பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் முதலாம் கட்டம் பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சம சலுகைகளைக் கொண்ட கல்வி முறையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு, சரியான தரவு முகாமைத்துவத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் என்ற வகையில், எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய கல்வி முறையொன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்காகச் சரியான தரவுகள், கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அலரி மாளிகையில் 2026.06.06 நடைபெற்ற தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் (NEMIS) மனிதவள முகாமைத்துவ மொடியுலின் முதலாம் கட்டம் மற்றும் ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமையின் முன்னோடித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தங்களின் ஐந்து பிரதான தூண்களின் கீழ் உள்ள மனிதவள முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத் துறைகளின் பணிகளை மிகுந்த வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்காக இந்தத் தகவல் முறைமை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் மாகாணங்கள் வெவ்வேறான தகவல் முறைமைகளைப் பயன்படுத்தி வந்தன, இந்த முறைமையின் மூலம் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் அனைத்துத் தகவல்களும் ஒரே கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக மனிதவள மொடியுல் வெளியிட்டு வைக்கப்பட்டது, இந்த முதலாவது மொடியுலின் கீழ் சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் ஆகிய நான்கு மாகாணங்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் இந்த முறைமையின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், பின்னர் இது முழு நாட்டிற்கும் விரிவுபடுத்தப்படும்.

எதிர்வரும் காலங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்ற மொடியுல்கள் மூலம் பாடசாலைகளின் சகல கல்விசார் பணியாளர்களின் மனிதவள முகாமைத்துவத்தினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது

இத்திட்டமானது பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கல்வித் துறையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான செயலணி, மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகள், தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய சகல தரப்பினர்களும் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்குச் சமாந்தரமாக ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS), பற்றிய முன்னோடி திட்டமும் வெளியிடப்பட்டதோடு, இது டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்தி மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டுச் செயன்முறைகளை மேம்படுத்த வழிவகுக்கும்.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

கல்விக் கட்டமைப்பின் ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறாக தனிமையில் இயங்குவதற்கு பதிலாக நாம்,"கல்வி நிர்வாகம், கற்பித்தல் செயன்முறை மற்றும் கல்வி உள்ளடக்கங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, கல்விக் கட்டமைப்பின் பிரிவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்திருக்கின்றோம். நாம் ஆரம்பித்த அந்த செயலானது எளிதான ஒன்று அல்ல.

எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரை டிஜிட்டல் மயமாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாமும் மாற்றம் பெற்று முன்னோக்கிச் செல்ல வேண்டும். அரச சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களுக்கு வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியம் என நாம் நம்புகிறோம். குறிப்பாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தங்களுக்குத் துல்லியமான தரவுகள் அவசியமாகின்றன. இந்தத் தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் (NEMIS) ஊடாகத் துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்வதுடன், கல்வியின் வெளிப்படைத்தன்மையையும் தரத்தையும் உறுதிப்படுத்த முடியும்.

அனைத்துத் தேசிய பாடசாலைகளும் மிக விரைவில் இந்த முறைமைக்குள் உள்வாங்கப்படும். ஏற்கனவே சில மாகாணங்களின் ஆசிரியர்களின் தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளை மிகவும் வெளிப்படையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

அரச சேவைகளை இவ்வாறு டிஜிட்டல் முறைமைக்கு மாற்றும்போது, அவற்றைப் பயன்படுத்தக்கூடிய அறிவுள்ள பிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும். அதன் பிரதான பொறுப்பு கல்வித் துறையையே சாரும். அதனாலேயே, ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமையின் மூலமாக மனிதவளத்தை மேம்படுத்தும் செயன்முறையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

டிஜிட்டல் மயமாக்கல் என்பது ஆசிரியருக்கு மாற்றீடு அல்ல. கல்வி என்பது ஒன்றோடொன்று தொடர்புடையதாகும். வகுப்பறைகளில் எவ்வளவு தொழில்நுட்பக் கருவிகள் இருந்தபோதிலும், கற்றல் நடவடிக்கைகள் தானாகவே நிகழ்ந்துவிடாது. மாணவர்களுடன் அன்யோன்யமாகச் செயல்படுவது ஆசிரியர்களே ஆகையினால் ஆசிரியர்கள் இந்தத் டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பத்தைத் தமக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். இது ஆசிரியரின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும்.

டிஜிட்டல் மயமாக்கலை பயன்படுத்தி குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு உயர்ந்த தரத்திலான கல்வியைப் பெற்றுக்கொடுப்பது எவ்வாறு, அனைத்துப் பாடசாலைக்கும் சிறந்த ஆசிரியர்களின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வித் துறையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது எவ்வாறு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். தீர்வுகாண டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துகிறோம். மனிதநேயமிக்க, நாகரிகமான, எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குள்ள பிரஜைகளை உருவாக்கும் பயணத்தை டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம், எனத் தெரிவித்தார்.

அத்தோடு,இதன்போது, தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் முதலாம் கட்டத்தை வடிவமைக்கப் பங்களிப்பை வழங்கிய சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாண அதிகாரிகளுக்கும், இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கும் பிரதமர் நினைவுச் சின்னங்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, மாகாண பிரதம செயலாளர்கள், விமானப்படைத் தளபதி, மாகாண கல்வி செயலாளர்கள், கல்வி அதிகாரிகள், பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான செயலணியின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வணக்கத்துக்குரிய வல்பொல விமலஞான மகாநாயக்க தேரர் மகாநாயக்க பதவியேற்பு

பேலியகொடை கங்காராம விகாராதிபதி, அக்கமஹா சத்தம்மஜோதிகதஜ, தம்மசேனாபதி, பாஷாந்தர விஷாரத, அதிவணக்கத்துக்குரிய பண்டித வல்பொல விமலஞான மகாநாயக்க தேரர், மகாவிஹார வம்சிக இலங்கை அமரபுர மகா நிகாயவின் ஆரியவன்ச சத்தம்மயுக்திக பிரிவின் மகாநாயக்க பதவியேற்பு நிகழ்வும், அதற்கான ஸ்ரீ சன்னஸ்பத்திர வழங்கும் நிகழ்வும் 06 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மகாவிஹார வம்சிக இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க, அதிவணக்கத்துக்குரிய கரகொடை உயன்கொட மைத்ரீ மூர்த்தி மகாநாயக்க தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மகாநாயக்க பதவியுயர்வுக்கான ஸ்ரீ சன்னஸ்பத்திரத்தைப் பிரதமர் அவர்கள் விமலஞான மகாநாயக்க தேரரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முப்பிரிவுகளையும் சார்ந்த மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க உள்ளிட்ட அதிதிகள் மற்றும் பௌத்த பக்த பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே என்றும், அதற்காக அரசாங்கம் விசேட தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

திறந்த பல்கலைக்கழக குருநாகல் பிராந்திய நிலையத்தின் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் 2026 ஜூன் 05 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் கிளையில் நீண்டகாலமாக நிலவிவரும் இடவசதியின்மை, விரிவுரை மண்டபங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய குறைபாடுகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,

திறந்த பல்கலைக்கழகத்தின் இடவசதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான காணி ஏற்கனவே கிடைத்துள்ளதால், அதன் அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிட வேண்டும். நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொண்டு, திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை நாம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். கல்விச் சீர்திருத்தங்கள் நிறுத்தப்படவில்லை. 2027 ஆம் ஆண்டில் 06 ஆம் தரம் மற்றும் 02 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தரக் கல்விச் சீர்திருத்தத்திற்குத் தேவையான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைப் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் நாம் வெளியிட்டுள்ளோம். அடுத்த ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சியையும் ஆரம்பிக்க இருக்கின்றோம்.

ஆசிரியர் வினைத்திறன்கான் தடைதாண்டல் பரீட்சைகள் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டிற்குள் அந்தப் பிரச்சினைக்கும் தீர்வை வழங்கத் தயாராக உள்ளோம்.

அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குக் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய அமைச்சு தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க, குருநாகல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் பிராந்திய நிலையத்தின் பணிப்பாளர் அனுஷ்க பண்டார உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பெருமளவு அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

As a government, we are committed to ensuring the quality of Early Childhood Education. - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister and Minister of Education, Higher Education and Vocational Education, Dr. Harini Amarasuriya, stated that preschool education is considered the most critical stage in shaping a child’s future educational journey, and the government is committed to ensuring quality of Early Childhood Education. The Prime Minister further emphasized the need for proper supervision and monitoring of early childhood education programmes across all provinces.

The Prime Minister made these remarks while participating in a certificate awarding ceremony held on June 05 at the Kurunegala Provincial Council Auditorium for diploma holders of the 2023/2024 Preschool Teacher Training Diploma Programme conducted by the North Western Preschool Teacher Training College during her education inspection tour in the Kurunegala District.

The diploma awarding ceremony was jointly organized by the Early Childhood Education Development Authority and the North Western Provincial Council. The North Western Preschool Teacher Training College is one of Sri Lanka’s leading state training institutions dedicated to strengthening early childhood education, particularly within the North Western Province.

During the event, invited speakers briefed the newly qualified diploma holders on the Government’s policy direction regarding early childhood development.

Addressing the gathering after presenting diploma certificates to the Diploma Holders, the Prime Minister stated:

We are planning to establish stability in early childhood education over the next few years. In order to achieve this, we are working in collaboration with the National Education Commission, the Ministry of Women and Child Affairs, and the Ministry of Education to develop policies, standards for teacher training, and the regulatory mechanisms required for effective monitoring and implementation.

We are also making arrangements to commence preschool teacher training programmes this year. Through these efforts, we expect to introduce a common curriculum for preschools across the country by 2027. It is equally important to create a proper understanding within society about the purpose and value of preschool education.

The primary objective of preschool education is to prepare children for their future primary education. Therefore, preschool education should focus on developing essential skills such as motor abilities and other age-appropriate competencies.

As parents and adults, it is our responsibility to ensure the path for children to develop social skills and knowledge in ways that are suitable for their age, without placing unnecessary burdens on them. As preschool teachers, you play a significant role in communicating to society what we truly expect from early childhood education

The event was attended by the Governor of the North Western Province, Tissa Warnasuriya; Deputy Minister of Women and Child Affairs, Namal Sudarshana; Members of Parliament for the Kurunegala District, Dharmapriya Dissanayake and Ashoka Gunasekara; the Chief Secretary of the North Western Province; the Director and officials of the North Western Province Early Childhood Development Authority

Prime Minister’s Media Division

The process of empowering the school teaching and learning process with digital devices is carried out based on special student protection criteria and policies - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya, Minister of Education, Higher Education, and Vocational Education, stated that a main component of new educational reform process is to create a younger generation equiped with technology by empowering the school teaching and learning process with digital devices, and that a special program is being prepared to carry out this digitalization process based on student protection criteria and policies related to digitalization.

The Prime Minister made these remarks while participating in the national ceremony held at NW/Ibbagamuwa Kiribamuna Vidyalaya to hand over the smart boards given to secondary schools under the program to digitalize the education system, following an educational monitoring visit in the Kurunegala District on June 05.

This project was implemented to provide necessary smart board equipment to those schools identifying the secondary schools that do not possess smart boards across the island under the coordination of the Ministry of Education and the guidance of the Digital Task Force to the Prime Minister’s Office. Accordingly, 2890 smart boards have been provided to secondary schools across the country following the provisions of 1.6 billion rupees allocated by the Ministry of Digital Economy.

Further, under the project implemented by the Telecommunications Regulatory Commission, 1000 schools, and under the grants of the Republic of China, 500 schools, making a total of 4390 schools, have already been provided with smart boards.

On this occasion, the handing over of the Smart Board classroom received by Ibbagamuwa Kiribamuna Vidyalaya under the project to the students took place under the patronage of the Prime Minister. Following the distribution, the Prime Minister also observed the experience students gain when conducting educational activities using the smart boards.

The Prime Minister stated:

Today marks a special day. The provision of the smart boards is an ultimate moment where a certain victory has been achieved from a process that was carried out over a period of time. Our education reform agenda has been developed to encompass the border aspect of the education system. Our goal is to provide every student with equal access to quality education.

Accordingly, out of the 6215 schools with secondary grades existing in Sri Lanka today, 6084 schools have smart board facilities by now. Similarly, by the end of this year, we are also working to provide the necessary internet facilities for those schools and the digital equipment required for educational administrative work as well.

Likewise, we are taking steps to introduce a digital system to discharge educational administrative work efficiently, and it is expected to manage resources of the educational process through that process.

Education is not something decided only by textbooks and exam results. There are many criteria to measure the success of a school. The engagement of children, the respect between children and teachers, and that happiness that put on children’s faces are the best criteria. A school is a place that should be similar to a child’s family. Therefore, our attention should be focused on ensuring the safety of the children in schools.

Further, expressing views on the occasion of World Environment Day, the Prime Minister stated that bringing the country towards development through an eco-friendly path has become a main objective of the government, stating that the contribution made by the younger generation for that cause is immense.

The occasion was attended by the Deputy Minister of Agriculture and Lands Mr. Namal Karunaratne, Deputy Minister of Women and Child Affairs Mr. Namal Sudarshana, Secretary to the Ministry of Education, Higher Education, and Vocational Education Mr. Nalaka Kaluwewa, along with political and education authorities of the North Western Province and officials of the Ministry of Education.

Prime Minister’s Media Division

உலக சுற்றாடல் தின வாழ்த்துச் செய்தி

சுற்றாடல் என்பது நமது இருப்பின் அஸ்திவாரமாகும். அந்த வகையில், நமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பான, வளமான அதே நேரத்தில் பசுமையான பூமியைப் பரிசாக கொடுக்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு பொறுப்பாகவே நான் கருதுகிறேன்.

"Urgent Climate Action" – "அவசர காலநிலை நடவடிக்கை" எனும் உலகளாவிய கருப்பொருளுக்கு இணங்க, " நிலையான உயிர்க்கோளம் - பசுமையான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வையுடன், இலங்கை இவ்வருடம் உலக சுற்றாடல் தினத்தை மிகவும் நெருக்கடியானதொரு காலப்பகுதியிலேயே கொண்டாடுகிறது. அண்மையில் நாம் எதிர்கொண்ட காலநிலை சவால்களிலிருந்து கற்ற பாடங்களின் அடிப்படையில், மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் மண்டலத்தை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சினால் இவ்வருட உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு "முளைப்பதற்கு இடமளிப்போம்" (Let it sprout) என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நடைமுறை வேலைத்திட்டங்கள் ஊடாக, சமயக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு, தியவன்னா ஓயாவைப் பாதுகாத்தல், வனஜீவராசிகள் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நீர் மூலங்களைப் பாதுகாத்தல் மற்றும் மூலிகைப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம், சுற்றாடல் பாதுகாப்பு என்பதை வெறும் எண்ணக்கருவாக மாத்திரம் மட்டுப்படுத்தாது நடைமுறைச் செயற்பாடாக மாறியிருப்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட "வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக இதுவரை அறுபத்து மூவாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டு நமது நாடு வரலாற்றில் பதியப்படுகின்ற இந்த முக்கியமான தருணத்தில், நாட்டு மக்கள் என்ற வகையில் சுற்றுச்சூழலுடன் இசைந்து வாழ்வதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்ளுதல் வேண்டும்

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு