பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

දිස්ත්‍රික් මට්ටමින් විශේෂ අවධානයක් යොමු කර දිට්වා ආපදා සඳහා වන වන්දි ලබා දීම සහ ප්‍රතිසංස්කරණ කටයුතු කඩිනම් කරන්න - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

පළාත් සභා වෙත අවශ්‍ය ප්‍රතිපාදන වෙන් කර ඇති බැවින් අපදා හානි සහ ප්‍රතිසංස්කරණවල ප්‍රගතිය පළාත් මටටමින් සොයා බලන්න.

දිස්ත්‍රික් මට්ටමින් විශේෂ අවධානයක් යොමු කර දිට්වා ආපදා සඳහා වන වන්දි ලබා දීම සහ ප්‍රතිසංස්කරණ කටයුතු කඩිනම් කරන ලෙසත්, පළාත් සභා වෙත මේ වන විට සියලු ප්‍රතිපාදන වෙන් කර ඇති අතර අපදා හානි සහ ප්‍රතිසංස්කරණවල ප්‍රගතිය පළාත් මටටමින් සොයා බලන ලෙසත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

Rebuilding Sri Lanka වැඩසටහනේ ක්‍රියාකාරකම් කඩිනම් කිරීම වෙනුවෙන් ආපදාවට පත් දිස්ත්‍රික්කයන්හි ප්‍රාදේශිය සම්බන්ධීකරණ කමිටු සභාපතිවරුන් සහ මහජන නියෝජිතයින් දැනුවත් කිරීම සඳහා අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියගේ ප්‍රධානත්වයෙන් අරලියගහ මන්දිරයේ අද (21) පැවති සාකච්ඡාවේදී අග්‍රාමාත්‍යතුමිය මේ බව පැවසීය. අපදා සහන සහ වන්දි ලබාදීම් කඩිනම් කිරීමත්, අපදාවෙන් යටිතල පහසුකම්වල සිදු වූ හානි කඩිනමින් ප්‍රතිසංස්කරණය කිරීමත් අරමුණු කර ගනිමින් මෙම සාකචඡාව පැවැත්විය.

දිට්වා සුළිකුණාටුවෙන් සිදු වූ හානි වෙනුවෙන් රුපියල් බිලියන 500ක් වෙන් කර ඇති අතර 2026 වසර අවසන් වීමට පෙර අදාල සංවර්ධන කටයුතු සිදු කර අවසන් විය යුතු බවත්, හානි සඳහා වන වන්දිගෙවීම් ප්‍රමාද වීමට ප්‍රාදේශිය මට්ටමින් පවතින ගැටලු පිළිබඳ විශේෂ අවධානයක් යොමු කරන ලෙසත් මෙහිදී අග්‍රාමාත්‍යතුමිය උපදෙස් ලබා දුන්නාය.

දිට්වා සුළිකුණිටුව නිසා සිදු වූ හානිවල ප්‍රතිසංස්කරණ කටයුතු සඳහා දළ වශයෙන් ඩොලර් බිලියන 3.4ක් ලෙස ඇස්තමේන්තු කර ඇති බවත්, ඒ අනුව නිවාස හා සමාජ යටිතල පහසුකම්, කෘෂිකර්ම සහ පශු සම්පත්, ධිවර, කර්මාන්ත හා ජීවනෝපාය,වාරිමාර්ග ඇතුළු ක්ෂේත්‍ර ගණනාවක් වෙනුවෙන් වන්දි ලබා දීමට මුදල් වෙන් කර ඇති බවත් මෙහිදී කරුණු දැක්වූ Rebuilding Sri Lanka ජනාධිපති කාර්යය සාධක බලකායේ ලේකම්, ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම් ජී.එම්. ආර්.ඩී. අපොන්සු මහතා පැවසුවේය. 25000 දීමනාව ලබා දීම මේ වන විට 99%ක් අවසන් කර ඇති අතර නැවත පදිංචිය සඳහා ලබා දෙන රුපියල් 50,000 දීමනාව ගෙවිම 95%ක් අවසන් බවද ඒ මහතා පෙන්වා දුන්නේය. පූර්ණ හානි සිදු වූ නිවාස  සහ අර්ධ හානි සිදු වූ නිවාස සඳහා වන වන්දි ගෙවීම් තවමත් සිදු වන අතර සුරක්ෂා මධ්‍යස්ථාන වසා දැමීම 99%ක් අවසන් කර ඇති බවද අවධාරණය කළේය.

මීට අමතරව ආපදාවට පත් පාසල් සිසුන් සඳහා රුපියල් 25000ක් ලබා දීම, ආපදාවෙන් මිය ගිය පුද්ගලයෙක් වෙනුවෙන් රුපියල් මිලියනය බැගින් වන්දි ගෙවීම, මව හෝ පියා අහිමි වූ දරුවන් සහ මව, පියා දෙදෙනාම අහිමි වූ දරුවන් සඳහා වන්දි ගෙවීම, අපදාවට ලක් වූ විශේෂ අවශ්‍යතා ඇති පුද්ගලයින් සඳහා වන්දි ගෙවීම, හානි වූ කෘෂිකර්මික කටයුතු සඳහා වන්දි ගෙවීම මෙන්ම අපදාවට පත් නිවාසවල ජනතාව නැවත පදිංචි කිරීමේ කටයුතු කඩිනම් කිරීම, නව නිවාස ඉදිකිරීම සඳහා ඉඩම් වෙන් කරගැනීම මෙන්ම ගොඩනැගිලි පර්යේෂණ ආයතනයේ වාර්තා ලබා ගැනීම කඩිනම් කිරීම ඇතුළු කරුණු ගණනාවක් පිළිබඳ මෙහිදී අවධානය යොමු කෙරිණ.

ආපදාවට පත් පාසල්, රෝහල්, දිවා සුරැකුම් මධ්‍යස්ථාන ප්‍රතිසංස්කරණය කිරීම, ප්‍රාදේශිය මට්ටමින් දත්ත නිවැරදිව ලබා ගැනීම කඩිනම් කිරීම සහ යටිතල පහසුකම් කඩිනමින් සංවර්ධනය කිරීම පිලිබඳව ද මෙහිදී අවධානය යොමු කෙරිණි.

මෙම අවස්ථාවට වැවිලි සහ ප්‍රජා යටිතල පහසුකම් අමාත්‍ය සමන්ත විද්‍යාරත්න, රාජ්‍ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය ආචාර්ය චන්දන අබයරත්න, කෘෂිකර්ම සහ පශු සම්පත් නියෝජ්‍ය අමාත්‍ය නාමල් කරුණාරත්න, වෙළඳ, වාණිජ, ආහාර සුරක්ෂිතතා සහ සමුපකාර නියෝජ්‍ය අමාත්‍ය ආර්. එම් ජයවර්ධන, අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය වෛද්‍ය මධුර සෙනෙවිරත්න, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්, ප්‍රාදේශිය සම්බන්ධිකරණ කමිටු සභාපතිවරුන්, ජනාධිපති කාර්ය මණ්ඩල ප්‍රධානී සහ  අත්‍යවශ්‍ය සේවා කොමසාරිස් ජනරාල් ප්‍රභාත් චන්ද්‍රකීර්ති, ජනාධිපති අතිරේක ලේකම් ජයන්ත බණ්ඩාර යන මහත්ම මහත්මීන් සහ අග්‍රාමාත්‍ය කාර්යාලයේ නිලධාරීන් ඇතුළු පිරිසක් සහභාගී විය. 

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

இந்தியாவின் உப ஜனாதிபதி திரு. ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி திரு.ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

​அலரி மாளிகைக்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றதோடு, இந்தியாவின் உப ஜனாதிபதியாகப் பதவியேற்றமைக்காக திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

​இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவெனக் குறிப்பிட்ட இந்திய உப ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புகளுக்காகத் தனது நன்றியினையும் இதன்போது வெளிப்படுத்தினார்.

​இச்சந்திப்பில் இந்தியத் தூதுக்குழு சார்பில் இந்திய மீன்பிடி, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி கே. லக்ஷ்மன், கலாநிதி மேதா விஷ்ரம் குல்கர்னி, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும்,

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

​பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழா

சுபவேளையில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வைத்து, புத்தாண்டுச் சடங்குகளில் பிரதமர் பங்கேற்பு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன.

சம்பிரதாயபூர்வமாக அமைந்த புண்ணிய காலத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கம்பஹா, மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் காரக சங்க சபை உறுப்பினரும், மெதகம ஸ்ரீ சுனந்தாராம தர்மதூத பிரிவெனா மகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய துன்மோதர சமித்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, கம்பஹா திரு. தர்ஷன வீரசிங்கவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கலாசார விழாவில் பங்கேற்ற பிரதமர், ’வேலை ஆரம்பிக்கும்’ சுபவேளை உதயமானதும், இல்லத்தினரின் அழைப்பின் பேரில் அவ்வீட்டு வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டுவைத்தார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டு விவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இதன்போது பிரதமருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் அங்கிருந்த சிறுவர்களுடன் பாரம்பரிய தேசிய விளையாட்டுகளில் ஈடுபட்டார்.

தொடர்ந்து வந்த சுபவேளையில், கல்வி கற்பதில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுடன் இணைந்து அவர்களுக்கு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் வழிகாட்டிய பிரதமர், நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் கல்வி மேம்பாட்டுக்கான சுப ஆரம்பத்தையும் உறுதிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமரும் ஏனைய அதிதிகளும் இல்லத்தினருடன் கைவிசேடம் செய்தல், பரிசுப் பரிமாற்றம் ஆகியவற்றில் பங்கேற்றனர். பின்னர் புத்தாண்டுக்கான உணவு உண்ணும் சடங்கிலும் கலந்துகொண்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சௌபாக்கியம் மிக்க புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இலங்கை எதிர்கொண்ட பல்வேறு சவால்களைச் சரியாக முகாமைத்துவம் செய்வதற்குப் பங்களிப்பு வழங்கிய உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உரையாற்றுகையில், "சூரியப் புத்தாண்டானது புத்துணர்வையும் தூய்மையையும் பிரதிபலிப்பதுடன், சூரியன் நம் அனைவருக்கும் உயிர் கொடுப்பதை இது நினைவூட்டுகின்றது" எனக் குறிப்பிட்டு, அனைவருக்கும் அமைதி மற்றும் சௌபாக்கியம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம மற்றும் கம்பஹா மாவட்டச் செயலாளர், மாநகர முதல்வர், பிரதேசச் செயலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது.

புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பரஸ்பர உறவுகளின் புதிய மறுமலர்ச்சியாகும்.

குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, சுப நேரத்தில் சுப காரியங்களை ஆரம்பித்து இந்தப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மக்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக இது அமைய வேண்டும் என முதலில் பிரார்த்திக்கின்றேன்.

ஒரே சுப வேளையில், பலவிதமான கலாசாரச் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைபிடிப்பதன் மூலம், முழு நாடும் ஒரே தாளத்தின் கீழ் ஒன்றிணைவதே இந்தப் புத்தாண்டில் நாம் காணும் விசேட குணாம்சமாகும். பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும், ஒரு குடும்பமாகவும் ஒரு நாடாகவும் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு இக்காலப்பகுதி எமக்கு ஒரு பெறுமதிமிக்க வாய்ப்பை வழங்குகின்றது.

மனப் பேதங்களையும் கசப்புணர்வுகளையும் களைந்து, சகோதரத்துவத்துடனும் சிநேகத்துடனும் ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வதே புத்தாண்டின் உண்மையான ஆசீர்வாதமாகும். குறிப்பாக, இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த காலங்களில் ஒரு தேசமாக நாம் பல்வேறு இயற்கை மற்றும் பொருளாதாரச் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட விதம் முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியாகும். அந்தக் கூட்டுச் சக்தியைத் தொடர்ந்தும் பேணுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

இந்தச் சுப வேளையில், வெளிநாடுகளில் தமது குடும்பத்தினதும் தேசத்தினதும் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் நமது சகோதர சகோதரிகள் அனைவரையும் நான் மிகுந்த கௌரவத்துடன் நினைவுகூருகின்றேன். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பரந்து வாழும் உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான எதிர்காலம் அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

எதிர்கொள்ள நேரிடும் எல்லாவித தடைகளையும் வென்று, இன்னும் சிறப்பானதும் சுபீட்சமானதுமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் புதிய சிந்தனைகளுடன் திடசங்கற்பம் பூணுவோம். ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் பங்காளிகளாக, உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியும் உதயமாகும் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் அயராது உழைப்போம்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.

நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையத்தைப் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்

பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை உறுதிப்படுத்தப்படும்

ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதும், பல வருடங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதுமான கொழும்பு மத்திய பஸ் நிலையம், தற்போதைய அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மத்திய பஸ் நிலையம், காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, ஏப்ரல் 08 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான, வசதியான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

மறுசீரமைப்புப் பணிகளின் போது பெண்களின் வசதிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தமையைப் பிரதமர் இதன்போது பாராட்டினார். குறிப்பாக, தூர இடங்களிலிருந்து வருகை தரும் பாலூட்டும் தாய்மார்களுக்காக, அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஓய்வறை பிரதமரின் விசேட பாராட்டைப் பெற்றது.

பயணிகளுக்கான ஆசன ஒதுக்கீடு முறைகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பஸ் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு அறை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதமர் நேரில் பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது, பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடிய பிரதமர், நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் மற்றும் போக்குவரத்துச் சேவையின் தரம் குறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பொதுமக்கள் கௌரவமான முறையில் பயன்படுத்தக்கூடியதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான சேவையாகவும் மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என இதன்போது பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திற்கு நவீனமயமாக்கும் பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்

கோட்டை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் பணிகளுக்காக 2,162 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு திருப்புமுனையை அடையாளப்படுத்தும் வகையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று ஏப்ரல் 09, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த "புகையிரத வினைத்திறனை மேம்படுத்தும் திட்டத்திற்காக", ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதிப் பங்களிப்பு மற்றும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 2,162 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி முதலீடு செய்யப்படவுள்ளது.

அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக, தினசரி புகையிரதச் சேவையைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக,

பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக நவீன தானியக்க பயணச்சீட்டு வழங்கல் முறைமைகளை அறிமுகப்படுத்துதல். விசேட தேவையுடையோர் மற்றும் முதியோர் தடையின்றிப் பயணிக்கும் வகையில் நவீன மின்தூக்கிகள் மற்றும் மேம்பாலக் கட்டமைப்புகளை நிர்மாணித்தல். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கட்டடத் தொகுதிகள் மற்றும் உயர்தரத்திலான சுகாதார வசதிகளை நிறுவுதல் ஆகியன உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

இத்திட்டம் பூர்த்தி செய்யப்படும்போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையமானது பயணிகளை மையப்படுத்திய, வினைத்திறனான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரதான போக்குவரத்து மையமாக மாற்றமடையும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

அபிவிருத்தியடைந்த பொதுப் போக்குவரத்து இல்லாத ஒரு நாட்டை, அபிவிருத்தியடைந்த நாடாகக் கருத முடியாது. எமது கொள்கையின் நோக்கம் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாகவும் கௌரவமாகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையான போக்குவரத்து கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதி அமைச்சர்களான பிரசன்ன குணசேன மற்றும் எரங்க குணசேகர, கொழும்பு பிரதி முதல்வர் ஹேமந்த வீரசிங்க ஆகியோரும் புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய உள்ளிட்ட அமைச்சு மற்றும் புகையிரதத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு