பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

The Director and Head of Division for External Economic Policy covering South Asia, Southeast Asia, and Oceania at the German Federal Ministry for Economic Affairs met with Secretary to the Prime Minister

The Director and Head of Division for External Economic Policy covering South Asia, Southeast Asia, and Oceania at the German Federal Ministry for Economic Affairs and Energy, Mr. Tobias Pierlings, met with Secretary to the Prime Minister Mr. Pradeep Saputhanthri at the Prime Minister’s Office today to discuss avenues for strengthening economic cooperation between Sri Lanka and Germany.

Welcoming Mr. Pierlings, Secretary to the Prime Minister Mr. Pradeep Saputhanthri expressed appreciation for the continued support and cooperation extended by the Government of the Federal Republic of Germany toward Sri Lanka’s development and economic progress.

During the discussions, Mr. Pierlings highlighted the significance of the forthcoming Sri Lanka–German Business Forum 2026, organized by the Delegation of German Industry and Commerce in Sri Lanka. The three-day forum is expected to bring together approximately 350 senior stakeholders, including policymakers, business leaders, industry associations, and experts representing a range of strategic sectors from both countries. He noted that the forum would serve as an important platform to deepen bilateral economic engagement and generate mutual benefits for Sri Lanka and Germany.

The meeting also focused on the emerging growth of the information technology sector as a major contributor to Sri Lanka’s export economy. Both parties indicated willingness to explore potential collaboration to further strengthen technological and innovation-driven partnerships.

The discussions further covered skills development and vocational training in Sri Lanka, with particular attention given to the contributions of the Ceylon German Technical Training Institute in advancing technical education and workforce development.

The meeting was attended by H.E. Dr. Felix Neumann, Ambassador of Germany to Sri Lanka, along with officials from the German Embassy. Representing the Sri Lankan side were Ms. Sagarika Bogahawatta, Additional Secretary to the Prime Minister and officials from the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism.

Prime Minister’s Media Division

பிரதமரின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றையும் பல்வேறு ஊடக நிறுவனங்களினதும், செய்தி இணையத்தளங்களினதும் உத்தியோகபூர்வ இலச்சினைகளையும் போலியாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருவது தெரியவந்துள்ளது.

பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்று சித்தரிக்கப்பட்ட போலியான காணொளிகள் மற்றும் பிரதமரின் புகைப்படத்தை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட போலிப் பதிவுகள் சிலரால் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் பல்வேறு தொழில்முயற்சிகள், வேலைவாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக்கொள்கைகள் ஆகியன குறித்த போலியான செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இத்தகைய போலியான செய்திகள் உருவாக்கப்பட்டிருப்பதால், இத்தகைய செய்திகளைக் கண்டு ஏமாற வேண்டாமெனவும், இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அனைத்து மக்களையும் பிரதமரின் ஊடகப் பிரிவு என்ற வகையில் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசாங்கத்திற்கும் பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இத்தகைய போலியான செய்திகளை உருவாக்குவதும், அவற்றைச் சமூக ஊடகங்கள் ஊடாகப் பரப்புவதும் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையாக இருந்துவந்த புதிய தொலைக்காட்சி (HD) கலையகம் பிரதமரின் பங்குபற்றுதலுடன் மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு, அதன் தயாரிப்பு வசதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் மே 26 ஆம் திகதி மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.

இத்தொலைக்காட்சி கலையகத்தைத் திறந்துவைப்பதற்குச் சமாந்தரமாக, மாணவர்களின் நடைமுறை மற்றும் கல்விச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல இணை நிலையங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

அதற்கமைய, மாணவர்கள் இணைய வானொலி அலைவரிசைகள் உள்ளிட்ட கல்விச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் ஒலிபரப்புக் கலையகம், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம், பாலினச் சமத்துவம் மற்றும் நீதி மையம் ஆகியனவும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்குச் சமாந்தரமாக, அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இனங்கண்டு, அப்பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றித் தொடர்வதற்காக மடிக்கணினிகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வும், சுற்றாடல் நேய பசுமைப் கொள்கை (UOVT Greening Policy) உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வும் இடம்பெற்றன.

இக்கொள்கையின் ஊடாகப் பல்கலைக்கழகத்திற்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து நிர்மாண மற்றும் அபிவிருத்திப் பணிகளும் பசுமை எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழகத்தைக் கார்பன் வெளியேற்றமற்ற சூழல் அலகாக மாற்றி அமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, தொழில்சார் கல்வியைக் கற்கும் மாணவர்களைக் கைத்தொழில் துறையில் பசுமை எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளுக்காக அதிகளவில் ஊக்குவிப்பதும் இதன் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்த முக்கிய நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவ​கே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கே.எம்.ஜி. பிரசன்ன பிரேமதாச உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்

ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 18 முதல் 22 வரையான தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் பங்கேற்றல், இருதரப்பு கல்வி மற்றும் சமூக ஈடுபாடுகளை மேம்படுத்தல் ஆகியனவே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

பிரதமர் தனது விஜயத்தின் ஆரம்பத்தில், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி கற்கைகள் நிறுவனத்தின் (IDS) 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றினார். இதன்போது, இலங்கையின் சமீபத்திய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்கள், அரசியல், நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை எடுத்துரைத்தார். பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தல், ஜனநாயகப் பொறுப்புக்கூறலைப் பேணுதல், பொருளாதார மீட்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களைச் சமநிலைப்படுத்துவதில் உள்ள சவால்கள் ஆகிய விடயங்கள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் St Antony கல்லூரியின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விரிவுரையை நிகழ்த்திய பிரதமர், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில், அர்த்தமுள்ள சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அடைய முயற்சிக்கும் நாடுகள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்து விளக்கமளித்தார். அத்தோடு, இந்த ஒக்ஸ்போர்ட் விஜயத்தின்போது, செவெனிங் CRISP திட்டத்தின் கல்விமான்களையும் பிரதமர் சந்தித்தார்.

அத்தோடு, ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் கௌரவ இவெட் கூப்பர் (Rt Hon. Yvette Cooper) அவர்களைப் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, ’டிட்வா’ சூறாவளியை அடுத்து ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இலங்கையின் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த ஐக்கிய இராச்சியம் வழங்கும் ஒத்துழைப்பையும் பாராட்டினார். மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் வளர்ச்சிப் பாதை குறித்துத் தெளிவுபடுத்திய பிரதமர், புவிசார் அரசியல் மற்றும் வலுசக்தி சவால்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் கௌரவ பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) அவர்களுடனான சந்திப்பின்போது, நிறுவனங்களுக்கு இடையிலான அர்த்தபுஷ்டியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல் ஆகிய விடயங்களைப் பிரதமர் வலியுறுத்தினார். கல்விசார் ஒத்துழைப்பு, மாணவர் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல் ஆகிய விடயங்களில் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்த விஜயத்திற்குச் சமாந்தரமாக, லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பிரித்தானிய கவுன்சிலின் கல்வி நிபுணர்களைச் சந்தித்துப் பிரதமர் கலந்துரையாடினார். இதன்போது ஆசிரியர் பயிற்சி, ஆங்கில மொழித் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தினார். மேலும், கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை அதிகரித்தல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மே 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் 2026 பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் பங்கேற்ற பிரதமர், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Shirley Ayorkor Botchwey) அவர்களுடனான சந்திப்பின்போது, காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி மற்றும் ஜனநாயக நல்லாட்சி ஆகியன குறித்துக் கலந்தாலோசித்தார். தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்ளளவு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இலங்கையைத் தொடர்ந்து ஆதரிக்கத் தயார் எனச் செயலாளர் நாயகம் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்தார்.

அதற்கு அடுத்தபடியாக, லண்டன் பௌத்த விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், அதன் விகாராதிபதி வணக்கத்திற்குரிய போகொட சீலவிமல தலைமைத் தேரரைச் சந்தித்து, விகாரையின் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும், இலங்கையர்களுக்காக விகாரை முன்னெடுத்து வரும் நீண்டகால சேவைகளைப் பற்றியும் கலந்துரையாடினார். அதனை அடுத்து, இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பிலும் அவர் கலந்துகொண்டார்.

இவ்வாறு, ஐக்கிய இராச்சியத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே மாதம் 23 ஆம் திகதி காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மீண்டும் நாடு திரும்பினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Prime Minister Dr.Harini amarasuriya Meets the Secretary-General of the Commonwealth of Nations.

The Prime Minister of Sri Lanka Dr. Harini Amarasuriya met with Hon. Shirley Ayorkor Botchwey, Secretary-General of the Commonwealth of Nations, at Marlborough House in London on 21 May.

The meeting took place during the official visit of the Hon. Prime Minister of Sri Lanka to London, United Kingdom, for the 43rd Commonwealth of Learning (COL) Board of Governors Meeting 2026, which commenced today. Prime Minister Amarasuriya met with the Secretary-General to discuss areas of mutual cooperation and shared priorities within the Commonwealth framework. During the meeting, the Prime Minister expressed appreciation for the Commonwealth’s engagement with Sri Lanka and commended the Secretary-General’s leadership in enhancing the relevance and effectiveness of the Commonwealth.

Discussions focused on climate change, climate finance, democratic governance, women’s political participation, and ongoing Commonwealth support for member states. The Prime Minister highlighted Sri Lanka’s commitment to resilience-building, sustainable development, and inclusive governance, while appreciating the continued engagement and support extended by the Commonwealth Secretariat.

The Secretary-General reaffirmed the Commonwealth’s readiness to continue supporting Sri Lanka through technical assistance, capacity-building initiatives, and collaboration in areas including climate finance and electoral governance.

Both sides also exchanged views on upcoming Commonwealth engagements and underscored the importance of strengthening cooperation among member states to address shared global challenges. High Commissioner Nimal Senadeera and senior officers of the High Commission of Sri Lanka accompanied the Prime Minister to the meeting.

Prime Minister’s Media Division

பிரதமருக்கும் பிரித்தானிய கவுன்சில் கல்வி நிபுணர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி பிரித்தானிய கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது.

இதன்போது, பிரித்தானிய கவுன்சிலின் சர்வதேச அனுபவங்கள் குறித்து விளக்கமளித்த அதன் பிரதிநிதிகள், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தமது நிறுவன ரீதியான வேலைத்திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினர். இலங்கையின் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காகத் தொழில்நுட்ப உதவிகள், ஆசிரியர் அபிவிருத்தி மற்றும் கொள்கை ரீதியான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையின் கல்வித் துறைக்கு பிரித்தானிய கவுன்சில் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இத்தகைய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு