உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

சிறந்தவை பிள்ளைகளுக்கே. இது ஒரு நாளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக என்றைக்குமானது. சிறுவர்களுக்காக இன்று செய்யப்படும் தியாகங்கள் மற்றும் முதலீடுகளின் மூலமே அபிவிருத்தியடைந்த பலமான தேசம் கட்டியெழுப்பப்படுகிறது.

சிறுவர்களுக்கான சிறந்ததோர் உலகை உருவாக்க, உலக மக்களை விழிப்புணர்வு பெறச்செய்யவே சிறுவரகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இருப்பினும், சிறுவர்களின் உலகை உருவாக்க ஒவ்வொரு கணமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும்.

வேகமாக மாறிவரும் இன்றைய உலகில், நாளுக்கு நாள் எழும் பல்வகைப்பட்ட மற்றும் எதிர்பாராத சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, சிறுவர்களைப்
பாதுகாத்து, சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுப்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.

எந்த ஒரு பிள்ளையும் புறக்கணிக்கப்படாமல் சமமான முறையில் அவர்களுக்கு வளங்களையும் வழிகாட்டுதலையும் வழங்குவதன் மூலம் அதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் என்றும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

தேசத்தின் பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்திற்காக எனது வாழ்த்துக்கள்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2023 ஒக்டோபர் 01