’உயர்ந்த நட்பு உணர்வை நேசிப்போம்’ பொலிஸ் வெசாக் பக்தி பாடல் இசை நிகழ்வு பிரதமர் தலைமையில்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸ் பௌத்த மற்றும் மத விவகார சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ’உயர்ந்த நட்பு உணர்வை நேசிப்போம்’ பொலிஸ் வெசாக் பக்தி பாடல் இசை நிகழ்வு மே மாதம் 17ம் திகதி பொலிஸ் தலைமையக வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

வெசாக் பக்தி பாடல் இசை நிகழ்வில் இலங்கை பொலிஸ் மேற்கத்திய இசைக்குழு பிரிவின் ஊடாக இசை வழங்கப்பட்டது. நாட்டின் பிரபல பாடல் கலைஞர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் பாடல்களை பாடியிருந்தனர்.

இந்த நிகழ்வில் இந்திய நேபாள உயர்ஸ்தானிகர், ஜப்பான் பிரதி தூதுவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மேல் மாகாண முதலமைச்சர் ஹனீப் யூசுப், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நிர்வாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் முன்னாள் பொலிஸ் மா அதிபர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு