பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

දිවයිනෙන් ජලභීතිකා රෝගය තුරන් කිරීම පිළිබඳව, අග්‍රාමාත්‍යතුමිය සහ එක්සත් රාජධානියේ සත්ත්ව සුභසාධන නියෝජිතයින් අතර විශේෂ සාකච්ඡාවක්

ශ්‍රී ලංකාවෙන් ජලභීතිකා රෝගය සම්පූර්ණයෙන්ම තුරන් කිරීම, සත්ත්ව සුබසාධනය තහවුරු කිරීම සහ වීදි සතුන්ගේ ගහනය පාලනය කිරීම වෙනුවෙන් වඩාත් විධිමත් හා කඩිනම් ජාතික වැඩපිළිවෙළක් ක්‍රියාත්මක කිරීම පිළිබඳව එක්සත් රාජධානියේ ප්‍රමුඛ පෙළේ සත්ත්ව සුබසාධන සංවිධානයක් වන ’Battersea’ සහ ජාත්‍යන්තර සහකාර සත්ත්ව කළමනාකරණ සන්ධානය (ICAM - UK) නියෝජනය කරන විශේෂ නියෝජිත පිරිසක් සහ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය අතර සාකච්ඡාවක් අද (21) පාර්ලිමේන්තු සංකීර්ණයේදී පැවැත්විය.

මෙතෙක් පැවැති 70%ක එන්නත්කරණ ඉලක්කය වෙනුවට, කෙටි කාලයක් තුළ උපරිම සුනඛයන් සංඛ්‍යාවකට වසර 3ක් පුරා පවතින එන්නත ලබාදීමේ ’No Dog Left Behind’ නව ක්‍රමවේදය හඳුන්වා දීමේ අවශ්‍යතාව පිළිබඳ නියොජිත පිරිස මෙහිදී පෙන්වා දුන් අතර එමගින් මේ වනවිට ජලභීතිකා එන්නත් (Post-Exposure Prophylaxis) සඳහා වැයවන අධික පිරිවැය අවම කරගත හැකි බවද විශේෂඥයෝ පෙන්වා දුන්හ.

පශු වෛද්‍යවරුන්ගේ පවතින හිඟය සහ පරිපාලනමය ගැටලු මඟහැරීම සඳහා පළාත් පාලන ආයතන හරහා එන්නත්කරණය පුහුණු කර යොදවා ගැනීම පිළිබඳවද මෙහිදී අවධානය යොමු විය.

පළමුවෙන් බස්නාහිර පළාත තුළත්, පසුව සමස්ත දිවයින පුරාත් ව්‍යාප්ත කිරීම සහ මෙය ජාතික කර්තව්‍යයක් සේ සළකා සෘජුව හා කාර්යක්ෂමව මෙහෙයවීම සඳහා ’කාර්ය සාධක බලකායක්’ (Presidential Task Force) පිහිටුවීම පිලිබඳවද අවධානය යොමු කෙරිණ.

ජලභීතිකා රෝගය සාර්ථකව පාලනය කිරීම සඳහා ගුණාත්මකභාවයෙන් ඉහළ එන්නත් භාවිත කිරීමේ වැදගත්කම සහ එන්නත්වල ශීතකරණ සැපයුම් දාමය (Cold chain) සුරක්ෂිතව පවත්වා ගැනීමත්, මධ්‍යම රජයේ අධීක්ෂණය කිරීමේ අවශ්‍යතාවත් විශේෂඥයෝ විසින් මෙහිදී පැහැදිලි කළහ.

සත්ත්ව සුබසාධනය මෙන්ම ජලභීතිකා රෝගය තුරන් කිරීම රජයේ ප්‍රමුඛතාවක් වන බවත්, පවතින ප්‍රායෝගික ගැටලු නිරාකරණය කරගනිමින් පළාත් පාලන ආයතන, අදාළ අමාත්‍යාංශ සහ ජාත්‍යන්තර සංවිධාන එක්ව මෙම ජාතික සැලැස්ම ඉදිරියට ගෙන යාමට අවශ්‍ය සහය රජය ලබා දෙන බවත් මෙහිදී අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

මෙම සාකච්ඡාවට Battersea සංවිධානයේ නියෝජිත Ms. Roxanne Sahar Nazir, සහ ICAM සංවිධානය නියෝජනය කරමින් Dr. Elaine Francisca Hiby, Dr. Eric Joseph Brum, Mr. Patrick Gerard කොළඹ මහ නගර සභාවේ ප්‍රධාන පශු වෛද්‍ය Dr. M. Ijas යන මහත්ම මහත්මීහු සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு, வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் கட்டாயத் தேவைகளாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பின்னணியில், நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் அத்தியாவசியமானவையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூலை 20 ஆம் திகதி கொழும்பில், இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தினால் (CMA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட CMA இலங்கை தேசிய முகாமைத்துவ கணக்கீட்டு மாநாடு 2026இல் உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நெருக்கடி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி, முகாமைத்துவ கணக்கீட்டுக் கோணத்தில் (Crisis, Stability and Growth: A Management Accounting Lens) எனும் தலைப்பில் இம்மாநாடு ஜூலை 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்கள் கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் நடைபெற்றது.

ஆரம்ப விழாவில் CMA தேசிய முகாமைத்துவ கணக்கீட்டு மாநாட்டின் சஞ்சிகையை உத்தியோகபூர்வமாக வெளியிடுதலும், கணக்கீட்டுத் துறையில் 50 ஆண்டுகால சேவையை நிறைவுசெய்த சிரேஷ்ட தொழில்வல்லுநர்களுக்கான ’பொன் விழா விருதுகள்’ வழங்குதலும் பிரதமர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. அரச உத்தியோகத்தர்களுக்காக CMA முகாமைத்துவ கணக்கீட்டு முறைமை பாடநெறியைக் கற்பதற்கு 100 பூரண புலமைப்பரிசில்களை CMA Sri Lanka நிறுவனம் அரசாங்கத்திற்கு வழங்கியமையும் இதன்போது இடம்பெற்றது. ’CMA Business Excellence Awards 2026’ மற்றும் தகுதிபெற்ற உறுப்பினர்களுக்கான ’Merit Awards’ விருது வழங்கல் என்பனவும் இங்கு இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

தற்போதைய உலகளாவிய அஸ்திரத்தன்மைக்கு மத்தியில் முகாமைத்துவ கணக்கீடு என்பது வெறும் நிதி அறிக்கையிடல் மாத்திரமல்ல, அரச மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளினதும் சரியான மூலோபாயத் தீர்மானங்களை எடுப்பதற்கு உதவும் முதன்மையான கருவிகளுள் ஒன்றாகும். நாட்டு மக்களின் அர்ப்பணிப்புகள் மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட கடினமான கொள்கை ரீதியான தீர்மானங்களின் காரணமாக இலங்கை இன்று நிதி நெருக்கடியிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருகின்றது. குறிப்பாக உற்பத்தி, சுற்றுலா மற்றும் நிதி ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்துடன் உலக வங்கி இலங்கையை மீண்டும் ’உயர் மத்திய வருமானம் பெறும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு’ என வகைப்படுத்தியிருக்கின்றது. இந்நிலைக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தி, போட்டித்தன்மைமிக்க பலமானதொரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமே நாட்டின் முன் ஏற்பட்டிருக்கும் சவாலாகும்.

கடந்த காலப்பகுதியில் சில அரச நிறுவனங்களும் அமைச்சுக்களும் தமது வருடாந்த நிதி அறிக்கைகளையும் கணக்கீட்டு அறிக்கைகளையும் சமர்ப்பித்திருக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட தலையீடுகளுக்கு மத்தியில் அவ்வறிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிதி அறிக்கைகளை வழங்காத மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தரங்களை மீறும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரச நிர்வாகத்திற்குள் எடுக்கப்படும் தீர்மானங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அல்லாது, சான்றுகள், தரவுகள் மற்றும் அறிவியல் ரீதியான அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும். தற்போதைய உலகளாவிய தேவைகளுக்கு அமைவாக கணக்கீட்டில் தவறிவிடும் சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சமூகச் செலவினங்கள் குறித்தும் கவனத்திற் கொள்வது முக்கியமாகுமென நான் நம்புகின்றேன்.

அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் உயர்தரப் பிரிவிற்கு தொழிற்பயிற்சிப் பாடநெறிகளையும் ஓராண்டு நிறுவனப் பயிற்சியையும் (Internship) உள்ளடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குத் தேவைப்படுகின்றது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் (AI) முன்னோக்கிச் செல்லும் புதிய உலகிற்குப் பொருத்தமான நன்னடத்தை மற்றும் மூலோபாயச் சிந்தனையுடன்கூடிய தொழில்வல்லுநர்களை உருவாக்குவதில் CMA நிறுவனம் உள்ளிட்ட தொழில்சார் நிறுவனங்கள் வழங்கிவரும் பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும் எனப் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin), CPA Australia நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டேல் பின்டோ (Professor Dale Pinto), CMA Sri Lanka நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ஆர். வட்டவல உள்ளிட்ட CMA Sri Lanka உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமளவு அதிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடன் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் பெண் பிள்ளைகளையும் இளம் பெண்களையும் வலுவூட்டும் ஒரு முதன்மை தன்னார்வ நிறுவனமான இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தினால், ஜூலை 19 அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட "ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது விழாவில்" கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் கரங்களால் பெண் பிள்ளைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை விருது வழங்கும் விழாவில் சிறுமிகளின் ஒழுக்கம், நெகிழ்ச்சித்திறன், நேர்மைத்தன்மை மற்றும் பிறருக்குச் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, 338 ஜனாதிபதி விருதுகளும் 12 பிரதமர் விருதுகளும் உள்ளடங்கலாக மொத்தமாக 350 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர்,

பெண் சாரணர் இயக்கத்தின் பிரதான வலிமைகளில் ஒன்று, பின்னணி அல்லது திறமை என்னவாக இருப்பினும் சகல சிறுமிகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதாகும். அதேபோன்று, பதவிகளுக்கும், அதிகாரங்களுக்கோ அன்றி, பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதும், பரஸ்பர பரிவுடன் செவிமடுப்பதும், பிறரின் நலனுக்காக உழைத்தலும் ஒரு உண்மையான தலைவரின் பண்புகளாகும்.

கடந்த காலத்தில் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே இருந்தன. ஆனால் இன்று அனைத்துத் துறைகளிலும் யுவதிகளுக்கும், பெண்களுக்கும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அத்துடன், யுவதிகள் முன்னெப்போதையும் விட அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு யுவதிக்கும், பெண் பிள்ளைக்கும் முன்னுக்கு வருவதற்கும், முன்னேற்றமடைவதற்கும் சம வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டும். இன்று இந்த நாடு இருக்கும் நிலையை விட, சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளம் தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும்.

குறிப்பாக, தற்போதைய பொருளாதார மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு மத்தியில் நிலையான தேசிய முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின், பொருளாதார வளர்ச்சி மாத்திரமன்றி, ஒழுக்கநெறியும் சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட பிரஜைகளை உருவாக்குவது இன்றியமையாததாகும். அதற்காக இலங்கை பெண்கள் சாரணர் இயக்கம் ஆற்றி வரும் பங்களிப்பானது பாராட்டத்தக்கதாகும், என பிரதமர் தெரிவித்தார்.

“தயாராக இருங்கள்” (Be Prepared) என்ற இலட்சிய நோக்கத்தை முன்னிலைப்படுத்தி இயங்கும் பெண்கள் சாரணர் இயக்கம், 1917 மார்ச் 21 ஆம் திகதி, கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையில் செல்வி ஜெனி கால்வர்லி கிரீன் அவர்களால் முதன்முதலாக இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. வயதுப் பிரிவுகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் சமனலி, குடா மிதுரி, பெண் சாரணர், ரேன்ஜர், இளம், விசேட திறமைகளுடைய மற்றும் சமூக பெண் சாரணர் என ஏழு பிரிவுகளின் ஊடாகச் செயற்படும் இவ்வியக்கத்தில், ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த அங்கீகாரம் "ஜனாதிபதி விருது" ஆகும். தமது அடிப்படை சவால்கள், எழுத்துமூல மற்றும் நேர்முகப் பரீட்சைகள் மற்றும் ’பி.பி. சவால்’ (BP Challenge) ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பெண்சாரணர்கள் மாத்திரமே இந்த உயரிய பாராட்டினைப் பெறுவார்கள். ரேன்ஜர் பெண்சாரணர் பிரிவின் மிக உயர்ந்த அங்கீகாரமாகவே பிரதமர் விருது வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல, இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் முதன்மை ஆணையாளர் கலாநிதி குஷாந்தா ஹேரத், ஜனாதிபதி பெண் சாரணர் ஆணையாளர் புஷ்பா பெரேரா, பிரதமர் பெண் சாரணர் ஆணையாளர் திருமதி அருணி கருணாரத்ன உள்ளிட்ட இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருதுகளைப் பெற்ற பெண் சாரணர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் ஒன்பது தசாப்தகால சேவையைப் பாராட்டிய பிரதமர், பெண்களையும், பிள்ளைகளையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்காக அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்காக ஆற்றிய 90 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக இலங்கை முஸ்信லிம் பெண்கள் சங்கத்திற்கு (Ceylon Moor Ladies Union - CMLU) தனது பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இச்சங்கமானது தலைமுறைகள் கடந்து எண்ணற்ற உயிர்களை மாற்றியமைத்த கருணை, பெண் வலுவூட்டல் மற்றும் சமூகத் தலைமைத்துவத்திற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாகுமெனத் தெரிவித்தார்.

ஜூலை 18, கொழும்பு Ramada ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் 90ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போது பிரதமர் இக்கருத்துகளை வெளியிட்டார்.

இந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதையிட்டு இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், தங்களது ஆரம்பக்கால நோக்கத்திற்கு உண்மையாகவும், சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்பவும் தங்களை மாற்றியமைத்துக்கொண்டு, ஒன்பது தசாப்தங்களாகத் தொடர்ச்சியான சேவையை முன்னெடுத்துள்ள தன்னார்வ நிறுவனங்கள் மிகச் சிலவே காணக்கூடியதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்நிகழ்வானது ஒரு நிறுவனத்தின் வரலாற்றைக் கொண்டாடுதல் மாத்திரமல்லாது, யாருடைய வாழ்வு மாற்றியமைக்கப்பட்டதோ அந்தப் பிள்ளைகளுக்கும், எவரது அர்ப்பணிப்பு இந்த அமைப்பைத் தக்கவைத்துள்ளதோ அந்தப் பெண்களுக்கும், இதன் பணிகளால் பலப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் முன்னேற்றமானது பெண்களின் அர்த்தமுள்ள பங்களிப்புடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை வலியுறுத்திய பிரதமர், கல்வி, பொருளாதாரம், சமூகத் தலைமைத்துவம் மற்றும் பொது வாழ்வில் சமமாகப் பங்களிப்பதற்காகப் பெண்களை வலுவூட்டுவதானது நிலையான அபிவிருத்திக்கும், பலமான குடும்பக் கட்டமைப்பிற்கும் மற்றும் அதிக நெகிழ்ச்சித்திறன் கொண்ட சமுதாயத்திற்கும் அடிப்படை அடித்தளமாகும் எனத் தெரிவித்தார். தரமான கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்புகள் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றிற்கான சமமான அணுகல் மூலம் ஒவ்வொரு பெண்ணும் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

உண்மையான நலன்புரி என்பது உடனடி உதவிகளை வழங்குதல் மாத்திரம் அல்ல எனவும், கல்வி, திறன் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதன் மூலம், மனிதர்களுக்கு பாதுகாப்பான கௌரவமான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளத்தக்க வகையில் வலுவூட்டுதலாகும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

பாதிப்புகளுக்கு உள்ளாகத்தக்க சமூகங்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், வலுவூட்டல் மற்றும் சுதந்திரத்திற்கான வழிகளை உருவாக்கும் நலன்புரி அமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதமர் வலியுறுத்தினார்.

சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பினைப் பற்றி கருத்து தெரிவித்த பிரதமர், அரசாங்கங்கள் கொள்கைகளை வகுத்து பொதுச் சேவைகளை வழங்கி வந்த போதிலும், பல சமூகச் சவால்களை எதிர்கொள்வதற்குச் சமூக அமைப்புகளின் கருணை, அர்ப்பணிப்பு, தலையீடு ஆகியன கட்டாயத் தேவைகள் ஆகும் எனக் குறிப்பிட்டார். அரசாங்க நிறுவனங்களுக்கும் இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கும் இடையிலான கூட்டுறவு மூலம், சிறுவர் பாதுகாப்பைப் பலப்படுத்துதல், குடும்பங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூகங்களைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றிற்குப் பாரிய பங்களிப்பை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் வாழ்நாள் கால அங்கத்தவர்களுக்கான கௌரவிப்புகளை வழங்கி வைத்த பிரதமர், நற்பண்புகள் கொண்ட இளம் பெண்களை வளர்த்தெடுப்பதற்கும், அவர்களிடம் நெகிழ்ச்சித்திறன் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், கருணை மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கும் அவர்கள் கொண்டுள்ள தளராத அர்ப்பணிப்பைப் பாராட்டியதோடு, நிலையான அபிவிருத்தியை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு இத்தகைய பண்புகள் இன்றியமையாதவை எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் 90ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விசேட நினைவு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், அதன் முதல் பிரதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்திய ரிஸ்வி சாலிஹ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ், மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வ்ராய் கெலீ பல்தஸார், தூதுவர்கள், இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், விசேட விருந்தினர்கள், பிள்ளைகள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 ஜூலை 18, அலரி மாளிகையில் வைத்து, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மகா சங்க நாயக்க தேரர்கள் குழுவினரைச் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்பில், அதிவணக்கத்திற்குரிய ப்ரா தம்மவஜிரபண்யாசார்ய மஹாதேரர், வட் ப்ரா செதுபொன் விமோல்மங்கலாராம் ராஜவரமஹாவிஹாரையின் பிரதி விகாராதிபதி, மஹாசுலாலொங்கோர்ன்ராஜவித்யாலய பல்கலைக்கழகத்தின் திரிபிடக கல்வி மையத்தின் பணிப்பாளர் தேரர் உள்ளிட்ட தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் பௌத்தத் தொடர்புகள், மத மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துதல் குறித்து சுமுகமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

கலந்துரையாடலின் நிறைவில், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் நீண்டகால பௌத்த மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வளர்த்தல் குறித்து சிநேகபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் இறுதியில், இரு நாடுகளுக்கு இடையிலும் நிலவி வரும் நீண்ட கால பௌத்த மற்றும் கலாசார உறவினைச் சித்தரிக்கும் வகையில், தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்களினால் பிரதமருக்கு விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நினைவுப் பரிசுகள் இரு நாடுகளினதும் பொதுவான பௌத்த பாரம்பரியம், கலாசார விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதையைப் பிரதிபலிக்கும் நினைவுச் சின்னங்களாக அமைந்தன.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளைத் தகர்த்து, அவர்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் CCWE வழங்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது

2026 ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற, இலங்கை பெண் தொழில்முனைவோர் சபையினால் (Ceylon Chamber of Women Entrepreneurs - CCWE) ஏற்பாடு செய்யப்பட்ட CCWE Fashion Week & International Summit 2026 நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

"Threads of Inclusion – Woven from Every Walk of Life" எனும் தலைப்பின் கீழ் 2026 ஜூலை 16 முதல் 19 வரை நடத்தப்படும் இந்த CCWE Fashion Week & International Summit 2026 , Fashion துறையில் பெண்களின் பங்களிப்பு, பெண் வலுவூட்டல், தொழில்முனைவோர் திறன் மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றிற்கானதொரு தளத்தையும் உரையாடலையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்காசியா முழுவதிலுமிருந்தும் பெண் தொழில்முனைவோர், Fashion வடிவமைப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர், இந்த மாநாட்டின் மூலம் புத்தாக்கம், தலைமைத்துவம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், பெண்களை வலுவூட்டும் வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கும், புதிய சந்தை வாய்ப்புகளுக்கான அணுகலை அதிகரிப்பதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர்,

Fashion என்பது பெண்களின் பன்முகத்தன்மையையும் அவர்களின் தனித்துவத்தையும் பிரதிபலிக்கும் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாட்டு ஊடகமாகும் என்றும், அதேபோன்று, பெண்கள் மீது சமூகத்தினால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் கடுமையான சமூக எதிர்பார்ப்புகளும் இந்த Fashion ஊடாகப் பிரதிபலிக்கப்படுவதனால், இது சமூக விவாதத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் ஒரு முக்கியமான இடத்தை உருவாக்குகிறது என்றும் குறிப்பிட்டார்.

CCWE Fashion வாரம் மற்றும் சர்வதேச மாநாடு போன்ற திட்டங்கள் மூலம் பாரம்பரிய எல்லைகளுக்குச் சவால் விடுத்து, பெண்களின் பங்களிப்பிற்கு நீண்டகாலமாக முட்டுக்கட்டையாக இருந்த தடைகளைத் தகர்த்து, பெண்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களை வலுவூட்டுவதற்குமானதொரு இடத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

அத்தோடு, பெண்களை வலுவூட்டுதல் மூலமாக பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இலங்கையின் பல நுண் மற்றும் சிறு கைத்தொழில் துறைகளின் முதன்மை உந்துசக்தியாகப் பெண்களே விளங்குகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை பெண் தொழில்முனைவோர் சபையின் தலைவி கலாநிதி அயந்தி குருசிங்க, அச்சபையின் உறுப்பினர்கள், தெற்காசியா முழுவதிலுமிருந்தும் வருகை தந்த பெண் தொழில்முனைவோர், Fashion வடிவமைப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு