பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

The true objectives of the Central Cultural Fund are now being delivered. - Prime Minister Dr. Harini Amarasuriya

Rs. 180 million has been allocated solely from the Central Cultural Fund for the conservation of Gallangolla Mulamaha Viharaya

The Prime Minister Dr. Harini Amarasuriya made these remarks on June 19 while attending the commencement of restoration work at the Pothgul Mulamaha Viharaya in Gallangolla, Welamboda, Udunuwara, which was damaged by Cyclone Ditwah. The restoration project is being undertaken jointly by the Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs and the Central Cultural Fund.

The restoration activities at the temple commenced under the guidance of the Chief Incumbent of the temple, Venerable Ambanpola Sarada Nayaka Thero.

Addressing the occasion, Prime Minister Dr. Harini Amarasuriya stated:

The true objectives of the Central Cultural Fund are now being delivered effectively. Rs. 185 million has been allocated for the conservation of Gallangolla Moolamaha Viharaya solely from the Fund’s allocations. This clearly demonstrates how much more could have been accomplished if the resources of the Central Cultural Fund had not been misused in the past.

The government collects revenue not to keep it in the Treasury or for any other purpose, but to return benefits to the people. The government has allocated Rs. 500 million for relief efforts related to the cyclone Ditwah. We are also taking steps to construct 15,000 houses. All of this is being done without resorting to additional borrowing.

At the same time, if we are to move towards the transformative era we aspire to achieve as a government, economic development alone is not sufficient. We must develop every sector, including our heritage, culture, and education. In particular, if we are to pass on our heritage and culture to future generations, we must protect them today. By conserving the Gallangolla Pothgul Mulamaha Viharaya, not only will this important heritage site be safeguarded, but the entire area will also benefit and develop.

Speaking at the event, the Minister of Buddhasasana, Religious and Cultural Affairs, Hiniduma Sunil Senevi, stated:

The Central Cultural Fund has allocated Rs. 504 million for the restoration of seven major religious sites that were damaged by Cyclone Ditwah and the largest allocation Rs. 185 million has been granted to this temple. All of these funds have been provided from the allocations of the Central Cultural Fund.

The event was attended by the Maha Sangha led by Venerable Godamunne Pangnakitti Nayaka Thero, Chief Sanghanayake of the Central Province of the Ramanna Nikaya and Principal of the Udunuwara Nigrodhakeththa Maha Pirivena; Deputy Minister of Health Hansaka Wijemuni; Members of Parliament; public representatives; officials of the Central Cultural Fund and the Department of Archaeology; other government officials; and a large number of residents of the area.

Prime Minister’s Media Division

அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற செயற்பாடுகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நமது நாட்டிற்குத் தேவையான எதிர்காலத் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமாயின், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தில் கல்விசார் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட பிரதமர், ஜூன் 18 பொல்பிதிகம தேசிய பாடசாலையில் நடைபெற்ற "புஞ்சி ஹப்பன்னு 2026" ஆரம்பப் பிரிவு இலக்கியத் திறன் மதிப்பீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

பொல்பிதிகம வலயக் கல்விப் பணிப்பாளரின் எண்ணக்கருவிற்கு அமைய, குறித்த வலயத்திலுள்ள 49 ஆரம்பப் பாடசாலைகளின் மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற "புஞ்சி ஹப்பன்னு 2026" மொழி மற்றும் இலக்கியத் திறன் போட்டிகளில் வெற்றிகொண்ட மாணவர்களைக் கௌரவிப்பதற்காக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 17 வகையான போட்டிப் பிரிவுகளின் கீழ் வெற்றிகொண்ட மாணவர்களின் அழகியல் செயற்பாடுகளால் இவ்விழா மெருகூட்டப்பட்டது.

போட்டிகளில் வெற்றிகொண்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கான சான்றிதழ்கள் பிரதமரின் தலைமையில் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

பொல்பிதிகம கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, முழு நாட்டிற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். ஆரம்பக் கல்வி என்பது மிகப் பரந்த எல்லைகளைக் கொண்ட ஒரு துறையாகும். ஒரு பிள்ளையைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்கு, ஆரம்பக் கல்வி மூலம் வழங்கப்படும் அடிப்படை அத்திவாரம் மிக முக்கியமானது. ஒரு பிள்ளைக்கு ஆரம்பக் கல்வியைப் பயிலும் வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கிறது. ஆகையினால் அதை நாம் பிள்ளைக்குச் சரியான முறையில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பொல்பிதிகம கல்வி வலயப் பிள்ளைகள் தமது அழகியல் திறமைகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியதை இன்று நாம் கண்டோம். அதுபோலவே, முழு இலங்கையிலும் மறைந்திருக்கும் திறமைகளைக் கொண்ட பிள்ளைகளுக்குத் தமது ஆற்றல்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கவே நாம் முயற்சி செய்து வருகின்றோம்" என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பொல்பிதிகம கல்வி வலயத்தின், மகுல்பொத மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு அமைக்கப்படவுள்ள புதிய இரண்டுமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொண்டார்.

45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இக்கட்டிட நிர்மாணப் பணிகள் 2026 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டு, 2027 ஜனவரி மாதம் மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், விவசாய மற்றும் கால்நடைத் துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கீதா ஹேரத், வடமேல் மாகாண கல்வி அதிகாரிகள், பெற்றோர், அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் அது அரசாங்கத்தினதும் ஆசிரியர் குழாமினதும் மாத்திரம் பொறுப்பல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மஹவ, வலகஸ்வெவ குணபால மலலசேகர மாதிரி வித்தியாலயத்தின் புதிய இருமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

1936 ஆம் ஆண்டு பன்சலைக்குச் சொந்தமான பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அரச பாடசாலையாக மாறிய இப்பாடசாலையானது, பல்வேறு காரணங்களினால் 2004 ஆம் ஆண்டு மூடப்பட்டது. எவ்வாறாயினும், மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, இன்று சுமார் 1300 மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு சிறப்பான கல்வி நிறுவனமாக வளர்ந்திருக்கின்றது.

விழாவில் உரையாற்றிய பிரதமர்,

இப்பாடசாலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீட்டிற்கு அப்பால், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்ட வேண்டும். பாடசாலை மாணவர்களின் கல்வியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் ஆசிரியர் குழாமினதும் பொறுப்பு மாத்திரமல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பொறுப்பாகும். 2026 ஆம் ஆண்டளவில் அடிப்படை வசதிகள் அற்ற பாடசாலைகள் இருக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதோடு, அதற்கான பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

புத்திசாலி மற்றும் புத்திசாலியற்ற மாணவர்கள் என எவரையும் வகைப்படுத்த இயலாது. ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏதோ ஒரு திறமை இருக்கவே செய்கின்றது. அந்தத் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்பதே கல்வி முறைமையின் பொறுப்பாகும்.

அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முதலீடுகளினதும் இறுதி நோக்கம், நடைமுறைச் சிந்தனை கொண்ட, ஆக்கத்திறன் மிக்க உறுதியான பிரஜைகளை உருவாக்குவதேயாகும். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், உலகில் உருவாகி வரும் புதிய துறைகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்பை நாம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம், என பிரதமர் தெரிவித்தார்.

376 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய இருமாடிக் கட்டிடத்தில் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஓர் அலுவலக அறை உள்ளடங்குவதுடன், இவ்வருட இறுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா ஹேரத், மஹவ பிரதேச சபை தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண பிரதம செயலாளர் சந்தன வன்னிநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.ஐ.எம்.ஏ. ஜின்னா உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர், ஆசிரியர் குழாமினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளைத் திறந்து கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளுக்கு வழி காட்டி, அவர்களது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பதற்கான பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஜூன் 18 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கல்விசார் கண்காணிப்பு விஜயத்தின்போது, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, 2025 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் பாடநெறிசார் செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் பரிசில்களை வழங்கி வைத்தார். அத்தோடு, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ பாடசாலைப் பத்திரிகையான "ஆதர்ஷ பிரபா" இதழும் பிரதமரால் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இவ்வாறான பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இவ்வாறான பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் சந்திக்கும்போதே, நாட்டின் கல்வியை உயர் மட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற எமது உறுதிப்பாட்டை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற ஊக்கம் எமக்குக் கிடைக்கின்றது. பிள்ளைகளின் முகங்களில் மகிழ்ச்சி தவழும், அன்பு,பாதுகாப்பு நிறைந்த சூழலைக் கொண்ட பாடசாலைகளையே நாம் காண விரும்புகிறோம்.

ஒரு நாடு என்ற வகையில் எம் முன் பல சவால்கள் உள்ளன. நீண்ட காலமாக எமது நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கிய பின்னடைவை நாம் இப்போதே படிப்படியாகச் சீர்செய்து வருகின்றோம். உலகளாவிய ரீதியிலும் தட்பவெப்பநிலை ரீதியிலும் ஏற்படும் மாற்றங்கள் எமது நாட்டையும் பாதிக்கின்றன. ஆகையினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே அந்தச் சவால்களை முறியடிக்கக் கூடியதாக இருக்கும்.

கல்வித் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் அனைத்துத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். இது பாடத்திட்ட அபிவிருத்தி மாத்திரமல்லாது, கல்வித் துறையின் மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் என, புதிய உலகிற்குத் தேவையான திறன்களைப் பிள்ளைகளுக்கு வழங்கும் பரந்த அளவிலான ஒரு செயற்பாடாகும். எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகள் நமக்காக திறந்துள்ளன என்ற எண்ணத்தையும், அவர்களின் கனவுகளை நோக்கிப் பயணிப்பதற்கான நம்பிக்கையையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

எதிர்காலத்திலும் கல்வித் துறையில் பல புதிய மாற்றங்களுடன் முன்னோக்கிச் செல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். கல்வி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலுடன் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேபோன்று, ஆசிரியர் பயிற்சிச் செயல்முறையை மிகவும் பலமான முறையில் மேற்கொள்வதன் மூலம், மாணவர்களுக்குப் பயனுள்ள கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும், என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி ஆரம்பப் பாடசாலையிலும் பிரதமர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

அத்தோடு, மஹவ, ரிதிபெந்திஎல்ல, கஜநெக்கம மகா வித்தியாலயத்திற்கும் விஜயம் செய்த பிரதமர், அப்பாடாசாலை ஆசிரியர் குழாமினருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, அப்பகுதி மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காகப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களுக்குத் தனது கௌரவத்தையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, விவசாய மற்றும் கால்நடைத் துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக குணசேன, கீதா ஹேரத், குருணாகல் பிரதேச சபை தலைவர் எம்.ஏ. விமலசிறி, மஹவ பிரதேச சபை தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண பிரதம செயலாளர் சந்தன வன்னிநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் வடமேல் மாகாண கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், குறித்த விடுதிகளின் அத்தியாவசிய வசதிகளை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 1,008 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில், 2026-2028 காலப்பகுதியில் இப்பாடசாலை விடுதிகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு

Special attention must be directed to food security, water management, and energy management in preparation for the anticipated impacts of El Niño. - Prime Minister Dr. Harini Amarasuriya

It is important to enhance the services such as day-care centres and vocational training programmes for persons with disabilities, and community-based activities for older persons.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that special attention should be directed towards food security, water management, and energy management in preparation for anticipated impacts of El Niño.

The Prime Minister made these remarks while attending the Colombo District Coordinating Committee meeting held today (16) at the Colombo District Secretariat.

During the meeting, attention was focused on the progress of development programmes planned for 2026 as at 15 June 2026, including the Decentralized Budget Programme, Rural Roads Programme, Disaster Risk Reduction Projects, the Prajashakthi Programme, and projects implemented under line ministries.

While reviewing projects being implemented under the Ministry of Sports, a decision was taken at the meeting to establish a Sports Sub-Committee for the Colombo District and Minister of Sports and Youth Affairs Mr. Sunil Kumara Gamage stated that future activities would be planned through this sub-committee.

Prime Minister Dr. Harini Amarasuriya also emphasized the need to pay special attention to the development of sports activities in rural schools.

Highlighting the importance of preparing for the direct impacts of the anticipated El Niño weather conditions in Sri Lanka and the global challenges following the situation, the Prime Minister emphasized the need to focus on food security, water management, and energy management. The Prime Minister further noted the importance of conducting awareness programmes on energy conservation and the efficient use.

Commenting on the programme to improve accessibility for persons with disabilities implemented under the Prajashakthi Programme, the Prime Minister stated that special attention should also be given to strengthening services such as day-care centres and vocational training programmes for persons with disabilities, and community-based activities for older persons.

The event was attended by Deputy Speaker Dr. Rizvie Salih, Deputy Minister of Media Dr. Kaushalya Ariyarathne, Chairman of the Colombo District Coordinating Committee and Member of Parliament Lakshman Nipuna Arachchi, Colombo District Secretary Ginige Prasanna Janaka Kumara, public representatives of the Colombo District, government officials, and other invitees.

Prime Minister’s Media Division