14 வயதுடைய பாடசாலை மாணவியிடமிருந்து பிரதமருக்கு கிடைத்த மகஜர்

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

சிறுவர் மற்றும் இளைஞர் பரம்பரையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரி மாணவி இந்த மகஜரை கையளித்துள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு