இலங்கை பிரதமர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதி பிரதமரின் சந்திப்பு

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று (ஜூன் 3) கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரபூர்வ தூதரக இல்லத்தில் நடைபெற்றது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான இராஜதந்திர விஜயத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளைச் சுட்டிக்காட்டினார். அரசியல், பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சமூகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சவாலான சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்த நம்பிக்கைக்குரிய எதிர்பார்ப்பையும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஆஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வெளிவிவகாரம், வர்த்தகத் திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை பாதுகாப்புப் பிரிவின் பிரதம அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு