பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

25 மாவட்டங்களிலும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை.

தொழிற்கல்வியை மேம்படுத்த பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்.

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (06) பாராளுமன்ற வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"வெறுமனே தொழில்நுட்ப அறிவை வழங்குவதோடு மாத்திரம் நின்றுவிடாது, இளைஞர் சமூகத்தின் மனநல ஆரோக்கியம் மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தி இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

இதன்கீழ், நவீன வசதிகளுடனான விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் சுகாதார வசதிகளை நிறுவுதல்; பொழுதுபோக்கு மற்றும் கலைநயமிக்க அனுபவங்களைப் பெறக்கூடிய வகையிலும் மன அமைதி கிடைக்கக்கூடிய வகையிலும் உட்புற மற்றும் வெளிப்புற வளாகங்களை அழகுபடுத்துதல்; ஏனைய கல்வி நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய வகையில் ஒவ்வொரு தொழில்நுட்பக் கல்லூரிக்கும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குதல் ஆகிய விடயங்களில் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும்" எனக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே,

நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்துவதற்காக 23 தொழில்நுட்பக் கல்லூரிகளின் அபிவிருத்திப் பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். இந்த நிர்மாண மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்காக முப்படைகளின் மனித வளங்களையும், ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

The Government will not use emergency regulations to suppress Media or Any Group… – Prime Minister Dr. Harini Amarasuriya

Do not misinterpret Education Reforms

Prime Minister Dr. Harini Amarasuriya stated in Parliament on the 06th of February that the Government will under no circumstances use emergency regulations to suppress the media or any section of society.

She made these remarks during the parliamentary debate on the declaration of a state of emergency following the impact of Cyclone Ditwah.

The Prime Minister stated:

The damage caused to this country and its people by Cyclone Ditwah is well known to everyone. There is no need to repeatedly emphasize the extent of damage caused to our infrastructure, including roads and bridges. A large number of schools and houses have been damaged. There are areas that need to be rebuilt and people must be relocated. Moreover, we have witnessed landslides on a scale never seen before in our history. Even at present, the National Building Research Organisation (NBRO) has reported around 1,300 landslide incidents.

Under these circumstances, we have been compelled to intervene swiftly. This requires the rapid mobilization of resources, including human resources as well as essential material supplies. The responsibility shift upon us to act quickly and efficiently to restore normalcy, rebuild affected areas, and minimize further damage.

The need to extend the state of emergency arises solely from this situation. Our objective is to ensure the uninterrupted continuation of essential services and the appointment of an Essential Services Commissioner General. These are the two primary purposes for which this law is being utilized. Given the urgency of restoring the lives of the people to normalcy, we have presented this proposal to Parliament to extend the emergency regulations by one more month.

The Prime Minister further stated that making baseless allegations has become a common practice of the Opposition, and expressed regret that even senior Opposition Members of Parliament have engaged in such statements.

Referring to the incident involving Buddhist monks in Trincomalee, the Prime Minister noted that although the Opposition claimed arrests were made under emergency regulations, the law was in fact enforced under civil law. She emphasized that the debate focused not on what could be done under emergency regulations, but on what the Government had actually used the emergency law for.

She reiterated that the Government has not, under any circumstances, misused emergency regulations to suppress the media or any public protest. The Prime Minister invited the Opposition to clearly present the evidence if they believe such suppression had occurred with Government involvement.

Commenting on Opposition statements regarding education reforms, the Prime Minister stated that at a time when the Government has acted responsibly in implementing reforms and responding to emerging challenges, the Opposition’s attempts to create confusion in society through contradictory positions must be questioned.

The Prime minister emphasized that education reforms go far beyond Grade Six modules and constitute a broader process, and urged the Opposition not to misinterpret these reforms. The Prime Minister clarified that work related to the reforms continues under five core pillars and that there has been no suspension of the reform process. She also presented to Parliament the progress made within two months on compensation payments for those affected by the cyclone.

Accordingly, as of February 02, the Rs. 15,000 allowance provided for children has been distributed to 72% of beneficiaries, 50% of death compensations, the Rs. 50,000 allowance has been paid to 77% of eligible recipients, and the Rs. 25,000 allowance has been paid to 98% of beneficiaries.

Prime Minister’s Media Division

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களும் தீர்மானங்களும், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக மீண்டும் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சு, இந்நாட்டின் நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேல்நீதிமன்றத்தின் மூலத் தோற்றம் மற்றும் கட்டமைப்பை மாற்றாது, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்பது, ஏழு, ஐந்து மற்றும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வுகளுக்கான 07 புதிய உயர் நீதிமன்ற நீதியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நீதியரசர்களுக்கான 20 புதிய உத்தியோகபூர்வ அறைகள் மற்றும் பணியாளர் வசதிகள், மின்தூக்கிகள், நவீன நூலகம், வழக்கு ஆவண அறை மற்றும் கேட்போர் கூடம் என்பனவும், அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் தானியங்கி கமெரா கட்டமைப்புடன் கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இக்கட்டடத் தொகுதி புனரமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

1988ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத் தொகுதி, மூன்று தசாப்தங்களின் பின்னர் காலத்தின் தேவைக்கேற்ப இவ்வாறு நவீனமயமாக்கப்படுவது மிக முக்கியமானதொரு நடவடிக்கையாகும்.

நீதித்துறை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு என்பது உண்மையில் பொதுமக்களின் நம்பிக்கையிற்காகச் செய்யப்படும் முதலீடாகும். பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான சூழல் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவம் மேலும் வலுவடையும். எனக் கூறினார்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், நீதி அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்படும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த நவீன வசதிகள் உறுதுணையாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன, சட்டமா அதிபர் பாரீந்த ரணசிங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உள்ளிட்ட உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Governor of Gujarat met with the Prime Minister to discuss the exhibit of Devnimori Sarvagna

The Governor of the of Gujarat, Mr. Acharya Devvrat, along with the Deputy Chief Minister of Gujarat, Mr. Harsh Sanghvi, met with Prime Minister Dr. Harini Amarasuriya on February 05 at the Parliamentary Complex to discuss the arrangements related to the exhibition of the Devnimori Sacred Relics of the Lord Buddha, which have been brought to Sri Lanka under the patronage of Indian Prime Minister Mr. Narendra Modi and the Government of India.

These sacred Bodily relics of the Loard Buddha were discovered during archaeological excavations conducted in the 1960s at the historic Devnimori site in Gujarat, the home state of Indian Prime Minister Narendra Modi. Until now, these relics had never been taken outside India. As a result of discussions held between President Anura Kumara Dissanayake and Indian Prime Minister Narendra Modi during his recent visit to Sri Lanka, the people of Sri Lanka have been granted this rare opportunity to venerate these sacred relics.

The Sarvagna Relics Veneration is being held for a period of seven days, from February 05 to February 11, at the Gangaramaya Temple in Hunupitiya, Colombo. Discussions were held between both parties regarding the arrangements related to this event.

Following the offering of the floral tribute by President Anura Kumara Dissanayake on the 04th of February, which marked the official commencement of the venerable of Sarvagna Relics, Prime Minister Dr. Harini Amarasuriya also participated in the occasion.

The discussion was attended by Mr. Samar Nanda, Joint Secretary of the Indian Ministry of Culture; Dr. Satyanjal Pandey, Acting High Commissioner of India in Sri Lanka; Mr. Abhijit Halder, Director General of the International Buddhist Confederation; along with several others.

Prime Minister’s Media Division

ஸ்மார்ட் போர்டுகளுக்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும்.

இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

வதந்திகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டாம்.

புதிய கல்வி மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளைக் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

"இலவசக் கல்வி என்பது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையாக இல்லாவிட்டாலும், இந்தச் சந்தர்ப்பத்திலாவது அதற்காக அவர் குரல் கொடுப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் சமூக ஊடகங்கள் அல்லது வதந்திகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ நாம் எந்த முடிவும் எடுக்கவில்லை. விக்ரமாராச்சி மருத்துவ பீடம் எவ்வித விதிமுறைகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இன்று அந்த மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். இது ஒரு அரசியல் தீர்மானம் அல்ல. விக்ரமாராச்சி மருத்துவ பீடத்தின் பிரச்சினை தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகிறோம்.

இவ்வருடம் பாடசாலை அமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எக்காரணம் கொண்டும் இதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கத் தேவையில்லை. அவ்வாறு வசூலிக்கப்பட்டால் அதை உடனடியாக நிறுத்துங்கள். பாடசாலைகளில் பணம் வசூலிக்க வேண்டாம் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1-5 தரங்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் தனிப்பாடமாகக் கற்பிக்கப்படாது. எனினும், தொழில்நுட்ப உலகத்துடன் இணைந்து பயணிப்பதற்காக, ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவை வழங்குவது குறித்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். சிறுவர் பாதுகாப்பு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டே நாம் தீர்மானங்களை எடுப்போம். பாடத்திட்டங்கள் குறித்து அரசியல் ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது; அவை அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்களாலேயே தீர்மானிக்கப்படும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் அத்தியாவசிய வெற்றிடங்களுக்காகக் கல்விசார் ஊழியர்களைப் சேவையில் இணைத்துக்கொள்ள அந்தந்த நிறுவனங்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேபோல், ஆசிரியர் சேவை நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதன் தரத்தை மேம்படுத்த மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. ஆசிரியர் சேவையின் பதவி உயர்வுக்கான மதிப்பீட்டுச் செயல்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சேவையாப்பின்படி நியமனங்கள் வழங்கப்படாமை போன்ற பிரச்சினைகளைத் தீர்த்து, தரமான கல்விக்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது."

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்:

"பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவுகளின்படி பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் ’சுரக்ஷா’ காப்புறுதி என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, 6-13 தரங்களில் பயிலும் மாணவிகளுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் கொள்வனவு செய்ய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ’அஸ்வெசும’ நன்மைகளைப் பெறாத மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காகத் தேவையான தரவுகளைத் திரட்டி வருகின்றது.

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து உரிய கால அட்டவணைப்படி பரீட்சைகளை நடத்த முயற்சித்து வருகிறோம்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாகவும் சமூகம் சார்ந்த அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் தெரிவிப்பு.

நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைக் காலத்திற்கேற்ப மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை - சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி.

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாக மாத்திரமன்றி சமூகம் சார்ந்த அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மனநலச் சேவைகளைப் பெறுபவர்கள் குறித்துச் சமூகம் கொண்டுள்ள மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் மனநலச் சுகாதாரத் துறையின் முன்னோடி நிறுவனமான அங்கொடை தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் (NIMH) நூற்றாண்டு விழா பெப்ரவரி 03ஆம் திகதி அந்த நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வின் ஆரம்பத்தில், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட புகைப்படக் கண்காட்சியையும் மனநலச் சேவைகளைப் பெறுபவர்களின் ஆக்கங்கள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.

நினைவுவிழாவில் உரையாற்றிய பிரதமர், கடந்த நூறு ஆண்டுகளாக இந்நிறுவனம் ஆற்றி வரும் அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் சமூக மனநலச் சேவைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டுமெனக் கூறினார்.

மனநலத் துறை என்பது வெறுமனே மருத்துவச் சிகிச்சையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. பல வெளித்துறைகளை ஒருங்கிணைத்து மிகவும் பரந்த மற்றும் மனிதாபிமான முறையிலான சிகிச்சை முறையொன்றை நாம் கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக, மனநலச் சேவைகளைப் பெறுபவர்கள் தொடர்பாகச் சமூகம் கொண்டுள்ள தவறான கண்ணோட்டங்களை மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது.

மருத்துவமனை ஊழியர்களின் சிறப்பான அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், நோயாளிகள் மீது மனிதநேயத்துடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜயமுனி, முக்கியமானதொரு விடயத்தை வெளிப்படுத்தினார். அதாவது, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைத் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்ப வரைவு ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் காலங்களில் இச்சட்டம் குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களையும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் மூலம் நவீன மருத்துவ முறைகளைச் சட்ட முறைமைக்குள் உள்வாங்கி, நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க, உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான பிரதிநிதி மருத்துவர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ், தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் மருத்துவர் தம்மிக அலகப்பெரும உள்ளிட்ட அதிதிகள், மருத்துவர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு