பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, மாறாக அது எமது பரந்த அபிவிருத்தி - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும்.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், வன்முறையற்ற சூழலில் வாழ்வதையும் உறுதி செய்வதற்காக, உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல், முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் துரித நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ’குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெற்காசிய அமைச்சர்கள் மாநாடு’ (EVAC) ஜூன் 23 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் (ஜூன் 23 மற்றும் 24) நடைபெறும் இந்த பிராந்திய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பும் (SAARC), தெற்காசியாவிற்கான யுனிசெப் (UNICEF) பிராந்திய அலுவலகமும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய அலுவலகங்களும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விசேட பிரதிநிதியின் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், இப்பிராந்தியத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், உயர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் கலந்து கொள்கின்றனர் .

அடுத்த இரண்டு நாட்களில், பங்கேற்கும் நாடுகள் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், தீங்கு விளைவிக்கும் சமூகப் பழக்கவழக்கங்கள், குழந்தை திருமணம், சிறுவர் தொழிலாளர், தரவு மற்றும் ஆதாரங்களில் காணப்படுகின்ற இடைவெளிகள், வளப் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வன்முறைகள், துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான சவால்களுக்கான தீர்வுகளை ஆராயவுள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முறைசார்ந்த அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்ததோடு, குழந்தை பாதுகாப்பு என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது நாட்டின் பரந்த அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கிய ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

கல்வி முறையானது குழந்தைகளுக்கு மிகவும் பலமானதொரு சூழலாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்றும், அது கற்றலுக்கானதொரு இடமாக மாத்திரமின்றி, குழந்தை பாதுகாப்பிற்கான முக்கியமான தளமாகவும் செயல்படுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் கல்வி கற்கும் இடங்கள் மட்டுமல்ல, அவை பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல், உளவியல் சமூக ஆதரவு மற்றும் பாதுகாப்பு ஆகியன தொடர்பில் தலையீடுகளுக்கான முக்கியமான இடங்களுமாகும். பரிந்துரைக்கும் பொறிமுறைகள், ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை இலங்கை தொடர்ந்தும் பலப்படுத்தி வருகின்றது எனத் தெரிவித்தார்.

அத்தோடு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், குழந்தை பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுதல், கற்றல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் நிலையான ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாகவே இவற்றை எதிர்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் SAARC அமைப்பின் செயலாளர் நாயகம் முஹம்மட் கோலம் சர்வர், இலங்கையின் யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மல்லா மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் விடைபெற்றுச் செல்வதற்காகப் பிரதமரைச் சந்தித்தார்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் கோலம் சர்வர் Golam Sarwar, ஜூன் 22 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இதன்போது, SAARC செயலாளர் நாயகம் முஹம்மட் கோலம் சர்வர் அவர்களை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதிலும் SAARC அமைப்பின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் செயலாளர் நாயகம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

2026 ஜூன் 23 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள ’குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைச்சர்கள் மாநாடு’ குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தெற்காசியா முழுவதிலும் வாழ்கின்ற குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பிராந்திய நடவடிக்கைகளின் அவசியத்தைப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின்போது, SAARC செயலகத்தின் தற்போதைய பணிகள் மற்றும் SAARC கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய பிராந்திய முன்னெடுப்புகள் குறித்து செயலாளர் நாயகம் பிரதமருக்கு விளக்கமளித்தார். உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் உணவுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துவதற்கும் SAARC மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் SAARC மற்றும் ஏனைய பிராந்திய அமைப்புகளுக்கிடையில் நெருக்கமான ஈடுபாட்டை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

SAARC மீதான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், பிராந்திய அமைதி, சுபீட்சம் மற்றும் மக்கள் மையப்படுத்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைப்பின் முன்னெடுப்புகளுக்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் காத்மாண்டு SAARC செயலகத்தின் பணிப்பாளர் (ESC) வருண வில்பத்த, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரமதர் ஊடகப் பிரிவு

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டியமை எம் முன் இருக்கும் சவாலாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’தித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த இடங்கள் உட்பட எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இருப்பினும் குறித்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட மனித வளத்தைப் பெற்றுக்கொள்வதே தற்போது எழுந்துள்ள சவாலாக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 19 ஆம் திகதி மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது, கண்டி நகரில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கண்டியில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர்களான அதிவணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரர் மற்றும் அதிவணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம நாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்காவின் சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஞானரத்தன மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய நிலை குறித்து தேரர்களுக்கு விளக்கமளித்ததோடு, நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவிருப்பதாகவும், நடைபெற்ற ஆசிரியர் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நடைமுறைப் பரீட்சைக்குப் பின்னர் உடனடியாகப் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். இதன்போது பிரிவெனாக்களும் பாடசாலைகளும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து, பிரிவெனா கல்வியில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கண்டி, பல்லேகல SIBA வளாகத்தில் ஜூன் 19 ஆம் திகதி நடைபெற்ற "சசுனட திரிதென சுரகீமு பிரிவென" சாசனத்திற்கு வலுசேர்க்கும், பிரிவெனாவைப் பாதுகாப்போம்) சங்கரஜ புகழஞ்சலி 2026 தேசிய பிரிவெனா தின அரச விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய மாதோவிட்ட வஜிரபுத்தி தேரரின் ஆலோசனைகளுக்கு அமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவு மற்றும் மத்திய மாகாண சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த தேசிய பிரிவெனா தின அரச விழாவில், பிரிவெனா கல்விக்காகத் தமது சாசனப் பணிகளை அர்ப்பணித்த மகா சங்கத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். இதில் பிரிவெனாக்களும் பாடசாலைகளும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து, பிரிவெனா கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக, நவீன சிக்கலான உலகின் சவால்களை வெல்லக்கூடிய வகையில் மகா சங்கத்தினரை உருவாக்கும் பிரிவெனா கல்வி முறைமைக்காக மகா சங்கத்தினர் முன்னிலை வகிக்க வேண்டும். பிரிவெனா கல்வியின் நோக்கங்களைச் சென்றடையும் வகையில், அந்த மாற்றங்களை நீங்களே ஒன்றிணைந்து வடிவமைத்துக் கொடுக்க வேண்டும், என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பிரிவெனா கல்வியை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்கள், இலங்கை அமரபுர மகா நிக்காய மற்றும் ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிக்காயவின் தேரர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், தியவதன நிலமே நிலங்க தேல, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ , மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரிவெனா ஆசிரியர்கள், கல்வி கற்கும் துறவிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

The true objectives of the Central Cultural Fund are now being delivered. - Prime Minister Dr. Harini Amarasuriya

Rs. 180 million has been allocated solely from the Central Cultural Fund for the conservation of Gallangolla Mulamaha Viharaya

The Prime Minister Dr. Harini Amarasuriya made these remarks on June 19 while attending the commencement of restoration work at the Pothgul Mulamaha Viharaya in Gallangolla, Welamboda, Udunuwara, which was damaged by Cyclone Ditwah. The restoration project is being undertaken jointly by the Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs and the Central Cultural Fund.

The restoration activities at the temple commenced under the guidance of the Chief Incumbent of the temple, Venerable Ambanpola Sarada Nayaka Thero.

Addressing the occasion, Prime Minister Dr. Harini Amarasuriya stated:

The true objectives of the Central Cultural Fund are now being delivered effectively. Rs. 185 million has been allocated for the conservation of Gallangolla Moolamaha Viharaya solely from the Fund’s allocations. This clearly demonstrates how much more could have been accomplished if the resources of the Central Cultural Fund had not been misused in the past.

The government collects revenue not to keep it in the Treasury or for any other purpose, but to return benefits to the people. The government has allocated Rs. 500 million for relief efforts related to the cyclone Ditwah. We are also taking steps to construct 15,000 houses. All of this is being done without resorting to additional borrowing.

At the same time, if we are to move towards the transformative era we aspire to achieve as a government, economic development alone is not sufficient. We must develop every sector, including our heritage, culture, and education. In particular, if we are to pass on our heritage and culture to future generations, we must protect them today. By conserving the Gallangolla Pothgul Mulamaha Viharaya, not only will this important heritage site be safeguarded, but the entire area will also benefit and develop.

Speaking at the event, the Minister of Buddhasasana, Religious and Cultural Affairs, Hiniduma Sunil Senevi, stated:

The Central Cultural Fund has allocated Rs. 504 million for the restoration of seven major religious sites that were damaged by Cyclone Ditwah and the largest allocation Rs. 185 million has been granted to this temple. All of these funds have been provided from the allocations of the Central Cultural Fund.

The event was attended by the Maha Sangha led by Venerable Godamunne Pangnakitti Nayaka Thero, Chief Sanghanayake of the Central Province of the Ramanna Nikaya and Principal of the Udunuwara Nigrodhakeththa Maha Pirivena; Deputy Minister of Health Hansaka Wijemuni; Members of Parliament; public representatives; officials of the Central Cultural Fund and the Department of Archaeology; other government officials; and a large number of residents of the area.

Prime Minister’s Media Division

அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற செயற்பாடுகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நமது நாட்டிற்குத் தேவையான எதிர்காலத் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமாயின், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தில் கல்விசார் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட பிரதமர், ஜூன் 18 பொல்பிதிகம தேசிய பாடசாலையில் நடைபெற்ற "புஞ்சி ஹப்பன்னு 2026" ஆரம்பப் பிரிவு இலக்கியத் திறன் மதிப்பீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

பொல்பிதிகம வலயக் கல்விப் பணிப்பாளரின் எண்ணக்கருவிற்கு அமைய, குறித்த வலயத்திலுள்ள 49 ஆரம்பப் பாடசாலைகளின் மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற "புஞ்சி ஹப்பன்னு 2026" மொழி மற்றும் இலக்கியத் திறன் போட்டிகளில் வெற்றிகொண்ட மாணவர்களைக் கௌரவிப்பதற்காக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 17 வகையான போட்டிப் பிரிவுகளின் கீழ் வெற்றிகொண்ட மாணவர்களின் அழகியல் செயற்பாடுகளால் இவ்விழா மெருகூட்டப்பட்டது.

போட்டிகளில் வெற்றிகொண்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கான சான்றிதழ்கள் பிரதமரின் தலைமையில் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

பொல்பிதிகம கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, முழு நாட்டிற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். ஆரம்பக் கல்வி என்பது மிகப் பரந்த எல்லைகளைக் கொண்ட ஒரு துறையாகும். ஒரு பிள்ளையைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்கு, ஆரம்பக் கல்வி மூலம் வழங்கப்படும் அடிப்படை அத்திவாரம் மிக முக்கியமானது. ஒரு பிள்ளைக்கு ஆரம்பக் கல்வியைப் பயிலும் வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கிறது. ஆகையினால் அதை நாம் பிள்ளைக்குச் சரியான முறையில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பொல்பிதிகம கல்வி வலயப் பிள்ளைகள் தமது அழகியல் திறமைகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியதை இன்று நாம் கண்டோம். அதுபோலவே, முழு இலங்கையிலும் மறைந்திருக்கும் திறமைகளைக் கொண்ட பிள்ளைகளுக்குத் தமது ஆற்றல்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கவே நாம் முயற்சி செய்து வருகின்றோம்" என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பொல்பிதிகம கல்வி வலயத்தின், மகுல்பொத மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு அமைக்கப்படவுள்ள புதிய இரண்டுமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொண்டார்.

45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இக்கட்டிட நிர்மாணப் பணிகள் 2026 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டு, 2027 ஜனவரி மாதம் மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், விவசாய மற்றும் கால்நடைத் துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கீதா ஹேரத், வடமேல் மாகாண கல்வி அதிகாரிகள், பெற்றோர், அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு