மஹா போதி அக்ரசிராவக்க மகா விகாரையில் சிறி தேவமித்த தம்மபால தேரரின் உருவச் சிலை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது…

அநாகரிக தர்மபாலவின் துறவு வாழ்க்கையின் முதலாவது உருவச் சிலையான சிறி தேவமித்த தம்மபால தேரரின் உருவச் சிலை திறப்பு விழா இன்று (2024.01.05) கொழும்பு மகா போதி அக்ரசிராவக்க மகா விகாரையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை மகா போதி சங்கத்தின் தலைவரும் அக்ரசிராவக்க மகா விகாரையின் விகாராதிபதியும் சாஞ்சி சைத்தியகிரி விகாரையின் விகாராதிபதியும் ஜப்பான் பிரதம சங்கநாயக்கருமான சங்கைக்குரிய பானகல உபதிஸ்ஸ தேரரின் 74வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகாசங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் ரணசிங்க, யதாமினி குணவர்தன, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு