இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கான ’45 Under 45’ விசேட விருதுகள்...

’45 Under 45’ தொழில் முயற்சி விசேட விருதுகள் வழங்கும் நிகழ்வு 2024.05.16 அன்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

குறுகிய காலத்தில் புத்தாக்க முறைமைகளைப் பின்பற்றி வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்றும், தமது திறமையால் பிரதம நிறைவேற்று அதிகாரிகளாக மாறியுள்ள இளம் தொழில்முனைவோரை மேலும் ஊக்குவிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.

இதன்போது 56 நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சர்வோதய இயக்கம் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த கலாநிதி ஏ. டி. ஆரியரத்னவுக்கு விசேட விருது வழங்கப்பட்டதுடன் அதனை திருமதி நீடா ஆரியரத்ன பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குளோபல் சீ.ஈ.ஓ மன்றத்தின் தலைவர் அனுர சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு