அதிக விளைச்சலை தரும் நெற் பயிர்ச்செய்கைக்கு சீனாவின் நிபுணத்துவம்...

சீனப் பிரதமர் லீ கியாங், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு. கி சென்ஹொங் இன்று (2024.01.09) அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்து சீனப் பிரதமரின் விசேட வாழ்த்து அட்டையை கையளித்தார்.

இலங்கையின் நெருக்கடி நிலைமைகளை வெற்றிகொள்ளும் திறனைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த தூதுவர், விவசாயத்துறையை நவீனமயமாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை உறுதியளித்தார்.

அதிக விளைச்சலைத் தரும் நெற்பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பான சீன நிபுணத்துவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் வேலைத்திட்டத்தை சீனா ஆரம்பிக்கவுள்ளதாக சீனத் தூதுவர் தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சீனாவின் சிரேஷ்ட இராஜதந்திரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு