நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தறை எமது அன்னை ஆலயத்தின் 118-வது வருடாந்த பெருவிழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செப்டம்பர் 13ஆம் திகதி கலந்துகொண்டார்.

இந்த வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்ட பிரதமருக்கு, பதுளை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜூட் நிஷாந்த சில்வா மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ரேமண்ட் விக்கிரமசிங்க ஆகியோரால் விசேட ஆசீர்வாத பூஜை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேவாலயத்தின் பிரதான மண்டபத்தில் மாத்தறைப் பிரதேசத்தை சேர்ந்த அனைத்து மதத் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன் போது நீண்ட வரலாறு கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவில் கலந்துகொள்ள கிடைத்தமை ஒரு பாக்கியம் எனத் தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் சார்பில் திருவிழாவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"இந்த தேவாலயத்திற்கும், நகரிலுள்ள ஏனைய மதஸ்தலங்களுக்கும் இடையில் நிலவும் சகோதரத்துவம் மற்றும் பிணைப்பின் மூலம் ஒற்றுமை, நீதி மற்றும் சமத்துவம் என்ற விழுமியங்களுக்காக வழங்கப்படும் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மாத்தறை நகருக்கு மட்டுமல்லாது இந்த நாட்டுக்கே இது அவசியமானதாகும். இந்த முன்மாதிரி நமக்குத் மிகவும் தேவையானது. இந்த முன்மாதிரியை எமக்கு பெற்றுத்தரும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அத்துடன், சமூகத்திற்காக நீங்கள் செய்யும் இந்த சேவைக்கும், சமூக நீதிக்காக நீங்கள் மேற்கொள்ளும் இந்த பங்களிப்புக்கும் மேலும் வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்.

இந்த நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜூட் நிஷாந்த சில்வா, காலி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ரேமண்ட் விக்கிரமசிங்க, காலி மறைமாவட்டத்தின் துணைத் தலைவர் அதிவணக்கத்துக்குரிய மைக்கேல் இராஜேந்திரம், தேவாலயத்தின் நிர்வாகி அருட்தந்தை ஜூட் சம்பத் விலேகொட உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும், மாத்தறை கோட்டை இரத்னபால பிரிவெனாவின் தலைமை நிர்வாகியும், மகா மந்தின்த பிரிவெனாவின் தலைமை நிர்வாகியும் ஆகிய சாஸ்திரவேதி பண்டிதர் அதிவணக்கத்துக்குரிய திஸ்ஸமஹாராம இந்திரானந்த தலைமைத் தேரர், மாத்தறை கோட்டேகொடை ஜயசுமனாராம விகாரையின் விஹாராதிபதி அதிவணக்கத்துக்குரிய யட்டிகல சோமதிலக தலைமைத் தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்கள், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு