விவசாயம் மற்றும் காணி அமைச்சராக இருந்த சேர் ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களின் நாற்பதாவது நினைவு தினம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2023.09.20) ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, ஜகத் குமார, முன்னாள் ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு