பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

Prime Minister Participates in High-Level Bilateral Meetings at World Economic Forum

Prime Minister Dr. Harini Amarasuriya participated in a series of high-level bilateral meetings on January 20 on the sidelines of the 56th Annual Meeting of the World Economic Forum in Davos-Klosters, Switzerland.

The Prime Minister attended a productive bilateral meeting with Mr. Jozef Síkela, European Commissioner for International Partnerships. During the discussion, both sides focused on strengthening Sri Lanka–EU cooperation and advancing mutual interests.

Prime Minister Amarasuriya also met with Mr. Masato Kanda, President and Chairperson of the Board of Directors of the Asian Development Bank (ADB), at the WEF Congress Centre. The meeting provided an opportunity to discuss ongoing engagement and future collaboration between Sri Lanka and the ADB.

In addition, the Prime Minister held discussions with Mr. Hassan El Houry, Chairman of Menzies Aviation, where opportunities for collaboration in aviation services and connectivity were explored.

The Prime Minister also participated in a high-level dialogue at the Global Tourism Forum held at the Euronews Hub, Piz Buin, Davos, as part of the World Economic Forum engagements.

Dr. Anil Jayantha, Minister of Labour, and the Deputy Minister of Finance were also present at these meetings.

Prime Minister’s Media Division

சுவிட்சர்லாந்தின்(Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF): 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, 2026 ஜனவரி 19ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

"A Spirit of Dialogue" (உரையாடல் மனப்பாங்கு) எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் - 2026 கூட்டப்படவுள்ளது. இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர்.

இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புத்தளம் வேலாசிய அரச பாடசாலைக்கு ஆசிரியர் விடுதி - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம்.

தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு, பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியை வழங்கப் பெற்றோர் செய்யும் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற ஒரு கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம் என்றும், தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியை வழங்கப் பெற்றோர் செய்யும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைக் கண்காணிப்பதற்குமான விஜயத்தின் ஓர் அங்கமாக, ஜனவரி 17ஆம் திகதி மதுரங்குளிப் பகுதியில் அமைந்துள்ள புத்தளம் வேலாசிய அரச பாடசாலைக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வேலாசிய பாடசாலைக்கு நீண்டகாலத் தேவையாக இருந்த ஆசிரியர் விடுதிக் கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் இதன்போது நட்டு வைத்தார். அத்துடன், அகில இலங்கை ரீதியில் விருதுகளை வென்ற பாடசாலை மாணவர்களைப் பாராட்டி, அவர்களுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

பாடசாலையின் வகை, பாடசாலையின் அளவு மற்றும் பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் என்பவற்றின் அடிப்படையில் கல்வியின் தரம் தீர்மானிக்கப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளுக்குத் தொழில்நுட்பக் கருவிகளைப் பெற்றுக்கொடுத்து, மாணவர்களைத் தொழில்நுட்பக் கல்வி முறைக்குப் பழக்கும்போது, அதனைச் சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகக் கல்வி அமைச்சு, ஆசிரியர் பயிற்சிகள் மூலம் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளையும் எமது பிள்ளைகளாகக் கருதி, மாணவர்களுக்கு இடையிலான கல்வி மற்றும் சமூக ரீதியான இடைவெளிகளை அகற்றுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம்.

எமது பெற்றோர் கல்வியின் பெறுமதியை அறிந்தவர்கள். அவர்கள் தமது அனைத்து வளங்களையும் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிக்கின்றனர். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாகக் கல்வித்துறையில் நிலவும் சமத்துவமின்மையை நீக்க நாம் நடவடிக்கை எடுப்போம். தரமான கல்வியை வழங்கி, பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காகப் பெற்றோர் எடுக்கும் முயற்சிக்கு இது கைகொடுக்கும் என நான் நினைக்கிறேன்.

முந்தைய கல்வி முறையின்படி, கஷ்டப் பிரதேசப் பாடசாலை மாணவர்களின் கல்வி கற்றல் அந்தந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்களின் தனிப்பட்ட திறமைகளிலேயே தங்கியிருந்தது. ஆயினும், இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை அகற்றி, ’கஷ்டப் பிரதேசப் பாடசாலை’ என்று அழைக்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

அரசாங்கத்தின் புதிய தேசியக் கொள்கையின்படி, எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்குப் பல்வேறு துறைகளிலும் திறமையான மாணவர்கள் தேவைப்படுகின்றனர். அதற்குத் தகுந்த மனித வளத்தை உருவாக்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமையற்ற ஒரு கல்வி முறைமையை நாம் உருவாக்குவோம். தரமான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியைப் பெற்றுக்கொடுக்கப் பெற்றோர் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நான் பாராட்டுகிறேன்" எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாணக் கல்விச் செயலாளர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் மற்றும் புத்தளம் வேலாசிய அரச பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமானவையல்ல; எமக்கு முக்கியமானது பிள்ளைகள் மாத்திரமே, எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கான விஜயத்தின் ஓர் அங்கமாக, ஜனவரி 17ஆம் திகதி புத்தளம் ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தைப் பார்வையிடச் சென்றபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, புத்தளம் ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பிரதமர் அங்கு ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அதிபர் முன்வைத்த கருத்துகளுக்குப் பதிலளித்த பிரதமர், விஞ்ஞானப் பாடம் மட்டுமல்லாது ஏனைய அனைத்துப் பாடங்கள் தொடர்பாகவும் பிள்ளைகளுக்கு அறிவு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், பிளவுகளைக் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பிள்ளைகளுக்காகச் சிறந்தவற்றைச் செய்ய வேண்டும் எனவும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனைகளைப் பாடசாலை மட்டத்தில் கூட்டு முயற்சியாகக் கலந்துரையாடித் தனக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். பாடசாலைகளாகப் பிரிந்து நின்று பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்க இயலாது எனவும், எப்போதும் பிள்ளைகளின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம். ஆயினும் எமக்கு முன்னால் தற்போது ஒரு சிறந்த எதிர்காலம் உருவாகியிருக்கின்றது. எனவே, இதற்கு மேல் அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தீர்மானங்களை எடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

பல்வேறு திறமைகளைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதே சிறந்தது என்பதால், ஒரு பாடத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத, அனைத்துத் துறைகள் குறித்தும் அறிவுமிக்க பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்பதையும் பிரதமர் இங்கே வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக குமார, அஜித் கிஹான், முஹம்மது பைசல் மற்றும் ஹிருணி விஜேசிங்க ஆகியோருடன் புத்தளம் நகர முதல்வர், வடமேல் மாகாணக் கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ ක්‍රියාවලියේ පරිවර්තනීය වෙනස අපි අඩියක්වත් පස්සට තියලා නෑ, තියන්න සූදානමකුත් නෑ. දියත් කරපු සැලසුම් ඒ ලෙසටම ක්‍රියාත්මක වෙනවා. - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

ගුරුවරුන් 23,000ක් බඳවා ගැනීමට අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය හිමි වුණා.

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ ක්‍රියාවලියේ පරිවර්තනීය වෙනස සිදු කිරීමේ ක්‍රියාවලිය අඩියක්වත් පස්සට ගෙන නැති බවත්, දියත් කළ සැලසුම් ඒ ලෙසටම ක්‍රියාත්මක කරන බවත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

පුත්තලම දිස්ත්‍රික්කයේ ඉදිරි අධ්‍යාපන කටයුතු පිළිබඳ දැනුවත් කිරීම සඳහා පුත්තලම කලාපයේ අධ්‍යාපන නිලධාරීන් සහ විදුහල්පතිවරුන් සමග අද (17) පැවැති සාකච්ඡාවකට එක්වෙමින් පුත්තලම දිසාපති කාර්යාලයේ ප්‍රධාන ශ්‍රවණාගාරයේදී අග්‍රාමාත්‍යතුමිය මේ බව ප්‍රකාශ කළාය.

මෙහිදී අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය,

මෙම අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ සැලසුම් දීර්ඝකාලීන ක්‍රියාවලියක් තුළ සාක්ෂාත් කර ගැනීමට සැලසුම් කර ඇති ඒවා, ඒ සඳහා වන යටිතල පහසුකම් සංවර්ධනය, ගුරු-විදුහල්පති බඳවා ගැනීම්, ඩිජිටල් තාක්ෂණික උපකරණ බෙදාදීම් අඛණ්ඩව සිදුකරමින් පවතිනවා. මෙවැනි බරපතළ ක්‍රියාවලියකදී සුළුතර කණ්ඩායම් ඔවුන්ගේ පටු අරමුණු සාක්ෂාත් කර ගැනීම සඳහා ඉදිරිපත් කරන විරෝධතා නොතකා, රජය හා නිලධාරීන් අතර ඇති අන්‍යෝන්‍ය විශ්වාසය ඉදිරියටත් පවත්වාගත යුතුයි. මෙය දරුවන්ගේ අනාගතය හැඩගස්වන, සමස්ත රටේම ඉදිරි අනාගතය තීරණය වන ක්‍රියාවලියක් බැවින් ඒ පිළිබඳ ජනතාවගේ විශ්වාසය තහවුරු කිරීම අත්‍යවශ්‍ය යි.

අධ්‍යාපන පරිවර්තන ක්‍රියාවලියේ විශේෂ වැඩසටහන්වලට අප මුදල් වෙන් කරලා තියෙනවා. යටිතල පහසුකම් ඇතුළු ඩිජිටල් අධ්‍යාපන පහසුකම් වන අන්තර්ක්‍රියාකාරී තිර සහ අන්තර්ජාල සබඳතා ලබාදීම මුල් මාස දෙක ඇතුළත තෝරාගත් ද්විතීයික පාසල්වලට ලබාදීමට සැලසුම් කර තිබෙනවා.

ගුරුවරුන් 23,000ක් බඳවා ගැනීමට අපට අනුමැතිය ලැබුණා. එහි පවතින වයස් සීමා ගැටලු නිරාකරණය කරමින් ගුරුවරුන් හා විදුහල්පතිවරුන් බඳවා ගැනීමට සැලසුම් කරනවා. නායකත්ව ගුණාංග ඇති අය පාසල් පද්ධතියට අවශ්‍යයි. එවැනි අයට මම ආරාධනා කරනවා මෙම ක්ෂේත්‍රයට පිවිසෙන්න කියා.

එසේම, සංවර්ධනය කිරීමට තෝරාගත් පාසල්වල යටිතල පහසුකම් පමණක් නොව දරුවන්ගේ පහසුව, ප්‍රවාහනය සහ සෞඛ්‍ය වැනි දෑ සම්බන්ධවත් සමස්ත සැලසුමක් සකස් කරන්න. ඒ සඳහා අනුමැතිය ලබාගැනීමට දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කවුන්සිලයට යොමු කරන්න. ගුරු පුහුණු මධ්‍යස්ථාන ආරම්භ කිරීම, විද්‍යාපීඨ ප්‍රතිසංස්කරණය කිරීම වැනි මානව සම්පත් ගොඩනැගීමේ වැඩසටහන් ද අප ආරම්භ කර තිබෙනවා

අග්‍රාමාත්‍යතුමියගේ උපදෙස් මත මූල්‍ය ප්‍රතිපාදන වෙන්වූ වැඩසටහන් වන දරුවන්ගේ ජල හා සෞඛ්‍ය පහසුකම් නංවාලීම සඳහා සැලසුම් සකස් කොට නුදුරේදීම ක්‍රියාත්මක කරන බවත්, ප්‍රාථමික පාසල් සහ සිසුන් 50ට අඩු පාසල් සංවර්ධන ක්‍රියාකාරකම් ඉදිරියේදී ක්‍රියාත්මක කරන බවත් නිලධාරීහු අග්‍රාමාත්‍යතුමිය වෙත පැවසූහ.

මෙම අවස්ථාවට රාජ්‍ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය මහාචාර්ය ඒ.එච්.එම්.එච්. අබයරත්න මහතා, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන ගයාන් ජානක කුමාර මහතා, අජිත් ගිහාන් මහතා, මොහොමඩ් ෆයිසාල් මහතා, හිරුණි විජේසිංහ මහත්මිය සහ පුත්තලම දිස්ත්‍රික් අධ්‍යාපන අධ්‍යක්ෂක, කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්, විදුහල්පතිවරුන් ඇතුළු මහා සංඝරත්නය සහ කන්‍යා සොයුරියන් ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எந்தவொரு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பு குறித்துப் புத்தளம் மாவட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் இடையே, இன்று (17) முற்பகல் புத்தளம் விஞ்ஞானக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

இலங்கையின் தற்போதைய நிலவரத்தின்படி, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், விஞ்ஞான மற்றும் கணித பாடத்துறைகளின் ஊடாகக் கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான தங்கு தடையற்ற, சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் கொள்கையுமாகும்.

விஞ்ஞானப் பாடத்துறைக்காக முன்னெடுக்கப்படும் இந்தப் பரீட்சார்த்த முயற்சிகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் விஞ்ஞானம் அல்லது கணிதம் என்பதற்காக நாம் மிகை மதிப்பீடுகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை. விஞ்ஞானம் மற்றும் கணிதத்தைப் போலவே ஏனைய அனைத்துத் துறைகளும் நமக்கு முக்கியமானவை.

ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ இருப்பினும், அவர் மக்களுடன் மக்களுக்காகவே பணியாற்றுகின்றார். அங்கே மனிதநேயம் போன்ற மானுடப் பண்புகளும் அவசியமாகின்றன. எதிர்காலத்தில் எமது நாட்டை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையான மனிதநேயம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மானுட உறவுகளை மதிக்கும் பரிபூரணமான பிரஜைகளை, ஒரு தரமான கல்வியின் ஊடாக மட்டுமே உருவாக்க முடியும்.

பாடசாலைகளில் பெருமளவு ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதற்காகச் சுமார் 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கற்றல் என்பது விடயங்களை மனப்பாடம் செய்வது மாத்திரமல்ல. தேடலின் ஊடாகத் தகவல்களைக் கண்டறியும் ஆர்வம் பிள்ளைகளிடம் உருவாக வேண்டும். எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும், எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு