பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை குறித்து கழிவு முகாமைத்துவம் பற்றிய விசேட உபகுழுவின் கவனம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூக மற்றும் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, மேல் மாகாணத்தின் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வெளியேற்றும் நகரத் திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை, திண்மக் கழிவுகளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் கழிவு முகாமைத்துவம் பற்றிய நிபுணத்துவமிக்க உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கழிவு முகாமைத்துவத்திற்குப் பொருத்தமான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் முறையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதோடு, இதற்கு ’பிரஜா சக்தி ’மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா’ ஆகிய செயர்த்திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பாரிய பணியை முன்னெடுக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.

தொழிற்கல்வித் துறையுடன் இணைந்து, கழிவு முகாமைத்துவத்தைப் புதியதொரு தொழில்சார் கற்கையாக அறிமுகப்படுத்துவதன் மூலம், கழிவு முகாமைத்துவம் குறித்த சமூகப் புரிதலை ஏற்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான லக்ஷ்மன் நிபுணாரச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் தலைவருமான சந்தன சூரியாரச்சி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Social work must remain people-centred, inclusive, and rights-based, linking social development with environmental responsibility. – Prime Minister Dr. Harini Amarasuriya

Every intervention contributes to sustainability, equity, and human dignity.

Prime Minister Dr. Harini Amarasuriya made these remarks while addressing the inauguration ceremony of the 28th Asia Pacific Social Work Conference 2025, held on 18 November at the Bandaranaike Memorial International Conference Hall (BMICH), Colombo.

Organised by the Sri Lanka Association of Professional Social Workers (SLAPSW) and the National Institute of Social Development (NISD), the conference takes place from 18–21 November in Colombo under the theme “Social Work Responses to Climate Change and Other Environmental Issues.”

The Prime Minister further stated:

“Sri Lanka faces coastal erosion, unpredictable monsoons, urban flooding, droughts, and other climate-related challenges that directly affect agriculture, fisheries, and rural communities. These environmental changes also worsen existing social inequalities, disproportionately impacting rural farmers, fisherfolk, plantation communities, and other marginalised groups.

Social workers play a critical role in addressing these challenges. They are often the first responders during disasters, providing immediate assistance, psychosocial support, and long-term rehabilitation. In Sri Lanka, social workers strengthen community resilience, support youth and women’s empowerment, and advocate for environmentally responsible practices.

The government supports these efforts through integrated approaches that combine climate adaptation, social protection, and community empowerment.

Our youth are making an important contribution to climate action and sustainability. Across Sri Lanka, students participate in school-based climate clubs, lead awareness campaigns, and organise community clean-up drives. Young people, through school clubs and the National Youth Services Council, are driving large-scale tree-planting and reforestation initiatives that restore degraded landscapes and protect vulnerable communities.

Technology and innovation, including digital disaster monitoring and climate-smart agriculture are helping communities respond effectively. The 2026 national budget reinforces this vision, prioritising national research and innovation through the establishment of a National Research and Development Institute and Council to ensure evidence-based solutions to environmental and social challenges.

It strengthens the Clean Sri Lanka initiative, expands support for children with disabilities from low-income families, and improves accessible public infrastructure. The budget also addresses the housing needs of vulnerable communities, including those living in landslide-prone areas and internally displaced families. Social protection reforms are being advanced through the Integrated Social Protection Registry and the People’s Income Support Programme, alongside measures to increase wages for estate workers and dedicated support for women’s empowerment.

In addition, the budget emphasises environmental research and strategies to mitigate human–wildlife conflict, supported by targeted infrastructure investments. No state can achieve environmental justice alone; collaboration is essential. This conference provides a platform to share experiences, research, and solutions, strengthening regional capacity and solidarity. Sri Lanka calls upon our partners to join us in building resilient communities, effective social work institutions, and inclusive policies that respond to climate challenges.”

The event was attended by the Minister of Rural Development, Social Security and Community Empowerment, Dr. Upali Pannilage, Prof. Machiko Ohara, President of the International Federation of Social Work Asia-Pacific, and other distinguished guests.

Prime Minister’s Media Division

மக்களை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கே இருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற, பசுமை மாற்றத்தினுள் வகிபாகம் குறித்து ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் பசுபிக் வலய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதி வழங்கப்படும் Erasmus+ நிகழ்ச்சி, கல்வி, பயிற்சி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பிற்கான உலகின் முன்னணி நிகழ்ச்சித்திட்டமாகும். நாடுகளுக்கிடையேயான நகர்வுகள், கலாசாரப் பரிமாற்றம், திறன் அபிவிருத்தி மற்றும் கொள்கை அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையின் உயர்கல்வி, தொழிற்பயிற்சி, இளைஞர் அபிவிருத்தி மற்றும் நிறுவனப் பங்காண்மைகளுக்கான ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இந்த மாநாடு நவம்பர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

பிற்கால காலனித்துவ உரிமையாக நமக்குக் கிடைக்கப்பெற்ற கல்வியின் விளைவாக, நமது நாடு உயர்ந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட ஒரு நாடாக மாறி இருக்கின்றது.

ஆயினும், தற்போது கல்வி என்பது தனிமனித வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒன்றாக மாறி இருக்கின்றது. இதனால், கல்வித் திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியனவும் போட்டித் தன்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

இதன் விளைவாக, நமது கல்வி முறை போட்டித்தன்மை மிகுந்த, பரீட்சையை மையமாகக் கொண்டதாக மாறி இருக்கின்றது. ஆயினும் கல்வி என்பது தனிமனித வெற்றியைக் குறியாகக் கொண்ட ஒரு செயல்பாடு மாத்திரமல்ல.

தற்போது இந்தக் கட்டமைப்பிலிருந்து விலகி, கல்வி என்பது வெறுமனே உயர்ந்த புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்லாத, கூட்டு அறிவைப் பகிர்ந்து கொள்ளும், மாற்றத்திற்கான கல்வியின் உண்மையான நோக்கத்தை சரி செய்வதற்கே நாம் முயற்சிக்கிறோம்.

கல்வியின் மாற்றியமைக்கும் சக்தியை பெரும்பாலும் நாம் மறந்து விடுகிறோம். அது தனிமனித வெற்றிக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். மக்களை அரசியல், சமூக-பொருளாதார ரீதியில் ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கு இருக்கின்றது. ஆகையினால், பரஸ்பர எதிர்பார்ப்பு மற்றும் பரஸ்பர வெற்றி ஆகியவற்றைக் கொண்ட ஒரு துறையாகக் கல்வியை மாற்றுவது மிகவும் அவசியமானதாகும்.

எமது புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம், ஒத்துழைப்புமிக்க கற்றல், மற்றவர்கள் மீதான பொறுப்புணர்வு, ஆகியவற்றோடு உலகத்தின் மீதான பொறுப்புணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக இன்று நாம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான உலகளாவிய போராட்டங்களின் பின்னணியில் இது மிகவும் முக்கியமானதாகும்.

இன்றைய உலகில் தலைத் தூக்கி வரும் அறிவியல் பூர்வமற்ற வழிமுறைகள் மற்றும் போலியான தகவல்கள் பரவிவரும் பின்னணியில், கல்வியின் முக்கியத்துவம் மென்மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் காணப்படும் அழுத்தங்களையும் இந்த மாற்றத்தின் மூலம் வெற்றிகொள்ள முடியும்.

இத்தகைய விவாதங்கள், பரிமாறல்கள் மற்றும் கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் ஆகியன, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு இணைந்து செயல்படும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கல்வியின் அவசியத்தையே நமக்கு மென்மேலும் உணர்த்துகின்றது.

நமது கல்வி முறையை போட்டி மனப்பான்மையின் சிறையிலிருந்து விடுவித்து, ஒத்துழைப்புமிக்க, பொறுப்புமிக்க பகிர்ந்து கொள்ளுதலின் சுதந்திரமான இடைவெளியாக மாற்றுவதே இலங்கையின் எதிர்காலத்திற்காக நாடு எதிர்கொள்ளும் அடிப்படைச் சவாலாகும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மெரினோ, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாளக களுவெவ மற்றும் பிராந்தியப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆயுதப்படை நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு 2025.

ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நவம்பர் 16ஆம் திகதி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்தின் முன்னிலையில் மிகுந்த கௌரவத்துடன் நடைபெற்றது.

இந்த நினைவுச் சின்னம் கொழும்பில் செனோடாப் போர் நினைவிடம் (Cenotaph War Memorial) என அழைக்கப்படுகிறது. இது அப்போதைய இலங்கை இராணுவ அதிகாரிகள் இரு உலகப் போர்களிலும் (முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்) உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்.

இது, சர் எட்வின் லேன்ட்ஸீர் லூட்டென்ஸ் (Sir Edwin Landseer Lutyens) என்ற கட்டிடக் கலைஞரின் வடிவமைப்பாகும்.

இந்த நினைவுச் சின்னம் இலங்கையின் பழமையான மற்றும் பிரதானமான போர் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இங்கு வருடாந்த நினைவு தினத்தில் (Remembrance Day) (நவம்பர் 11ஆம் திகதியை அண்மித்த ஞாயிற்றுக்கிழமை) தேசிய நினைவேந்தல் விழா நடத்தப்படுகிறது.

இதன்போது, பிரதமர் அவர்கள் நினைவுச் சின்னத்தில் பொப்பி மலர்க் கொத்தை வைத்து, உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தினார்.

முதலாம் உலகப் போர் காலம் முதல் இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த ஆயுதப்படை உறுப்பினர்களை நினைவுகூருவதும் அவர்களின் உன்னதமான தியாகத்திற்குக் மரியாதைச் செலுத்துவதுமே இந்த வருடாந்த நினைவேந்தலின் பிரதான நோக்கமாகும்.

முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த ஆயுதப்படை உறுப்பினர்களை நினைவுகூருவதற்காகப் போப்பி மலர் தினம் மகாபிரித்தானியாவால் 1919ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுவருகிறது. இதில் பொப்பி மலர் (Poppy) பிரதான சின்னமாக இருந்து வருகிறது.

பெல்ஜியப் போர்க்களத்தில், நண்பரின் மரணத்தால் துயருற்ற லெப்டினன்ட் கேர்ணல் ஜோன் மக்ரே (John McCrae) கல்லறைகளின் மீது வளர்ந்திருந்த பொப்பி மலர்களைப் பார்த்துக் கவிதை வடிக்கலானார். அவ்வாறு வடித்த "In Flanders Fields" என்னும் கவிதையே இந்த மலரை நிரந்தர நினைவுச்சின்னமாக அமைய முதன்மைக் காரணியாக அமைந்தது.

பிற்காலத்தில், அமெரிக்க இளைஞர் சங்கத்தின் செயலாளராக இருந்த திருமதி மொய்னா மைக்கல் (Moina Michael) அவர்கள், பொப்பி மலர்களை விற்றுப் பெற்ற பணத்தை, இறந்த இராணுவ உறுப்பினர்களின் குடும்பங்களின் நலன்புரிக்காகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த பொப்பி மலரின் முக்கியத்துவம் உலகளவில் உறுதிப்படுத்தப்பட்டது.

பொப்பி மலர் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கை ஆயுதப்படையின் மூத்த வீரர்களின் சங்கமும் ஆயுதப் படைத் தரப்பினரும் இணைந்து ஒழுங்குச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா, முப்படைத் தளபதிகள், ஓய்வுபெற்ற முப்படைத் தளபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை ஆயுதப் படைகள் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பெருமளவு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்கச் சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.

புதிய மாற்றத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்தும் தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்" என்ற தலைப்பில் அலரிமாளிகையில் இன்று (நவம்பர் 14) ஆரம்பமான உலகளாவிய தொழில்முனைவோர் வாரத்தின் அங்குரார்ப்பண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய பிரதமர்,

"2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நாட்டில் தொழில்முனைவோர் கலாசாரத்தை உருவாக்குவதற்கும், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் செயல்பாட்டு ரீதியிலான பங்களிப்பாகும். இந்த வாரமானது நமது தேசிய இலக்குடன் சம்பந்தப்பட்டதாகும். படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியன நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும்.

எமது அரசாங்கத்தின் நோக்கம், எண்ணக்கருக்களை வாய்ப்புகளாக மாற்றி, முதலீடுகளை ஈர்க்கும் புத்தாக்கங்களின் பலன்களை நாட்டு மக்கள் அனுபவிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதேயாகும். அதற்கு தொழில்முனைவோரின் வளர்ச்சி என்பது மிகவும் அவசியமானதாகும். அதேபோல், பொருளாதாரப் பல்வகைப்படுத்தல், ஏற்றுமதியின் வளர்ச்சி, இளைஞர்களை பலப்படுத்துதல் மற்றும் சமச்சீரான அபிவிருத்தி ஆகியவற்றிற்கும் தொழில்முனைவு அத்தியாவசியமான காரணியாகும்.

2024ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் உலகளாவிய தொழில்முனைவோர் வாரத்தில், 25 மாவட்டங்களிலும் நடைபெற்ற 207க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் 20,000க்கும் அதிகமானோரை இணைத்துக் கொள்ள முடிந்தது.

2024ஆம் ஆண்டின் உலகளாவிய புத்தாக்கக் குறியீடின் படி, இலங்கை 89ஆவது இடத்திலேயே இருக்கின்றது. புத்தாக்க உற்பத்திகளின் அடிப்படையில், ஒப்பீட்டு ரீதியில் நாம் நல்ல நிலையில் இருந்த போதிலும், புத்தாக்கத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றோம் என்பதைத் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் எம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

உலகளாவிய தொழில்முனைவோர் கண்காணிப்பு (GEM) (2024/25) அறிக்கையின்படி, உலகளவில் வயதுவந்தோரில் 49% வீதமானோர் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே தனது தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முன் வருவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு வலுவான ஆதரவு தளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் மிகவும் முக்கியமானது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

2023ஆம் ஆண்டில் 15-29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் சனத்தொகை சுமார் 5.1 மில்லியனாக (மொத்த சனத்தொகையில் 23.6%) இருக்கின்றமை இலங்கைக்குச் சாதகமான சனத்தொகை அனுகூலத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. இந்த இளைஞர் சமூகம் டிஜிட்டல் அறிவைக் கொண்டிருந்த போதிலும், மூலதனத்தைப் பெற்றுக் கொள்வதில் காணப்படுகின்ற வரையறைகள், குறைந்த வழிகாட்டல்கள், பொதுவாகவே சவால்களை ஏற்பதில் காணப்படும் தயக்கம் போன்ற விடயங்களை நாம் புரிந்துகொண்டிருக்கின்றோம்.

ஆகையினால், அரசாங்கம் குறிப்பாகக் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் 30 பேர் கொண்ட ஒரு டிஜிட்டல் செயற்குழுவை அமைத்து, அனைத்துப் பாடசாலைகளையும் இணையத்தில் இணைத்தல், ஸ்மார்ட் பலகைகள், கணினிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளை வழங்குதல், அறிவை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன், டிஜிட்டல் கல்விக்கான முழுமையான கொள்கை கட்டமைப்பு 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

2026ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோரை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் விசேட கவனம் செலுத்தி, இளைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான ஆரம்ப நிதிக்காக 1.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இருக்கின்றது.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் கணினி ஆய்வுகளுக்காகவும், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் (பிராட்பேண்ட் வவுச்சர்), முதலீட்டு ஊக்குவிப்புகளுக்காகவும் மேலதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டிருக்கின்றது. அத்தோடு அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரச் சட்டம் மற்றும் புதிய டிஜிட்டல் பொருளாதார அதிகார சபை, இலங்கைக்குத் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை (SL-UDI) மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் செலுத்துகை முறைமைகள் ஆகியவற்றைப் முன்மொழிந்திருக்கின்றது என்பதையும் நான் இத் தருணத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

நாட்டின் பொருளாதாரத்திற்காகவும், அனைத்துத் துறைகளினதும் வளர்ச்சிக்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசியச் செயற்றிட்டத்திற்காகச் செயற்பட வேண்டும். தனித்தனியாகச் செயற்படுவதற்குப் பதிலாக, அனைவரையும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசியச் செயல்திட்டத்தினை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

அதேபோல், அரசாங்கம், கைத்தொழில்த் துறை, கல்வித் துறை மற்றும் தொழில்முனைவோர் ஆகிய தரப்புகள் வளங்களை ஒருங்கிணைத்தல், ஆலோசனை வலையமைப்புகளைக் கட்டியெழுப்புதல், கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய சந்தைகளைத் திறத்தல் ஆகியவற்றில் இணைந்து செயற்பட வேண்டும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால ஆகியோரும், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவது எமது பொறுப்பு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எமது மனித வளத்தை மதிப்பும் கேள்வியுமுள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு நிறைவு விழா 2025.11.15 அன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, " தேச எல்லைகளைக் கடந்து - இலங்கையர்களை வலுவூட்டல்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, புலம்பெயர் சமூகத்தின் நலனுக்காக புலம்பெயர் சமூகத்திற்கு வசதிகளை வழங்குவதற்காக ஒரு மொபைல் செயலி (Mobile app) அறிமுகப்படுத்தல், ஒரு தொழிலாளி இறந்தால் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 40,000 லிருந்து ரூ. 100,000 ஆக உயர்த்துதல், பணியகத்தின் புதிய 24/7 அழைப்பு மைய சேவைகளை ஆரம்பித்தல், வணிகத் துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல், நீண்டகால வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை பாராட்டுதல் மற்றும் புலம்பெயர் பிள்ளைகளுக்கான நிதி உதவித் திட்டத்தைத் தொடங்குதல், ஒரு தொழிலாளி இறந்தால் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை 6 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்தல், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைத் தொடங்குதல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுக் கடன்களை 10 மில்லியனாக அதிகரித்தல், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர் குடும்பங்களுக்கு நன்மைகளை வழங்குதல் போன்ற பல வசதிகள் செயற்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், புலம்பெயர் சமூகத்தினரிடமிருந்து பொருளாதாரத்திற்கு நிதி பங்களிப்பு, புதிய தொழில்முனைவோர் வாய்ப்புகளுக்கு அவர்கள் வழங்கும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றைப் பாராட்டினார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

40 ஆண்டுகால வரலாற்றில், இந்தத் துறையில் நாம் இப்போது நவீன மற்றும் சிறந்த காலகட்டத்தை அடைந்துள்ளோம்.

வெளியுறவு விவகாரங்கள் பற்றி குறிப்பிடும் போது இனி முன்பிருந்த பழைய பிம்பத்தை காணமாட்டோம். மாறாக, அது இப்போது ஒரு முற்போக்கான, நியாயமான, நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக பங்களிக்கும் துறையாக உருவாகி வருகிறது.

பயிற்றப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நெறிமுறைசார் புலம்பெயர் பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் பொறுப்பை பிரதமர் இதன் போது வலியுறுத்தினார். எமது மனித வளத்தை மதிப்பும் தேவுயம் உள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பும் நமக்கு உள்ளது என்று பிரதமர் கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் வழங்கும் ஆதரவை குறிப்பாகப் பாராட்டிய பிரதமர், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் சமூகத்தின் நலன், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு தூதரகங்களிடமிருந்து மேலும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் தொழிலாளர்களை முறையாக வெளிநாடுகளுக்கு அனுப்புதல், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சம்பளத்தை உறுதி செய்தல், சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டால் தேவையான பொறிமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உட்பட, அவர்களின் வேலைகள் மற்றும் உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொறுப்பு மற்றும் வகைகூறல் பற்றி விளக்கினார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இலங்கையர்களுக்கு வெளிப்படையான, நியாயமான மற்றும் நெருக்கமான சேவையை வழங்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

100% பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே எங்கள் முயற்சியும் குறிக்கோளும் ஆகும். இலங்கையர்களை உயர் மட்ட வேலைகள் மற்றும் தொழில்சார் வேலைகளுக்கு அனுப்புவது எங்கள் குறிக்கோள் மற்றும் பொறுப்பாகும்.

இலங்கை வரலாற்றில் அதிக அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்த ஆண்டு 2025 என்று நாம் பெருமையுடன் கூறலாம். இந்த 40வது ஆண்டு நிறைவை, அதிக மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் கொண்டாடுகிறோம். ஆனால் நாட்டின் குறிக்கோள், வலுவான உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதும், நாட்டிற்குள் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், அனைவரும் வாழ விரும்பும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதுமாகும். அந்த நோக்கத்தை மனதில் கொண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, புலம்பெயர் சமூகத்தின் நலனுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்காக ஒரு அரசாங்கமாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளையும் விளக்கினார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, தூதுவர்கள், மேல் மாகாண ஆளுநர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெளிநாட்டு சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு