பிரதமர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கிடையில் இன்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் மாணவ நலன்புரி விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் இதுவரை முகம்கொடுத்த தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கல்வி உரிமைக்கான மாணவர் அமைப்பு, வைத்திய பீட மாணவர் செயற்பாட்டாளர் குழு மற்றும் அனைத்து மருத்துவ பீட மாணவர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் அமைப்பு, அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் அமைப்பு, சமுத்திர பல்கலைக்கழக மாணவர் சங்கம், பொறியியல் தொழில்நுட்ப நிறுவன மாணவர் சங்கம், மொரட்டுவை பொறியியல் பீட மாணவர் சங்கம் உள்ளிட்ட பல மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு