பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ග්‍රැන්ඩ්පාස් තොරණ අග්‍රාමාත්‍යතුමියගේ සුරතින් විවෘත වෙයි.

මහා ප්‍රජාපතී චරිතාපදානය සහිත තොරණ රාජයා, මැයි 12 වන වෙසක් පුන් පොහෝ දින ග්‍රැන්ඩ්පාස් කොස්ගස් හන්දිය ( තොරණ හන්දිය) දී සෙත් පිරිත් සජ්ඣායනය මධ්‍යයේ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය විසින් සම්බුදු සිරස නිරාවරණය කරමින් විවෘත කළාය.

මෙවර 54 වන වරටත් ශ්‍රී වෛශාක්‍ය සම්බුද්ධාලෝක සමිතිය විසින් මෙම තොරණ සංවිධානය කෙරිණි.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

2025 බුද්ධ රශ්මි වෙසක් කලාපය අග්‍රාමාත්‍යවරිය අතින් විවෘත වෙයි.

කොළඹ හුණුපිටිය ගංගාරාම විහාරය, ජනාධිපති කාර්යාලය හා අග්‍රාමාත්‍ය කාර්යාලය එක්ව සංවිධානය කරනු ලබන බුද්ධ රශ්මි වෙසක් කලාපය මැයි 12 වන දින අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය අතින් විවෘත විය.

මෙහිදී අග්‍රාමාත්‍යවරිය පළ කළ අදහස්,

"විවිධ ජාතීන් වෙසෙන කොළඹ නගරයේ සියලුම දෙනා සාමුහිකත්වයෙන් පවත්වන මෙම බුද්ධ රශ්මි වෙසක් කලාපය සුවිශේෂී වෙනවා. කොළඹ නගරය තුළ තියෙන ආගමික සහජීවනය මේ සදහා ඉතාම වැදගත් වෙනවා. මෙම සහජීවනය නිසාම තමයි අපිට විශාල දන්සල් ප්‍රමාණයක්, වෙසක් කලාප ප්‍රමාණයක් දැක ගන්න ලැබෙන්නේ. මේ දන්සැල් පවත්වන්නේ නගරයේ ඉන්න සියලු දෙනා එකතු වෙලා ඔවුන්ගේ මුදල් සහ ශ්‍රමය වැය කරලා.

ශ්‍රී ලාංකේය බෞද්ධ ප්‍රබෝධය, බෞද්ධ සංස්කෘතිය හා ජාතික අනන්‍යතාවය අපේ රටේ බෞද්ධයන්ට පමණක් නොව විදේශීය බෞද්ධයන්ටද විදෙස් සංචාරකයින්ට ද ලබාදීමට විහාරාධිකාරී කිරින්දේ අස්සජි ස්වාමීන් වහන්සේ දරනු ලබන ප්‍රයත්නය අගය කළ යුතුයි.

ඒ වගේම ඊයේ කොත්මලේ ප්‍රදේශයේදී සිදු වුණ බස් රථ අනතුරින් මියගිය පිරිස හා ඔවුන්ගේ පවුල්වල සාමාජිකයින් ඉතාම සංවේගයෙන් මේ මොහොතේ මතක් කරනවා. එමෙන්ම තුවාල ලැබූ පිරිසට ඉක්මන් සුවය ප්‍රාර්ථනා කරනවා." යැයි අග්‍රාමාත්‍යවරිය පැවසුවාය.

මෙම අවස්ථාවට බුද්ධ ශාසන, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්‍ය හිමිදුම සුනිල් සෙනෙවි මහතා, ඉන්දියානු මහ කොමසාරිස් සන්තෝෂ් ජා මහතා ඇතුළු මහ කොමසාරිස්වරුන්, තානාපතිවරුන් , අග්‍රාමාත්‍ය ලේකම් ප්‍රදීප් සපුතන්ත්‍රී මහතා ඇතුළු සම්භාවනීය අමුත්තන් රැසක් සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

2569/2025 ஸ்ரீ புத்த வருட வெசாக் வாழ்த்துச் செய்தி

புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, பௌத்த தத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து புத்தபெருமானை வழிபட இலங்கையின் பௌத்த மக்கள் ஒன்றுகூடும் இந்த வெசாக் காலத்தில், நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வெசாக் வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கையர்களாகிய எமது வாழ்க்கை பண்டைய காலங்களிலிருந்தே பௌத்த தத்துவத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது புத்த சமயத்திலிருந்து எமக்குக் கிடைத்த பரிசு. எமது நாட்டில், பல்வேறு இனங்கள், பல்வேறு சமயங்களைப் பின்பற்றி, நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழ்ந்து வருவதுடன், அனைவரும் ஒன்றுசேர்ந்து வெசாக் பண்டிகை போன்ற ஒரு முக்கியமான சமயப் பண்டிகையைக் கொண்டாடுவது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

"வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள எமது அரசாங்கத்தின் கீழ் இது முதலாவது வெசாக் பண்டிகையாகும். எமது நாடு சரியான மாற்றத்தை நோக்கி பயணித்து வரும் இச்சந்தர்ப்பத்தில், மனித உள்ளங்களை ஆற்றுப்படுத்த இந்த வெசாக் காலம் மிகவும் பொருத்தமானது என்பது எனது நம்பிக்கையாகும். அந்த நோக்கத்திற்காக நாம் அனைவரும் ஒருமனதுடனும் ஒற்றுமையாகவும் கைகோர்ப்போம் என எனது இந்த வெசாக் செய்தியின் ஊடாக உங்கள் அனைவரையும் அழைக்க இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

இந்த வெசாக் பண்டிகைக் காலத்தில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது எரிந்து கொண்டிருக்கும் போர்ச் சூழல்கள் தணிந்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழும் சூழல் உருவாக வேண்டும் என்று அனைத்து இலங்கையர்களுடனும் சேர்ந்து நான் பிரார்த்தனை செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய வெசாக் வாழ்த்துக்கள்! மும்மணிகளின் ஆசீர்வாதங்கள்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 மே மாதம் 12 ஆம் திகதி

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட பிரதமர் கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு விஜயம்...

மே 11 ஆம் திகதி அதிகாலை கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கரண்டியெல்ல பகுதியில் சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை நேரில் கண்டறிய மே 11 ஆம் திகதி பிற்பகல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தார்.

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் குறித்து பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

இது மிகவும் துன்பகரமான நிகழ்வு. இது போன்ற விடயங்களைத் தாங்கிகொள்வது மிகவும் கடினமானதாகும். சிறுவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்திருப்பது வேதனையானது. எமது நாட்டில் தினமும் ஏராளமான போக்குவரத்து விபத்துகள் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க எமது போக்குவரத்து அமைச்சர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நேரத்தில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்துவருகின்ற எமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதுபோன்று தங்கள் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்த அனைவரையும், அந்த மனிதாபிமானப் பணியை முன்னெடுத்த அனைவரையும் நான் நினைவுகூர விரும்புகிறேன். இதுதான் எமது நாட்டின் தனித்துவம். இந்த மனித பண்புகளை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த நேரத்தில், அரசாங்கம் முடியுமான அனைத்தையும் செய்வதை உறுதி செய்வதற்காக நாங்கள் தலையிடுகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பான பொலிஸ் விசாரணையை முறைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் பிரதமர் தலையீடு

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் பொலிஸ் குழு மற்றும் சிறுமியின் பெற்றோருடனான ஒரு சந்திப்பு மே மாதம் 10 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, முறையான மற்றும் மிக விரைவான விசாரணையை நடத்துமாறு பிரதமர் பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் பதிவாகியது முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக இடம்பெற்றனவா என்பது குறித்து கல்வி அமைச்சின் மூலம் உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் இவர்களிடம் தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் குறித்து தலையிட வேண்டிய அரச நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது என்றும், துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிள்ளைக்கு நேர்மறையான பதில் வழங்கப்படுவதில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளமையினால், இந்த பொறிமுறையை கண்காணித்து, அதை நெறிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சிறுவர் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு பிரதமரினால் நியமிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை ஒருபோதும் அரசியலாக்க கூடாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (மே 9 ஆம் திகதி) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும் என்றும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்றும், மேலும் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த சிறுமி சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பொறிமுறையை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிசுடன் இணைந்து மிக விரைவில் உருவாக்குவது குறித்து தான் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜுடன் கலந்துரையாடியதாகவும் பிரதமர் கூறினார்.

இது தொடர்பில் குறித்த பிள்ளையின் பெற்றோருக்கு அனைவரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசாங்கம் விரிவான தலையீட்டை வழங்கும் என்றும், பிள்ளைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கான திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு