சபரகமுவ மாகாணப் பிரதம சங்கநாயக்க, அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்த நாயக்கத் தேரர் கௌரவிப்பு விழா
மகா விகார வம்ச ஸ்ரீ சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரப் பிரிவின் சபரகமுவ மாகாணப் பிரதம சங்கநாயக்கர், ஓய்வுபெற்ற பிரிவெனா பரிசோதகர், ராஜகீய பண்டித, முதுகலைமாணி, நூலாசிரியர், கலாபூஷண, வினய கீர்த்தி ஸ்ரீ தம்மதின்ன சரணபால அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்த நாயக்க தேரர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "கௌரவாபினந்தன" பாராட்டு விழா, 2026 பெப்ரவரி 25ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து பிரிவின் அநுநாயக்க, கலாநிதி அக்கமஹா பண்டித நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்ஷித விஜிதசிறி அநுநாயக்க தேரர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்தாபிதான நாயக்க தேரர் அவர்களுக்குரிய பாராட்டு ஞாபகச் சின்னத்தைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களும் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி அவர்களும் இணைந்து வழங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
சபரகமுவ மாகாணத்தின் பிரதம சங்கநாயக்க அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்த நாயக்க தேரர் அவர்களின் மத மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டும் இந்த விழாவில் கலந்துகொள்வதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நாயக்க தேரரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது, அவரது அனுபவங்கள் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றன. சபரகமுவவின் புகழ்பெற்ற துறவியான வணக்கத்துக்குரிய கேல்லே ஸ்ரீ சரணநந்த தேரரின் சீடராகத் துறவறத்தில் இணைந்த நாயக்க தேரர், தற்போது உபசம்பதா பதவி பெற்று 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புமிக்க மதப்பணிகளை ஆற்றிவருகின்றார்.
வித்தியோதய பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று, பல தசாப்தங்களாக ஆசிரியராகவும், பிரிவெனா பரிசோதகராகவும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவொளி ஊட்டிய அவர், பல இலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். குறிப்பாக, பிரிவெனா கல்வி பயிலும் மாணவர்களுக்காக அவர் ஆற்றிய செவ்வியல் இலக்கியப் பங்களிப்புகள் மிகவும் பெறுமதிமிக்கவை.
இரத்தினபுரி மகாவல ஸ்ரீ தர்ம நிறுவனத்தை மையமாகக் கொண்டு, அப்பகுதி மக்களின் ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டிற்காக நாயக்க தேரர் ஆற்றிய அர்ப்பணிப்பைப் பிரதமர் இங்கு நன்றியுடன் நினைவுகூர்ந்தார். அத்துடன், நாயக்க தேரர் அவர்கள் தொடர்ந்தும் தனது மதப்பணிகளை முன்னெடுக்க உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கப்பெற வேண்டும் எனப் பிரார்த்தித்தார்.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் உத்தராதிகாரி மகாநாயக்க, மெய்யியல் முதுகலைமாணி கரகொடை உயங்கொட மைத்திரிமூர்த்தி மகாநாயக்க தேரர், ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் அநுநாயக்க பண்டித வல்பொட குணசிறி அநுநாயக்க தேரர், பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் மல்வத்து மகா விகாரப் பிரிவின் பிரதிச் செயலாளருமான பண்டித மஹவெல தம்மக்கந்த ரதனபாலாபிதான தேரர், மல்வத்து மகா விகாரையின் மஹோபாத்தியாய மற்றும் இரத்தினபுரி, ஊவா வெல்லஸ்ஸ ஆகிய இரு திசைகளின் பிரதம சங்க நாயகரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தருமாகிய பெத்கமுவே தம்மதின்னாபிதான நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
மேலும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஏ. விஜேதுங்க, ஜானக வக்கும்புர, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் சிந்தன உதார நாநாயக்கார, மகா சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே இஷான் மாபிடிகம, இரத்தினபுரி நகர முதல்வர் இந்திரஜித் கட்டுகம்பொல உள்ளிட்ட பெருமளவிலான அதிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





