நீண்ட காலமாக இருந்துவரும் தாய்லாந்து இலங்கை உறவுகளின் அடிப்படையில் சியம் தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட உபசம்பதா மீண்டும் நிறுவப்பட்டு 270 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தாய்லாந்தின் உப சங்கராஜ தேரர் சங்கைக்குரிய சோம்தேஜ் பிரதெப் சிறிந்தராவஸ் விகாரையின் சோம்தேஜ் தீரயன்முனி தேரரின் தலைமையில் அந்நாட்டு மக்களினால் அன்பளிப்புசெய்யப்பட்ட சமாதி புத்தர் சிலை இலங்கை மக்கள் சார்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பொறுப்பேற்கப்பட்டு, 2023.09.24 அன்று அலரி மாளிகையில் சன்னஸ்பத்திரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, தாய்லாந்து தூதுவர் போஜ் ஹான்போல் மற்றும் இரு நாட்டு பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு