தெஹிவளை கல்கிசை மாநகர சபை வேட்பாளர் குழுவின் தலைவரும், முன்னாள் மேலதிக அளவையாளர் நாயகம், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினருமான திரு.பெரகும் சாந்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவின் அழைப்பின் பேரில், சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெதிமாலை ஸ்ரீ வெங்கடேஷ்வர விஷ்ணு கோயிலில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்குபற்றி புத்தாண்டுக்காக இந்து சம்பிரதாயங்களின்படி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் தெஹிவளை கல்கிசை மாநகர சபைக்கான தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் குழுவின் உறுப்பினர்களான லலித் சிறினிமல், அசேல பொன்சேகா, அகலங்க சேரசிங்க, தமித் ஜெயவர்தன, ஜயந்த குணரத்ன, லக்ஷ்மன் கம்லத், சரத் தம்மிக்க, தினேஷ் சோமதிலக, குலசிங்கராசா ரமணன், ரமணி அலகொலங்க, ரஸ்மினா ஹசன், குமாரி கருணாஜீவ, யாலினி ராஜரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு