அத்தனகல்ல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு பர்மா அரசினால் வழங்கப்பட்ட அக்கமகா பண்டித என்ற கௌரவப் பட்டத்துடன் கூடிய நற்சான்றுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (2024.05.18) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

திம்புல் கும்புரே ஸ்ரீ விமலதம்ம நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் வஜிர அபேவர்தன, யதாமினி குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாட்டலி சம்பிக்க ரணவக்க, விஜித ஹேரத் உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு