உலகளாவிய சமாதானத் தூதுவர், ஆன்மீகத் தலைவர், வாழும் கலை மன்றத்தின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று (2024.05.18) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இளைஞர் யுவதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கையில் இலவச கல்வி நிலையங்களை நிறுவ தனது மன்றம் திட்டமிட்டுள்ளதாக குருதேவ் கூறினார்.

மேலும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவ விருப்பம் தெரிவித்தார். இந்த மன்றம் மட்டக்களப்பு மற்றும் வெல்லவாயவில் இரண்டு சிறுவர் இல்லங்களை நிறுவியுள்ளது.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, யதாமினி குணவர்தன, கலாநிதி என். ராமானுஜம், வினோத் முனசிங்க, மது ராவ் மற்றும் வாழும் கலை மன்றத்தின் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு