டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி. ஹரிணி அமரசூரிய
2025 செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (Galle Face Hotel) நடைபெற்ற, ருஹுண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்பாடு செய்த “சர்வதேச விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு 2025” (ISAE) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மைக்கான விவசாய தொழில்நுட்பங்களில் புதுமைகளைப் புகுத்துதல்" என்பதே ISAE 2025 இன் தலைப்பாகும். இக்கருத்தரங்கின் மூலமாக உலகளாவிய விவசாயத்துறை, நிலையான தன்மை மற்றும் வளர்ந்து வரும் பயன்படுத்தி கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புகள் சந்திக்க நேர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இலங்கையின் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் அவர்கள்,
"இந்த மாநாட்டோடு இணைந்ததாக நடைபெறும் இளம் பட்டதாரிகளின் மன்றமானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நமது எதிர்காலம் புத்தாக்கமான, அறிவு மற்றும் சமூக உணர்வு கொண்ட இளம் தலைமுறையினரைச் சார்ந்துள்ளது. .அவர்களின் கல்வி, திறமை மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியில் முதலீடு செய்தல் என்பது இலங்கையிலும் அதற்கு அப்பாலும் ஏற்படும் காலநிலை மாற்றங்களுக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய எதிர்காலத்திற்கான முதலீடாகும்.
விவசாயம் என்பது உணவு உற்பத்தி மட்டுமல்ல. அது நமது சமூகங்கள், நமது பொருளாதாரம் மற்றும் நமது உலகம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதாகும்.
ஆகையினால் புத்தாக்கத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்களுக்கு உதவி புரிதல் மற்றும் நிலையான தன்மையுடன்
முன்னோக்கிச் செல்லும் அதே வேலை, கொள்கைகளை வகுத்து காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய சவால்களை வாய்ப்புகளாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம, சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே, அக்ஸ்டார் பிஎல்சி துணைத் தலைவர் திரு.இந்திக்க குணவர்தன, ருஹுண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ.ஜயந்த, விவசாய பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ஜி.வை.ஜயசிங்கே, கலாநிதி. அவந்தி மஹானாம, கலாநிதி அனுஷ்க பண்டார மற்றும் ருஹுண பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு