இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திரு. Paul Wesley Stephensக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) காலை கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு