பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

A Meeting Between the Prime Minister and the Gates Foundation

A meeting between the Global Development Chair including the delegation of the American Gates Foundation and the Prime Minister was held on 11th of July at the Parliament.

During the meeting, Dr. Chris Elias, Global Development Chair of the Gates Foundation, mentioned that this was his first visit to Sri Lanka and expressed his gratitude for the invitation extended to participate in this important discussion at the Parliament.

Dr. Chris Elias also stated that the Gates Foundation is willing to collaborate with Sri Lanka and highlighted areas where support could be extended, including improving the nutritional needs of children and women in the country, and the use of new digital tools to uplift the agricultural sector.

The Prime Minister Dr. Harini Amarasuriya appreciated the efforts of the Gates Foundation in addressing malnutrition by promoting maternal and child nutrition across Asian countries, including Sri Lanka and further discussed the contribution of the foundation to advancing digital technological development in the region.

While presenting the Gates Foundation representatives about government programs on provision of mid-day meals in schools to fulfill the nutritional needs of children, the Prime Minister expressed the need of their maximum support in meeting the nutritional needs of the children of the nation.

Further, the Prime Minister briefed the Gates Foundation representatives on the operations of the Digital Education Task Force, which was established under the patronage of the Secretary to the Prime Minister to integrate digital technology into teaching, learning, assessment, and education administration as part of the country’s new digital transformation in education.

The Prime Minister also emphasized the importance of the Gates Foundation’s support and contribution to both the Digital Education Task Force and the upcoming education reforms set to commence in 2026.

Representatives of the Gates Foundation assured the Prime Minister of their commitment to supporting and partnering with relevant stakeholders in education reform and task force initiatives.

The event was attended by the secretary to the Prime Minister Mr. Pradeep Saputhanthri, Additional Secretary to the Prime Minister Ms. Sagarika Bogahawatte, Regional Representative for Policy and Government Relations of the Gates Foundation Dr. Jamal Khan, Director and Program Advisor of the Gates Foundation Ms. Archana Vyas, along with other members of the Foundation.

Prime Minister’s Media Division

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டும் கொள்கைகள், புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வியின் முக்கிய தூண்கள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு மூலம் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் கண்காணிக்கப்படும் விதம் தொடர்பாகவும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டன.

அத்தோடு, 21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதற்கான அடிப்படை அடித்தளத்தை அமைப்பது மற்றும் அந்த புதிய குடிமகனை நாட்டின் நிலையான தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானச் செயன்முறைக்கு பங்களிப்பாளராக மாற்றுவது ஆகியன இந்த புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.

கல்வி சீர்திருத்தங்கள் குறித்த அடிப்படை விளக்கத்தைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள், சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை முன்வைத்தனர். அப்போது, விசேட தேவைகள் உள்ள மற்றும் மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளுக்கு இந்த கல்வி மாற்றத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேவைகள் குறித்து விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோர் உட்பட கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் காணப்படும் இரத்தசோகை ஒரு கடினமான பிரச்சினை என்ற போதிலும் தீர்வு காண இயலாதது அல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தெற்காசியாவில் இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவிவரும் இரத்தசோகையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஜூலை 9 முதல் 11 வரை, "போஷாக்கு மிக்க தெற்காசியா" எனும் தலைப்பில், கொழும்பு சின்னமன் லேக்சைடி ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்ததாவது:

"பிராந்திய ரீதியில் மிகவும் முக்கியமான இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்தமைக்காக முதற்கண் ஏற்பாட்டுக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டின் எமது இலக்கு ’தடுக்கக்கூடிய இரத்தசோகையால் எந்த ஒரு இளம் பெண் பிள்ளையோ அல்லது பெண்ணோ பாதிக்கப்படாத ஒரு தெற்காசியாவை உருவாக்கிக்கொள்வதும் அந்த நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதுமே ஆகும்’. இந்த இலக்கை அடைய வேண்டுமாயின், சகல பெண் பிள்ளைகளுக்கும் போஷாக்கு மிக்க உணவு, சுகாதாரக் கல்வி மற்றும் தரமான பராமரிப்பு ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு பெண்களுக்கு அவர்களின் முழுத் திறனையும் உணர்ந்துகொள்ளக்கூடிய, அதற்காக அவர்களை ஊக்குவிக்கின்ற ஒரு சுற்றாடலை உருவாக்க வேண்டும்.

இந்த நோக்கத்தை அரசாங்கத்தினால் மட்டும் தனியாக நிறைவேற்ற இயலாது. அதனாலேயே இந்த மாநாடு, மேற்குறிப்பிட்ட எமது இலக்கை அடைவதற்கு, எம்மை ஆசீர்வதிக்கும், எமக்கு பக்கபலமாக இருக்கும், சமூகத்தின் சகல தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெறும் புதிய அர்ப்பணிப்பு மற்றும் செயல்முறை சார்ந்த செயல்பாடுகளுக்குத் தயாராகிய ஒரு திருப்புமுனையாக இந்த மாநாடு உருவாகியிருக்கின்றது." எனத் தெரிவித்த பிரதமர் மேலும்,

"இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியிலான இரத்தசோகைப் பிரச்சனை ஒரு கடுமையான பிரச்சனையாக இருப்பினும் அது தீர்வு காண இயலாதது அல்ல. புதிய அர்ப்பணிப்பு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சி மூலம் நம்மால் தெற்காசியாவின் எதிர்கால சந்ததியினரைப் போஷிக்க முடியும். அதோடு போஷாக்கின்மையின் சக்கரத்தைத் தகர்த்து, ஆரோக்கியமான, நியாயமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது என்னுடையதும் எமது அரசாங்கத்தினதும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும். அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது முழுமையான அர்ப்பணிப்பை பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டுள்ளோம் என்பதை இவ்விடத்தில் நான் நினைவூட்ட விரும்புகின்றேன். பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட எமது போஷாக்குத் திட்டத்தின் ஓர் எதிர்பார்ப்பாக நம் மாணவர்கள் மத்தியில் உரிய போஷாக்கினைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் போஷாக்கின்மைக்கு ஆளாகிவிடுவதைத் தடுத்துக்கொள்வதேயாகும்.

இந்த மாநாட்டில் ஏற்படும் அர்த்த புஷ்டியான கலந்துரையாடல்கள், பெருமதி மிக்க கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதோடு செயல்பாட்டு ரீதியிலான உங்களது அர்ப்பணிப்பை நான் மிகுந்த அக்கறையுடனும் எதிர்பார்ப்புடனும் அவதானித்துக்கொண்டிருப்பேன் என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு பிராந்தியமாக ஒன்றுபட்டு, இங்கு காணப்படுகின்ற இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியிலான இரத்தசோகையைக் குறைப்பதற்கும் முற்றாக அதனை ஒழித்துக்கட்டுவதற்கும் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தையும் அதற்கான பங்களிப்பினையும் கைகூடச் செய்வதற்கு எமது அர்ப்பணிப்பை பெற்றுத்தருவோம் என உறுதியளிப்பதோடு, ஒன்றுபட்டு எமது இளம் பெண் பிள்ளைகளையும் பெண்களையும் இயன்ற அளவு போஷித்து, அதன் மூலம் பெற்றுக்கொள்ளும் ஆரம்பத்தின் மூலம் ஒட்டுமொத்த தெற்காசியாவையும் போஷிப்போம் என்பதை இந்த மாநாட்டில் முன்மொழிய விரும்புகிறேன்.

மிகவும் முக்கியமான இந்த மாநாடு நடைபெறும் எமது அழகான தீவின் நேசமிகு விருந்தோம்பலையும், ஒப்பற்ற எழிலையும் ரசித்தவாறே, தொழில் ரீதியிலான உங்களது திருப்தியையும் தனிப்பட்ட ரீதியில் என்றும் நெஞ்சில் நினைத்து நிற்கும் பொன்னான காலமாக நீங்கள் இங்கு தங்கியிருக்கும் காலம் அமைய வேண்டும் என உங்களை வாழ்த்துவதற்கும் இதனை ஒரு வாய்ப்பாகக் கொள்ள விரும்புகிறேன்." எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் அவர்களை ஏற்பாட்டுக் குழு சார்பில் Rini Simon Khanna வரவேற்றதோடு, சார்க் அமைப்பின் சார்பில் Md. Golam Sarwar மற்றும் யுனிசெப் (UNICEF) அமைப்பின் சார்பில் Sanjay Wijesekera உள்ளிட்ட விருந்தினர்களும் மாநாட்டின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

All Citizens Should be able to access services in their respective mother tongue – Prime Minister Dr. Harini Amarasuriya

Let us all strive to create a space where language does not create dividing, but rather a medium that unites all individuals from diverse backgrounds.

Prime Minister Dr. Harini Amarasuriya emphasized that following the policy statement “A Prosperous Country – A Beautiful Life”, national policies must be implemented in such a way that every citizen can access essential services in their respective mother tongues as well as in sign language.

The Prime Minister made these remarks while participating in the closing ceremony of the National Languages Week "Path to Reconciliation", organized by the Ministry of Justice and National Integration, held at the Sri Lanka Foundation on 07th of July.

The National Languages Week, held under the theme “Talk Together – Live Together”, commenced on 01st of July, marking the National Languages Day, and continued for seven days and the closing ceremony was held under the participation of the Prime Minister Dr. Harini Amarasuriya and Minister of Justice and National Integration, Mr. Harsha Nanayakkara.

Delivering further remarks at the event, the Prime Minister stated:

National Languages Week is not just a time to focus on and acknowledge language policy but also it highlights the critical role of the language that fosters identity, respect, and in building a peaceful society that brings all people together.

If certain communities feel that they do not have the opportunity to communicate in their own language at crucial institutions like courts, police stations, schools, state institutions, or administrative offices, then this is not merely an issue of service delivery. In such circumstances, people may genuinely begin to feel that they are excluded. Therefore, it is essential to ensure equal linguistic rights and dignity for all ethnic groups.

Therefore, we must create schools where Sinhala and Tamil students can learn each other’s languages, hospitals where patients can express their symptoms in the language they feel most comfortable in and receive respectful care, and a justice system where citizens can seek justice in a language they understand.

These are not luxury privileges but fundamental conditions that should practically exist in a society rooted in harmony.

Accordingly, the new educational reforms beginning in 2026 will incorporate teaching methods that emphasize the importance of all languages in the country and highlight language as something beyond just a subject. That is why such reforms have been introduced.

Addressing the event, Minister of Justice and National Unity Mr. Harsha Nanayakkara said:

Even though we may not share the same past, we certainly share a common future that we can build together. On this National Languages Day, let us all commit ourselves to building a Sri Lanka that thrives on genuine reconciliation and vibrant unity.

At the closing ceremony of National Languages Week, awards and certificates were presented by the Prime Minister to the winners of the model essay competition held at school level by the Official Languages Commission, and to those who passed the National Language Proficiency Examinations conducted by the Department of Official Languages.

The event was attended by the High Commissioner of Canada to Sri Lanka, the High Commissioner of Bangladesh, Deputy Minister of National Integration Mr. Muneer Mulaffar, Secretary to the Prime Minister Mr. Pradeep Saputhanthri, Secretary to the Ministry of Justice and National Integration President’s Counsel Ayesha Jinadasa, along with other state and diplomatic officials, students, and the general public.

Prime Minister’s Media Division

பின்தங்கிய பகுதிகளுக்கான நிதி உதவியை அதிகரித்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக நிதி உதவி ஒதுக்கீடு பெறுதல் அவசியமாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 5ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு மாகாண மற்றும் பிராந்திய அளவில் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்து ஆளுநர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடலில் உரையாற்றும் போது, பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர், கவனமாக திட்டமிடப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை பற்றி கலந்துரையாடி, நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

தேசிய கொள்கைகளையும், மாகாண சபை நடைமுறைகளையும் இணைத்து, இந்த கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கல்விக் கொள்கைகளில் வேறுபாடுகள் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றோம். குறிப்பாக, இந்த கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும். இந்த செயல்முறையின் இறுதி பயனாளர்கள் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், குடும்பங்களுமாக இருக்க வேண்டும். எடுக்கும் அனைத்து முடிவுகளும் பிள்ளைகளை மனதில் வைத்தே எடுக்கப்பட வேண்டும்.

கல்விச் சீர்திருத்தத்தின் போது எதிர்கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன.

ஒன்று, தற்போதைய கல்வி முறையை மாற்றி அமைப்பது.

அடுத்தது, சீர்திருத்தம் நடைபெறும் காலத்திலும் தற்போதைய நடைமுறைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னெடுப்பது.

நீண்டகாலமாக எடுக்கப்பட்ட முடிவுகளால் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கும் அதே வேளையில், இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

பாடசாலைகளின் வழமையான பணிகளை முன்னெடுக்கும் போது, கொள்கை தொடர்பான விடயங்களில் இனக்கப்பாட்டுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனெவிரத்ன, தொழில்நுட்பக் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுததந்திரி, கல்வி அமைச்சு செயலாளர் நாளக்க களுவெவ, மாகாண ஆளுநர்கள், மாகாணச் செயலாளர்கள், மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், திறைசேரி, நிதிக் குழு மற்றும் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

*பிரதமர் ஊடகப் பிரிவு

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகமும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 5 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மருத்துவ சபையின் (SLMC) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நூற்றாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, ஒரு உத்தியோகபூர்வ நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

"இது மக்களுக்கும், மருத்துவத் துறைக்கும், நமது நாட்டுக்கும் 100 வருட சேவை நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பம் மட்டுமல்ல. மருத்துவவியலில் நாம் உயிர்களுடன் பணியாற்றுவதால், இந்த பொறுப்பு மிகவும் தீர்க்கமானது. கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், கோவிட் பெருந்தொற்றின் போது மருத்துவ சேவை வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, இலங்கை சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது.

நமது மருத்துவக் கல்வியின் மூலம், மேலும் மனிதாபிமானமுள்ள, உணர்வுபூர்வமான, நெறிமுறை சார்ந்த முழுமையான மருத்துவர்களை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றிக் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை அடைந்ததற்காக இலங்கை மருத்துவ சபைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றுபோல் எதிர்காலத்திலும் உங்களுடன் இணைந்திருப்பதில் அரசாங்கம் பெருமை கொள்கிறது," எனத் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர்,

"நமது சுகாதார சேவை புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் காலத்திலேயே நாம் இருக்கிறோம். பழைய உறுதிப்பாடுகள் புதிய சிக்கலான விடயங்களுக்கு வழி வகுக்கின்றன. நாம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, டிஜிட்டல்மயமாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரபணு மருத்துவவியல் மற்றும் நாடுகளுக்கு இடையேயான மருத்துவ சேவை வழங்குதலை நோக்கிப் பயணிக்கும்போது, ஒழுங்குபடுத்தல் அதனுடன் முன்னேற வேண்டும். இலங்கை மருத்துவ சபை இந்த அழுத்தங்களைத் தாங்கி நிற்கவில்லை; உண்மையில் நாம் அதன் மத்தியிலேயே இருக்கிறோம்.

மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாமல், இலங்கையில் சுகாதார சேவைகளை வழங்குவதன் நோக்குநிலையை வடிவமைப்பதிலும் சுகாதார அமைச்சு இலங்கை மருத்துவ சபையை ஒரு முக்கிய பங்காளி எனக் கருதுகிறது. பல வருடங்களாக, உரிமம் வழங்குதல், கல்வித் தரநிலைகள், தொழில்முறை மேம்பாடு பராமரித்தல், நெறிமுறை மேற்பார்வை மற்றும் சுகாதாரப் பணியாளர் திட்டமிடல் போன்ற விடயங்களில் நாம் ஒன்றாகப் பணியாற்றியுள்ளோம். இவை சிறிய பணிகள் அல்ல – நமது குடிமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் தரம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை இந்த விடயங்களே தீர்மானிக்கின்றன." என்றார்.

இக்கூட்டத்தில் தூதுவர்கள், சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இலங்கை மருத்துவ சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.

பிரதம மந்திரி ஊடகப் பிரிவு