சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (Pefferal) அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று 2022.12.05 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

தேர்தல் முறை, தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகள், முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், மக்களுக்குப் பொறுப்புக்கூறும் மக்கள் பிரதிநிதியை உருவாக்குதல், இளம் பெண்களின் பிரதிநிதித்துவம், தேர்தல் வேட்பாளர் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டன.
பெஃபரல் நிறுவனத்தின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்