பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

அனைத்துப் பாடசாலைகளிலும் வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய .

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதே வேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.

உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார்.

கல்வித் துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல்,

உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து கல்வித்துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ,

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொழில்சார் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர சேனேவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாளக்க கலுவெவ, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு. வருண தனபால, பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்க உள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துகள் இன்று (ஜூன் 20) நாடாளளுமன்ற வளாகத்தில் பிரதம அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ADB நாட்டு பணிப்பாளர் திரு. தகாஃபுமி கடோனோ மற்றும் பிற ADB பிரதிநிதிகளுக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளன.

கலந்துரையாடலின் போது, பிரதம அமைச்சர் ADB பிரதிநிதிகளுக்கு புதிய கல்வி சீர்திருத்தங்களுக்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பாடசாலைக் கல்வியில் வரும் ஆண்டுக்கான புதிய சீர்திருத்தங்களின் செயல்படுத்தல் மற்றும் அதில் உள்ள சம்பந்தப்பட்ட சவால்கள் குறித்து விளக்கினார்.

புதிய பாடத்திட்டத்தின் தயாரிப்பு, கல்வித் துறையில் மனிதவள வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுக் கல்வி, தொழிற்பயிற்சி, உயர் கல்வி மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சியில் முன்னெடுப்புகள் தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதம அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.

ஆசிய வளர்ச்சி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் திருப்தியைத் தெரிவித்து, ஆசிரியர் பயிற்சி, உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளிட்ட கல்வித் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்த கூட்டத்தில் ADB பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் திரு. நாளக் கலுவெவ மற்றும் கல்வி அமைச்சின் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதம அமைச்சரின் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிய கலாநிதி ரஜினி அமர சூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche உட்பட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கிடையே இன்று (20) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் இலங்கையில் சமாதானத்தைப் பேணுதல் , மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், சுகாதாரம், நிர்வாகம் மற்றும் நிதியளித்தல், பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல், கல்வி, பொருளாதாரத்தை இயல்பு நிலைப்படுத்தல், காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் ஆகிய துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடல் நடைபெற்றதோடு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இதில் UNICEF பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி Andreas Karpati, பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதம மந்திரி ஊடகப் பிரிவு

UN Presents the 2025 Human Development Report to the Prime Minister

The Human Development Report for the year 2025, issued under the United Nations Development Programme (UNDP), was officially presented to Prime Minister Dr. Harini Amarasuriya on June 19.

The theme of this year’s Human Development Report is "People and Capabilities in the Age of AI (Artificial Intelligence)." The report discusses how artificial intelligence should be used responsibly and ethically.

The primary objective of the report is to highlight how AI can be utilized to empower public imagination, and thereby contribute to shaping the economy of a country and society in the process of development.

The event was attended by Deputy Minister of Digital Economy Eranga Weeraratna, Sri Lanka Resident Representative for UNDP program Azusa Kubota, and UNDP Sri Lanka Policy Specialist for Strategic Engagement and Innovation Team Fadil Bakir.

Prime Minister’s Media Division

Support of Maha Sangha is essential in Strengthening the Pirivena Education as a Model for All - Prime Minister Dr. Harini Amarasuriya

The Prime Minister Dr. Harini Amarasuriya stated that the support of the Maha Sangha is essential to establish Pirivena education as a model for all.

The Prime Minister made these remarks while addressing the 2025 National Pirivena Day celebration held June 19 at Temple Trees, in conjunction with the commemoration of the birth anniversary of the late Most Venerable Welivita Pindapathika Asarana Sarana Saranankara Sangharaja Thero, who pioneered the revitalization of Pirivena education as a central component of the national education system.

Addressing the ceremony, the Prime Minister Dr. Harini Amarasuriya stated:

The need for an environmentally conscious, sensitive, and ethically grounded future generation is not only a national necessity but a global necessity because humanity is increasingly distancing itself from human values, engaging in an intense mechanistic struggle driven by commercial objectives, resulting in global conflicts, pandemics, natural disasters, and even climate change that emerges as threats to all forms of life on Earth.

In order to overcome this deteriorating socio-environmental pattern, the government is actively engaged in a transformative process in the field of education, marking a significant and revolutionary turn.

In this regard, the government has paid a special attention toward achieving high-quality development expectations of Pirivena education, which previously functioned as a central foundation of Sri Lanka’s education system.

In order to achieve this, educational initiatives such as the newly introduced Tripitaka Dhamma Proficiency Examination have been established to ensure balanced development across the triad of knowledge, skills, and attitudes and thereby shaping the lives of student monks meaningfully and comprehensively and the government will continue to provide the necessary human and physical resources for Piriven institutions.

The government seeks the blessings and cooperation of the Most Venerable Mahanayake Theros, as well as the dedication of Pirivena principals, teachers, and administrators, to uplift Pirivena education as a role model for all.

I take this opportunity to extend my appreciation to the historically prestigious Pirivena education system, which has contributed to the sustainable and long-term nourishment of Sri Lanka’s educational sector.

Pirivena education has played a vital role in the development of Buddhism, education, and social well-being in the country. I consider it a great honor to have been able to participate in the National Pirivena Day celebration held on June 19, coinciding with the commemoration of the birth anniversary of the Most Venerable Welivita Sri Saranankara Sangharaja Thero.

During the event, tributes were paid to the Maha Sangha and lay individuals who have devoted themselves to the development of Pirivena education. Awards were also presented to student monks who secured first, second, and third places at the All-Island level in Pirivena education for the year 2024.

The event was graced by the presence of the Most Venerable Makulawe Wimalanatha Nayaka Thero of the Ramanggna Maha Nikaya, along with Maha Sangha of the Tri-Nikaya, heads of Pirivenas and Silmata educational institutions across the island, Minister of Religious and Cultural Affairs Hiniduma Sunil Senevi, Deputy Minister of Education Dr. Madhura Seneviratne, Secretary to the Ministry of Education Mr. Nalaka Kaluwawa, and many other government officials.

Prime Minister’s Media Division

’பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஜூன் 19) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஏற்பாடு செய்த ’பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’ என்ற செரண்டிபிட்டி அறிவுத் திட்டத்தில் பங்கேற்றார்.

"செரண்டிபிட்டி அறிவுத் திட்டம்" (SKOP) என்பது இலங்கைக்குரிய பிரச்சினைகள் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும், தேசிய புத்தாக்கச் சூழலை வலுப்படுத்துவதற்கும், அரசாங்கம், சர்வதேச நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே நீண்ட கால ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ADB இன் அறிவுத் திட்டமாகும்.

தொடக்க உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொருளாதார நெருக்கடி மற்றும் நடுத்தர வருமானப் பொறியிலிருந்து மீண்டெழுவதற்கு புத்தாக்கத்தின் தேவையை வலியுறுத்தினார். மேலும், தனியார் துறையுடன் திறம்பட ஒன்றிணைந்து கொள்கைகளை வகுப்பதிலும், புத்தாக்கச் சங்கிலி முழுவதிலும் தீவிர ஈடுபாட்டின் மூலம் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதிலும் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை புத்தாக்கத்திற்கு வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்த போதிலும், ஒருங்கிணைப்பு இல்லாமையின் காரணமாக உலகளாவிய புத்தாக்கக் குறியீடு 2024 இல் 113 நாடுகளில் 89வது இடத்தில் இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். பல தசாப்தங்களாக, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு குறைவான கவனமே செலுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மொத்த செலவு GDP இன் வெறும் 0.1% ஆகவே இருக்கின்றது.

இந்த நிலையை மாற்றுவதற்கு எமது அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இருப்பினும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கான நிதியுதவியை அதிகரிக்க இருக்கின்றோம். அத்தோடு உயர்கல்வியில் மூலோபாய முதலீட்டையும் மேற்கொள்ளவிருக்கின்றோம்’ என தெரிவித்தார்

இந்த நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணியகத்தின் நாட்டுப் பணிப்பாளர் தகஃபுமி கடோனோ, பிரதமரின் செயலாளர் ஜீ. பிரதீப் சபுதந்த்ரி, உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக்க கலுவெவ, உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கையின் பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு