தேசிய வீரர் பிலிப் குணவர்தனவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் சீனக் குடியரசு இலங்கை பிரதமரின் ஊடாக அன்பளிப்புச் செய்த பன்னிரண்டாயிரம் சீதாவகை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் ’சீதாவக சிசு அருணலு’ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீவு ஷென்ஹோங் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (25.09.2023) ஹங்வெல்ல ராஜசிங்க வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்திகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, யதாமினி குணவர்தன, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் த எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, ராஜசிங்க மத்திய கல்லூரியின் அதிபர் ஜகத் சூரசேன மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.