பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தாய்லாந்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு. சிஹாசக் புவாங்கெட்கியோவுக்கும் இடையில் சந்திப்பு.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தாய்லாந்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

தாய்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் சகுனா சரணன், தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் சர்வதேச பொருளாதார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் Cherdchai Chaivaivid மற்றும் வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் Auramon Supthaweethum ஆகியோர் தாய்லாந்தின் இந்த சிரேஷ்ட தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு