புத்தல யுதகனாவ ராஜமகா விகாரையின் 2025 ஆம் ஆண்டுக்கான எசல மகா பெரஹர நேற்று (19) நிறைவடைந்தது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இறுதி ரந்தோலி ஊர்வலத்தின் வீதி வலா ஆரம்பமானது.புனிதச் சின்னம் அடங்கிய பேழையை ’வாசனா’ யானையின் மீது வைத்ததன் பின்னர், மொனராகலை மாவட்ட செயலாளர் திரு. பசன் ரத்நாயக்க, யுதகனாவ எசல மகா பெரஹரா இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றதற்கான சாசனத்தை ஊவா வெல்லஸ்ஸ இரு பிரதேசங்களுக்குமான பிரதம சங்க நாயக்கரும், யுதகனாவ ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமாகிய கல்டெம்வத்தே நந்தரதன நாயக்க தேரரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,ஹரினி அமரசூரிய,
யுதகனாவ ராஜ மகா விகாரையானது, தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலமாகும். ஊவா வெல்லஸ்ஸயின் பண்டைய பெருமையையும் கலாச்சார பாரம்பரியங்களையும் பாதுகாக்க இந்த வருடாந்த பெரஹர விழா மிகவும் முக்கியமானதாக அமைவதோடு உலக வாழ் மக்கள் மத்தியில்இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைகின்றது.
ராஜாவலிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து மூல வரலாற்றின் படி,"மஹாநாக, காவந்திஸ்ஸ, துட்டகைமுனு, சத்தாதிஸ்ஸ, மகா பராக்கிரமபாகு , மகா விஜயபாகு, நிஸ்ஸங்கமல்ல, ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க போன்ற மன்னர்கள் இப்புனிதத் தலத்தின் வளர்ச்சிக்காக தமது பங்களிப்பினை பெற்று கொடுத்திருக்கின்றனர்.
"பண்டைய காலத்தில் நாட்டை ஒன்றிணைக்கும் கடினமான பணியில் யுதகனாவ புனிதத் தலம் பெற்றுக் கொடுத்திருக்கும் பாரிய பலமும்,ஆசீர்வாதமும் சிறப்பு மிக்கதாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க மகா தாதுகோபுரமானது அதனை உலகிற்கு பறைசாற்றி நிற்கின்றது. இதனாலேயே யுதகனாவ வருடாந்த எசல பெரஹரா பலரின் கவனத்தையும் ஈர்க்கின்றது.
"இறுதியாக, வரலாற்று சிறப்புமிக்க யுத்தாகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த எசல பெரஹராவை உடரட்ட,பஹத்தரட்ட, சப்ரகமுவ, நடனங்கள் மற்றும் யானைகள் அடங்கிய கலாச்சார அம்சங்களுடன் நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊவா வெல்லஸ்ஸ இரு பிரதேசங்களினதும் பிரதான சங்க நாயக்கரும், யுதகனாவ ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமாகிய கல்டெம்வத்தே நந்தரதன நாயக்க தேரர் அவர்களுக்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.
அஸ்கிரி விகாரை பிரிவின் ரத்னபுர மாவட்ட சங்க நாயக்கரான அதி வணக்கத்துக்குரிய வத்துரக்கும்புரே தம்மரதன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்க சங்கத்தினரும், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு