பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ සංකල්ප පත්‍රිකාව ගැන සාකච්ඡා කරන්න අපි ලෑස්තියි.නමුත් අනවශ්‍ය වෙබ් අඩවි ප්‍රචාරණය කරන්න එපා - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

6ශ්‍රේණියේ ඉංග්‍රීසි මොඩියුලයේ අන්දෝලනයට පත් පාඩම ඉවත් කරන්න කටයුතු කරනවා

මේ මොඩියුල දරුවන් අතට පත්කර නැහැ

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ සංකල්ප පත්‍රිකාව පිලිබඳ සාකච්ඡා කිරීමට ඕනෑම අවස්ථාවක සූදානම් බවත් ,එකී සංවාදය අනවශ්‍ය වෙබ් අඩවි ප්‍රචාරණය කිරීමට යොදා නොගත යුතු බවත්, 6 ශ්‍රේණියේ ඉංග්‍රීසි මොඩියුලයේ අන්දෝලනයට පත් පාඩම ඉවත් කිරීමට ජාතික අධ්‍යාපන ආයතනයේ අනුමැතිය හිමිව ඇති බවත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස විසින් අද (ජනවාරි 07) පාර්ලිමේන්තුවේදී නැගූ ප්‍රශ්නයකට පිළිතුරු ලබා දෙමින් අග්‍රාමාත්‍යවරිය මේ බව සඳහන් කර සිටියා ය.

එහිදී වැඩි දුරටත් අදහස් දැක්වු අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

සංකල්ප පත්‍රිකාව අධ්‍යාපන උපදේශන සභාවේ සාකච්ඡාවට ගත්තා. ඒක සියලුම මන්ත්‍රීවරුන්ට ලබා දෙන්නත්, වෙබ් අඩවියට ඇතුළත් කරන්නත් කටයුතු කර තියෙනවා. ඒ පිළිබදව පාර්ලිමේන්තුව තුළ අපි සාකච්ඡා කළා.ඒ වගේම අපි මන්ත්‍රීවරුන්ට ආරාධනා කළා, ඒ සාකච්ඡාවට සම්බන්ධ වෙන්න කියලා. මන්ත්‍රීවරුන් කීහිප දෙනෙක් මේ සාකච්ඡාවට සහභාගී වුණා. ඕනම අවස්ථාවක අපි තව සාකච්ඡා කරන්න විවෘත යි. ඒ සංකල්ප පත්‍රිකාව මත පදනම් කරගෙන ඒක තව දියුණු කරන්න හෝ සාකච්ඡා කරන්න අපි ලෑස්තියි ඒකට අපි විරුද්ධ නැහැ.

ඒ වගේම ඒ සංකල්ප පත්‍රිකාවේ මේ මොඩයුල අන්තර්ගතය පිළිබදව සඳහන්ව නැහැ. සංකල්ප පත්‍රිකාවක තියෙන්නේ කරන්න යෝජිත ව්‍යුහාත්මක වෙනසේ frame work එක පිළිබදව . මේ සිද්ධිය වාර්තා වුණ වහාම අපි ඒ පිළිබද විමර්ෂණයක් කළා. ජාතික අධ්‍යාපන ආයතනයේ මොඩියුල පිළියෙළ කිරීමේ යම් ක්‍රියාමාර්ගයක්, ක්‍රමවේදයක් තියෙනවා. ඒ ක්‍රමවේදය වෙනස් වුණේ කොහොමද, මේ වගේ දෙයක් අන්තර්ගත වුණේ කොහොමද, ඒකට වග කිය යුත්තේ කවුද කියන එක ගැන කරුණු විමසීමේ විමර්ශනයක් අපි ආරම්භ කළා. ජාතික අධ්‍යාපන ආයතනයේ governing council එක තමා ආයතනයේ විනය පිළිබද වගකියන්නේ. ඒ ආයතනය විසින් රංජිත් ආරියරත්න හිටපු ලේකම්තුමා ඊයේ දිනයේදි මූලික විමර්ශන කරන්න පත් කළා. ඒ මූලික විමර්ශනය අනුව මේ සිදුවීම පිළිබද, ක්‍රමවේද වෙනස්වෙලා මේක කොහොමද සිද්ධ වුණේ කියලා පුළුල් විමර්ශනයක් කරනවා.

මේ සිද්ධිය වාර්ථා වු වහාම අපි මේ පොත කලින් සදහන් කළ විදියට මුද්‍රා තැබුවා. ඒ පොත ළමයින්ට බෙදලා නැහැ. ඒ පාඩම ඉවත් කරන්නත් ජාතික අධ්‍යාපන ආයතනයේ අධ්‍යාපන උපදේශක මණ්ඩලයේ අනුමැතය ලැබුණා. අපි ඒ පාඩම ඉවත් කරනවා.

මම ඉල්ලා සිටිනවා මෙම සංවාදය කරනකොට අනවශ්‍ය ලෙස වෙබ් අඩවි ප්‍රවර්ධනය කරන විදියට කතා නොකර ඉමු කියලා. මොකද ඒ පාඩම දරුවන්ට යන එක නවත්වලා තියෙන්නේ. ඒ වුණ වැරැද්ද දැක්ක නිසා අපි විමර්ශනය කරමින් ඒ සඳහා ක්‍රියාමාර්ග ගන්න අතර ඒක පිළිබද අපි කතා කරමු. සංවාද කරමු. ඒ ක්‍රියාවලිය තව ශක්තිමත් කරන්නේ කොහොමද කියන එකට යෝජනා තියෙනවනම් ඉදිරිපත් කරන්න. අපි ඉතාමත්ම සතුටින් ඒවා භාරගන්නවා. ඒ වගේම සංකල්ප පත්‍රිකාව පිළිබද තවත් සාකච්ඡා කරන්න අවශ්‍යනම් ඒකටත් අපි විවෘතයි. නමුත් මේක සාකච්ඡා කරන ගමන් අනවශ්‍ය වෙබ් අඩවි තවත් ප්‍රවර්ධනය කරන්නේ නැති විදියට අපි සාකච්ඡා කරමු කියන කාරණය මම මේ අවස්ථාවේ යෝජනා කරනවා.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குத் திருப்புவதில் அரசாங்கம் முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது

அவசரகாலச் சட்டமானது அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றதே தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்த பின்னர் ஆரம்பமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, 2026 ஜனவரி 06 பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாரிய இயற்கை அனர்த்தமாக அமைந்த, ’டிட்வா’சூறாவளியின் பின்னரான காலகட்டத்திற்கே நாம் தற்போது முகம் கொடுத்துள்ளோம். முழு நாட்டு மக்களும் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிட்டது. 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், இன்னும் பல மாவட்டங்களில் இந்த அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த தனிநபர்களும் குடும்பங்களும் இருப்பதை நாம் அறிவோம். இந்த இயற்கை அனர்த்தத்தினால் நாட்டின் மத்திய மலைநாட்டிற்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட சேதங்களை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அனர்த்தத் தருணத்திலேயே உடனடி நிவாரணங்களை வழங்கியதோடு, இதன் தீவிரத்தைப் புரிந்துகொண்டு பாரிய வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

இதன் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டே கௌரவ ஜனாதிபதி அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளையின் விதிகளுக்கு அமைய, 2025.11.28 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் யோசனைகளை முன்வைத்திருந்தனர். அவற்றையும் கருத்திற்கொண்டே கௌரவ ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்தார். இந்த அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்காகவே நாம் இந்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

இன்னும் 225 பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருகின்றன என்பதை நீங்களும் அறிவீர்கள். 6,592 குடும்பங்கள் இந்த மையங்களில் தங்கியுள்ளன. இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதன்படி 6,037 வீடுகள் முழுமையாகவும், 108,476 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இத்தகவல்களை நாம் நாளாந்தம் புதுப்பித்து வருகின்றோம். அதேபோல், பாதுகாப்பு மையங்களில் தங்காத ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தமது சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை பாதுகாப்பு மையங்களில் உள்ளவர்களை விட அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த அவசரகால நிலையை நீடிக்க வேண்டியுள்ளது. இந்தச் சட்டக் கட்டளையின் கீழ் எமக்கு ’அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்’ அலுவலகத்தைப் பராமரிக்கவும், அந்தப் பதவியை அறிவிக்கவும், தேவையான சேவைகளை முன்னெடுக்கவும் முடிந்துள்ளது.

இந்த அவசரகாலச் சட்டத்தை நாம் அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்துகிறோம் தவிர, வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அல்ல என்பதை மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விசேட சூழ்நிலையில் அனர்த்த முகாமைத்துவத்தின் போது ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளுக்கு மிக விரைவாகப் பதிலளிக்க வேண்டியுள்ளதாலும், அரச அதிகாரிகள் உடனடித் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாலும், அவர்களுக்குத் தேவையான சட்டப் பின்னணியை உருவாக்குவதற்காக மாத்திரமே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம்.

இது ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், மக்களின் சுதந்திரத்தை முடக்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்ற சில குற்றச்சாட்டுகளை நான் கண்டேன். ஆயினும், நாம் இச்சட்டத்தினை வேறு எதற்கும் பயன்படுத்தப் போவதில்லை என்பதை கௌரவ ஜனாதிபதி அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அந்த நிலைப்பாட்டிலேயே நாம் செயற்படுகிறோம்.

’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றங்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். அப்பணி இன்னும் முடிவடையவில்லை. அது மாற்றம் கண்டுவரும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஆகையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றும் போது, அந்த நிலத்தின் பாதுகாப்பு குறித்துப் பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே மீளக் குடியேற்ற முடியும். இப்போது தென்மேற்கு பருவமழைக் காலம் என்றாலும், இந்த மழையினால் பொதுவாக அனர்த்தங்கள் ஏற்படுவதில்லை. ஆயினும் தற்போதைய நிலையில் இந்த மழைவீழ்ச்சியும் ஓர் அனர்த்தகரமான நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே, நவம்பர் மாதப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு மிகவும் உன்னிப்பாக ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதனாலேயே அவசரகால நிலையைத் தொடர வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதே எமது முழுமையான முயற்சியாகும். எமது அரசாங்கம், அரச அதிகாரிகள், வர்த்தக சமூகம், நாட்டு மக்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ், முப்படையினர் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ளும் சக்தி எமக்குக் கிடைத்தது. இதனாலேயே உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மிக விரைவில் வழமைக்குக் கொண்டுவர முடிந்தது.

அதேபோன்று, சர்வதேச ரீதியாகக் கிடைத்த ஒத்துழைப்புடன் குறுகிய காலத்திற்குள் அனர்த்தத்தின் பாரிய தாக்கத்திலிருந்து எம்மால் மீள முடிந்தது. அரசாங்கம் வழங்கிய நிவாரணங்கள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக விரைவில் சீர்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. மாற்றமடைந்து வரும் சூழல் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

විෂයමාලා, පෙළපොත් සකස් කිරීම සහ සමාලෝචනය සිදු කරන නිලධාරීන් සඳහා සයිබර් ආරක්ෂණය වෙනුවෙන් මාර්ගෝපදේශන සංග්‍රහයක්

6-13 ශ්‍රේණි සඳහා අධ්‍යාපනය ඩිජිටල්කරණය කිරීමේ කාර්ය සාධන බළකායේ මාර්ගගත ආරක්ෂණය, ඩිජිටල් යහපැවැත්ම සයිබර් ආරක්ෂණයට අදාළ කාර්ය කන්ඩායම (work group) සමඟ සාකච්ඡාවක් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියගේ ප්‍රධානත්වයෙන් ජනවාරි 06 දින අරලිය ගහ මන්දිරයේදී පැවැත්විණි.

එහිදී පාසල් සිසුන් සඳහා විෂයමාලා සකස් කිරීම, පෙළපොත් සකස් කිරීම සහ සමාලෝචනය සිදු කරන නිලධාරීන් සඳහා මාර්ගගත ආරක්ෂණය, ඩිජිටල් යහපැවැත්ම, සයිබර් ආරක්ෂණය (Online Safety, Digital Wellbeing, Cyber Security) වෙනුවෙන් මාර්ගෝපදේශන සංග්‍රහයක් සකස් කිරීම සඳහා අග්‍රාමාත්‍යතුමිය උපදෙස් ලබා දුන්නාය.

මෙම අවස්ථාවට අග්‍රාමාත්‍ය ලේකම් ප්‍රදීප් සපුතන්ත්‍රි, අතිරේක ලේකම් ඒ.බී.එම්. අෂ්රෆ්, ජාතික අධ්‍යාපන කොමිෂන් සභාවේ සභාපති මහාචාර්ය සරත් ආනන්ද යන මහත්වරුන් ඇතුළු කාර්ය සාධක බලකායේ සමාජිකයින් සහභාගී විය.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்படும் "சத்மஹால் சதஹம் மந்திரய" கட்டிடத்திற்கான மங்கள அடிக்கல் நாட்டும் விழா கௌரவப் பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள "சத்மஹால் சதஹம் மந்திரய" தர்ம மாளிகைக்கான அடிக்கல் நாட்டும் புண்ணிய உற்சவம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் 2026 ஜனவரி 03 ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.

துருது பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, மகா சங்கத்தினரின் ’செத் பிரித்’ பாராயணத்துடன் ஆரம்பமானது.

​அதனைத் தொடர்ந்து, கௌரவப் பிரதமரினால் மங்கள அடிக்கல் நாட்டப்பட்டு, ஏழு மாடி தர்ம மாளிகையின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பௌத்த மரபுகளைப் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்குத் தர்ம அறிவையும் ஆன்மீக வழிகாட்டலையும் வழங்கும் ஒரு மையமாக இந்த "சத்மஹால் சதஹம் மந்திரய" அமையவிருக்கின்றது.

​இந்நிகழ்வில் கோட்டை ரஜமகா விகாராதிபதி அளுத் நுவர அனுருத்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பிரதேச அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பிரதேச வாழ் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

​பிரதமர் ஊடகப் பிரிவு

2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகப் பணிகள் ஆரம்பம்!

நாம் ஆரம்பித்த பயணத்தை மேலும் பலப்படுத்தி, 2026ஆம் ஆண்டிலும் நம்பிக்கைக்குரிய மக்கள் சேவையை முன்னெடுப்போம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆகியோரின் தலைமையில் இன்று ஜனவரி 01 காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புத்தாண்டு நிமித்தம் அனைத்துப் பணியாளர்களினாலும் அரச சேவைச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதமர் தனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஆண்டானது பிரதமர் அலுவலகம் என்ற ரீதியில் பாரிய பணிகளை ஆற்றிய ஓர் ஆண்டாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், டிஜிட்டல் செயலணி, சர்வதேச உறவுகள் பிரிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளினூடாகவும் அனைவரதும் அர்ப்பணிப்புடன் பல கடமைகளை நிறைவேற்ற முடிந்தது எனத் தெரிவித்தார். அத்துடன், முன்னைய காலங்களை விடவும் மக்கள் மத்தியில் அதிக நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வென்றெடுத்த ஒரு நிறுவனமாகப் பிரதமர் அலுவலகம் தற்போது மாற்றம் பெற்றுள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

கடந்த ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் புத்தாண்டானது அதனை விடவும் சவால்கள் மிக்கதாக அமையக்கூடும். ஆயினும், நீங்கள் அனைவரும் ஒரு குழுவாக அந்தச் சவால்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த ஆண்டில் ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியினால் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். குறிப்பாக, எவ்விதப் பாகுபாடுமின்றி இவ்வாறான அவசர நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய அனுபவத்தைப் பெற்றோம். இனிவரும் காலங்களில் மேலும் சூழல்நேயமிக்கவர்களாக மாறி, இவ்வாறான அனர்த்தங்களைக் குறைக்கும் வகையில் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. அதற்கமைய, காலநிலை மாற்றங்கள் குறித்த புரிதலுடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடாக எமது அனைத்துத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,

2024ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அந்த மறுமலர்ச்சி மாற்றத்தை, அரச சேவையின் ஊடாக மக்களுக்கு நெருக்கமான விதத்தில் கொண்டுசெல்ல ’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தினோம். பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாரிய வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள அரச ஊழியர்களாகிய நீங்கள் அனைவரும் வழங்கிய உன்னதமான பங்களிப்புப் பாராட்டுக்குரியது.

’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ கொள்கையை நடைமுறைப்படுத்துகையில், அரச சேவையின் ஆரோக்கியமான மாற்றத்திற்காக அத்தியாவசியமான பத்து கோட்பாடுகளை நாம் இனங்கண்டோம். அதில் திறமை அடிப்படையிலான பதவி நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் ஊடாக அரச சேவையில் பாரிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது. மக்கள் அந்த மாற்றத்தை நன்கு உணர்ந்துள்ளனர். இந்தச் சிறந்த நடைமுறையை மீண்டும் மாற்றுவதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை, எனத் தெரிவித்தார்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தில் கடமையாற்றும் முழுப் பணியாளர் குழாமும் கலந்துகொண்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நான் நம்புகிறேன்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம்.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டிற்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது. அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது. அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டிற்குள் நாம் கால்பதிக்கின்றோம்.

கல்வித் துறையில் தரமான, அதேநேரம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற,கல்வித்துறையின் மாற்றம், அரச சேவை உட்பட அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கல், சாத்தியமான புதிய எண்ணக்கருக்களைக் கொண்ட முயற்சியாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உலகளாவிய ரீதியில் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குதல், போதைப்பொருள் அற்ற - சுற்றாடலை நேசிக்கும் - மனிதாபிமானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல சிறப்பான நோக்கங்களுடன், இன, மத மற்றும் கட்சிப் பேதங்களற்ற பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.
2026 ஜனவரி 01 ஆம் திகதி