகவே கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏற்பட்டுள்ள தவறுகளை அடையாளம் கண்டு, அவற்றைத் திருத்தி கல்விச் சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகையினால், எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் கல்விச் சீர்திருத்தம் பற்றிய உரையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவோம், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், அஸ்கிரி பீடத்தின் பிரதிச் செயலாளர் வணக்கத்திற்குரிய முருத்தேனியே தம்மரக்கித்த தேரர், மகா விகாரைத் தரப்பின் பிரதிச் செயலாளர் மஹவெல ரதனபால தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களான துஷாரி ஜயசிங்க, தனுர திஸாநாயக்க, கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் டி.டி. விமலவீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

We are ready to discuss the Education Reform Concept Paper, but unnecessary updates on websites should be avoided. - Prime Minister Dr. Harini Amarasuriya

Steps will be taken to remove the controversial lesson in the Grade 6 English module

These modules have not been distributed to students

Prime Minister Dr. Harini Amarasuriya stated that they are open to engage in discussions on the Education Reform Concept Paper emphasizing that such dialogue should not be used to unnecessarily promote websites. She further noted that approval has been granted by the National Institute of Education (NIE) to remove the controversial lesson included in the Grade 6 English module.

The Prime Minister made these remarks while responding to a question raised by Opposition Leader Sajith Premadasa in Parliament today (07th of January).

Addressing further, Prime Minister Dr. Harini Amarasuriya stated:

The concept paper was taken up for discussion at the Education Advisory Council. Action has been taken to distribute the concept paper to all Members of Parliament and uploaded to the website. It was discussed in Parliament. Members were invited to participate in these discussions, and several MPs did take part. We remain open to holding further discussions. We are ready to further develop or deliberate on the concept paper, and we have no objection in regard to that.

The inclusion of these modules are not mentioned in the concept paper. The concept paper outlines the proposed structural changes of the framework of the reforms. As soon as this incident was reported, we initiated an inquiry. The NIE follows a specific process and methodology for preparing modules. We have begun an investigation to determine how that process changed, how such content was included, and who is responsible.

The governing council of the NIE is responsible for disciplinary matters of the institution. Accordingly, the NIE appointed former Secretary Mr. Ranjith Ariyaratne yesterday to conduct a preliminary investigation. Based on the findings of this initial inquiry, a broader investigation will be carried out to determine how procedural changes led to this incident.

Immediately after the incident was reported, we sealed the book as previously stated. The book has not been distributed to students. Approval has been granted by the Education Advisory Board of the NIE to remove the relevant lesson, and we will proceed with removing it.

I request that, when engaging in this dialogue, we refrain from unnecessarily promoting websites on this matter. The distribution of the lesson to students has already been stopped. Since the error was identified, we are taking investigative and corrective action. Let us discuss this matter constructively. If there are proposals on how to further strengthen this process, we are ready to welcome them. We are also open to further discussions on the concept paper if required. However, I propose that we conduct these discussions without using them as a means to promote unnecessary websites.

Prime Minister’s Media Division

அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குத் திருப்புவதில் அரசாங்கம் முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது

அவசரகாலச் சட்டமானது அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றதே தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்த பின்னர் ஆரம்பமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, 2026 ஜனவரி 06 பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாரிய இயற்கை அனர்த்தமாக அமைந்த, ’டிட்வா’சூறாவளியின் பின்னரான காலகட்டத்திற்கே நாம் தற்போது முகம் கொடுத்துள்ளோம். முழு நாட்டு மக்களும் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிட்டது. 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், இன்னும் பல மாவட்டங்களில் இந்த அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த தனிநபர்களும் குடும்பங்களும் இருப்பதை நாம் அறிவோம். இந்த இயற்கை அனர்த்தத்தினால் நாட்டின் மத்திய மலைநாட்டிற்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட சேதங்களை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அனர்த்தத் தருணத்திலேயே உடனடி நிவாரணங்களை வழங்கியதோடு, இதன் தீவிரத்தைப் புரிந்துகொண்டு பாரிய வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

இதன் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டே கௌரவ ஜனாதிபதி அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளையின் விதிகளுக்கு அமைய, 2025.11.28 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் யோசனைகளை முன்வைத்திருந்தனர். அவற்றையும் கருத்திற்கொண்டே கௌரவ ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்தார். இந்த அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்காகவே நாம் இந்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

இன்னும் 225 பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருகின்றன என்பதை நீங்களும் அறிவீர்கள். 6,592 குடும்பங்கள் இந்த மையங்களில் தங்கியுள்ளன. இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதன்படி 6,037 வீடுகள் முழுமையாகவும், 108,476 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இத்தகவல்களை நாம் நாளாந்தம் புதுப்பித்து வருகின்றோம். அதேபோல், பாதுகாப்பு மையங்களில் தங்காத ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தமது சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை பாதுகாப்பு மையங்களில் உள்ளவர்களை விட அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த அவசரகால நிலையை நீடிக்க வேண்டியுள்ளது. இந்தச் சட்டக் கட்டளையின் கீழ் எமக்கு ’அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்’ அலுவலகத்தைப் பராமரிக்கவும், அந்தப் பதவியை அறிவிக்கவும், தேவையான சேவைகளை முன்னெடுக்கவும் முடிந்துள்ளது.

இந்த அவசரகாலச் சட்டத்தை நாம் அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்துகிறோம் தவிர, வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அல்ல என்பதை மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விசேட சூழ்நிலையில் அனர்த்த முகாமைத்துவத்தின் போது ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளுக்கு மிக விரைவாகப் பதிலளிக்க வேண்டியுள்ளதாலும், அரச அதிகாரிகள் உடனடித் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாலும், அவர்களுக்குத் தேவையான சட்டப் பின்னணியை உருவாக்குவதற்காக மாத்திரமே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம்.

இது ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், மக்களின் சுதந்திரத்தை முடக்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்ற சில குற்றச்சாட்டுகளை நான் கண்டேன். ஆயினும், நாம் இச்சட்டத்தினை வேறு எதற்கும் பயன்படுத்தப் போவதில்லை என்பதை கௌரவ ஜனாதிபதி அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அந்த நிலைப்பாட்டிலேயே நாம் செயற்படுகிறோம்.

’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றங்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். அப்பணி இன்னும் முடிவடையவில்லை. அது மாற்றம் கண்டுவரும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஆகையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றும் போது, அந்த நிலத்தின் பாதுகாப்பு குறித்துப் பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே மீளக் குடியேற்ற முடியும். இப்போது தென்மேற்கு பருவமழைக் காலம் என்றாலும், இந்த மழையினால் பொதுவாக அனர்த்தங்கள் ஏற்படுவதில்லை. ஆயினும் தற்போதைய நிலையில் இந்த மழைவீழ்ச்சியும் ஓர் அனர்த்தகரமான நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே, நவம்பர் மாதப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு மிகவும் உன்னிப்பாக ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதனாலேயே அவசரகால நிலையைத் தொடர வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதே எமது முழுமையான முயற்சியாகும். எமது அரசாங்கம், அரச அதிகாரிகள், வர்த்தக சமூகம், நாட்டு மக்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ், முப்படையினர் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ளும் சக்தி எமக்குக் கிடைத்தது. இதனாலேயே உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மிக விரைவில் வழமைக்குக் கொண்டுவர முடிந்தது.

அதேபோன்று, சர்வதேச ரீதியாகக் கிடைத்த ஒத்துழைப்புடன் குறுகிய காலத்திற்குள் அனர்த்தத்தின் பாரிய தாக்கத்திலிருந்து எம்மால் மீள முடிந்தது. அரசாங்கம் வழங்கிய நிவாரணங்கள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக விரைவில் சீர்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. மாற்றமடைந்து வரும் சூழல் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

A Code of Guideline on Cyber Security introduced for Officials who Engaged in Curriculum and Textbook Development and Review.

A discussion was held on the 06th of January at Temple Trees under the patronage of Prime Minister Dr. Harini Amarasuriya with the Working Group on Online Safety, Digital Wellbeing, and Cyber Security of the Task Force on the Digitalisation of Education for Grades 6–13.

During the discussion, the Prime Minister instructed officials to develop a comprehensive code of guideline on Online Safety, Digital Wellbeing, and Cyber Security for officers involved in the preparation and review of curricula and school textbooks for students.

The meeting was attended by Secretary to the Prime Minister Pradeep Saputhanthri, Additional Secretary A.B.M. Ashraf, Chairman of the National Education Commission Professor Sarath Ananda, along with members of the Task Force.

Prime Minister’s Media Division

வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்படும் "சத்மஹால் சதஹம் மந்திரய" கட்டிடத்திற்கான மங்கள அடிக்கல் நாட்டும் விழா கௌரவப் பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள "சத்மஹால் சதஹம் மந்திரய" தர்ம மாளிகைக்கான அடிக்கல் நாட்டும் புண்ணிய உற்சவம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் 2026 ஜனவரி 03 ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.

துருது பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, மகா சங்கத்தினரின் ’செத் பிரித்’ பாராயணத்துடன் ஆரம்பமானது.

​அதனைத் தொடர்ந்து, கௌரவப் பிரதமரினால் மங்கள அடிக்கல் நாட்டப்பட்டு, ஏழு மாடி தர்ம மாளிகையின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பௌத்த மரபுகளைப் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்குத் தர்ம அறிவையும் ஆன்மீக வழிகாட்டலையும் வழங்கும் ஒரு மையமாக இந்த "சத்மஹால் சதஹம் மந்திரய" அமையவிருக்கின்றது.

​இந்நிகழ்வில் கோட்டை ரஜமகா விகாராதிபதி அளுத் நுவர அனுருத்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பிரதேச அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பிரதேச வாழ் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

​பிரதமர் ஊடகப் பிரிவு

2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகப் பணிகள் ஆரம்பம்!

நாம் ஆரம்பித்த பயணத்தை மேலும் பலப்படுத்தி, 2026ஆம் ஆண்டிலும் நம்பிக்கைக்குரிய மக்கள் சேவையை முன்னெடுப்போம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆகியோரின் தலைமையில் இன்று ஜனவரி 01 காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புத்தாண்டு நிமித்தம் அனைத்துப் பணியாளர்களினாலும் அரச சேவைச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதமர் தனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஆண்டானது பிரதமர் அலுவலகம் என்ற ரீதியில் பாரிய பணிகளை ஆற்றிய ஓர் ஆண்டாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், டிஜிட்டல் செயலணி, சர்வதேச உறவுகள் பிரிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளினூடாகவும் அனைவரதும் அர்ப்பணிப்புடன் பல கடமைகளை நிறைவேற்ற முடிந்தது எனத் தெரிவித்தார். அத்துடன், முன்னைய காலங்களை விடவும் மக்கள் மத்தியில் அதிக நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வென்றெடுத்த ஒரு நிறுவனமாகப் பிரதமர் அலுவலகம் தற்போது மாற்றம் பெற்றுள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

கடந்த ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் புத்தாண்டானது அதனை விடவும் சவால்கள் மிக்கதாக அமையக்கூடும். ஆயினும், நீங்கள் அனைவரும் ஒரு குழுவாக அந்தச் சவால்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த ஆண்டில் ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியினால் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். குறிப்பாக, எவ்விதப் பாகுபாடுமின்றி இவ்வாறான அவசர நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய அனுபவத்தைப் பெற்றோம். இனிவரும் காலங்களில் மேலும் சூழல்நேயமிக்கவர்களாக மாறி, இவ்வாறான அனர்த்தங்களைக் குறைக்கும் வகையில் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. அதற்கமைய, காலநிலை மாற்றங்கள் குறித்த புரிதலுடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடாக எமது அனைத்துத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,

2024ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அந்த மறுமலர்ச்சி மாற்றத்தை, அரச சேவையின் ஊடாக மக்களுக்கு நெருக்கமான விதத்தில் கொண்டுசெல்ல ’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தினோம். பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாரிய வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள அரச ஊழியர்களாகிய நீங்கள் அனைவரும் வழங்கிய உன்னதமான பங்களிப்புப் பாராட்டுக்குரியது.

’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ கொள்கையை நடைமுறைப்படுத்துகையில், அரச சேவையின் ஆரோக்கியமான மாற்றத்திற்காக அத்தியாவசியமான பத்து கோட்பாடுகளை நாம் இனங்கண்டோம். அதில் திறமை அடிப்படையிலான பதவி நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் ஊடாக அரச சேவையில் பாரிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது. மக்கள் அந்த மாற்றத்தை நன்கு உணர்ந்துள்ளனர். இந்தச் சிறந்த நடைமுறையை மீண்டும் மாற்றுவதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை, எனத் தெரிவித்தார்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தில் கடமையாற்றும் முழுப் பணியாளர் குழாமும் கலந்துகொண்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு