பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கலந்துரையாடல் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையாலான குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்று 26.08.2022 அன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை சபையின் பிரதித் தலைவர் மசாஹிரோ நோசாக்கி, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி துபாகாஸ் பெரிதானுசேத்தியன்,
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்று பணிப்பாளரும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநருமான சந்திரநாத் அமரசேகர ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.