பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

’திட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பாடசாலைகளின் நிலை குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தோட்டப் புறப் பாடசாலை மாணவர்களின் 13 வருட இடைவிடா கல்வி மற்றும் தமிழ் மொழி மூலமான தொழில் கல்வி ஆகியவற்றின் மீது அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது

’திட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த ஒவ்வொரு பாடசாலையின் தற்போதைய நிலை குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு உத்தியோகத்தர்களுக்குப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கினார்.

தோட்டப் புறப் பாடசாலைகள் தொடர்பில் ஜூன் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

’திட்வா’ சூறாவளியால் தோட்டப் புறப் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணி தொடர்பான பிரச்சினைகள், ஆசிரியர் வெற்றிடங்கள், பாடசாலை அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாணப் பணிகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சூறாவளியினால் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த மற்றும் இடம்பெயர வேண்டியுள்ள பாடசாலைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,

சூறாவளியின் பின்னர் மாகாண சபைகள் ஊடாகப் பல்வேறு தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. அமைச்சின் அதிகாரிகள் இது குறித்து விழிப்புடன் செயற்பட்டு துல்லியமான தரவுகளைச் சேகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களை வேறு பாடசாலைகளில் இணைத்தவுடன் அனைத்தையும் முடித்துவிட்டதாகக் கருத இயலாது. அந்த மாணவர்கள் முறையாகப் பாடசாலைக்கு வருகை தருகிறார்களா, கல்வி கற்கின்றார்களா மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன என்பது குறித்துப் பின்தொடர் கண்காணிப்பு அவசியம்.

சில பாடசாலைகளில் மாணவர்கள் இணைக்கப்பட்டாலும் அவர்கள் அங்கு செல்லவில்லை என அறியக்கிடைக்கிறது. அப்பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியுங்கள். அதேபோல் தற்காலிகப் பாடசாலைகளை அமைப்பதிலும் விரைவாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். தோட்டப் புறப் பாடசாலைகளுக்கென பிரத்தியேகமான உத்தியோகத்தர்கள் உள்ளனர். அவர்களுடன் ஒருங்கிணைந்து துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சபை அதிகாரிகளை இதன்போது முறையாக ஒருங்கிணைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நீங்களும் இந்த விடயங்களில் தலையிட வேண்டும்.

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் புதிய தமிழ் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இம்முறை இடம்பெறும் ஆசிரியர் ஆட்சேர்ப்பின் போது, மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நியமனம் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும்.

தோட்டப் புறப் பாடசாலை மாணவர்களின் 13 வருட இடைவிடா கல்வியை உறுதிப்படுத்துவதோடு, தமிழ் மொழி மூலமான தொழில் கல்வி குறித்தும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது, எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர்களான மதுர செனவிரத்ன, சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

’திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விரிவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகம், குறு, சிறு நடுத்தர மற்றும் பெரும் அளவிலான தொழில்முயற்சியாளர்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் விரிவான நிவாரண வேலைத்திட்டமொன்று முன்னெடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

’திட்வா’ அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் ஜூன் 09 ஆம் திகதி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கடல் மற்றும் நன்னீர் மீனவர்களுக்காக விசேட நிவாரணங்களை வழங்க மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முற்றாகச் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளுக்குப் பதிலாகப் புதிய படகுகளை வழங்கவும், பகுதியளவில் சேதமடைந்த படகுகளைத் திருத்திக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தகுதியுடைய மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடி வலைகளை வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்வாவினால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, வருடாந்தம் 3% சலுகை வட்டி விகிதத்திலான கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த வேலைத்திட்டம் 15 வங்கிகள் ஊடாகச் செயற்படுத்தப்படுகிறது. 2026 ஏப்ரல் 28 ஆம் திகதி வரை, 2,800 தொழில்முயற்சியாளர்களுக்கு 3,812 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலை விரைவாகச் செயற்படுத்துவதற்காக 6 மாத கால சலுகைக் காலத்துடன், அதிகபட்சம் 3 வருட மீளச் செலுத்தும் காலமும் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த தொழில் சூறாவளிக்கு முன்னரும் இயங்கிக் கொண்டிருந்தது என்பதையும், பாதிப்புக்குள்ளானது என்பதையும் உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் பரிந்துரை கட்டாயமாகும்.

இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனையின்படி, அனுமதிப் பெற்ற வங்கிகள் ஊடாக 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை கடன் மீளச் செலுத்துதலை இடைநிறுத்தவும், தண்டனை வட்டி அறவிடப்படாமலிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகள், உரிய அமைச்சுக்களின் சுற்றறிக்கைகள் மற்றும் அனர்த்த நிவாரண வழிகாட்டுதல்களுக்கு அமைய தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் முதலாம் கட்டம் பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சம சலுகைகளைக் கொண்ட கல்வி முறையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு, சரியான தரவு முகாமைத்துவத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் என்ற வகையில், எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய கல்வி முறையொன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்காகச் சரியான தரவுகள், கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அலரி மாளிகையில் 2026.06.06 நடைபெற்ற தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் (NEMIS) மனிதவள முகாமைத்துவ மொடியுலின் முதலாம் கட்டம் மற்றும் ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமையின் முன்னோடித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தங்களின் ஐந்து பிரதான தூண்களின் கீழ் உள்ள மனிதவள முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத் துறைகளின் பணிகளை மிகுந்த வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்காக இந்தத் தகவல் முறைமை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் மாகாணங்கள் வெவ்வேறான தகவல் முறைமைகளைப் பயன்படுத்தி வந்தன, இந்த முறைமையின் மூலம் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் அனைத்துத் தகவல்களும் ஒரே கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக மனிதவள மொடியுல் வெளியிட்டு வைக்கப்பட்டது, இந்த முதலாவது மொடியுலின் கீழ் சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் ஆகிய நான்கு மாகாணங்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் இந்த முறைமையின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், பின்னர் இது முழு நாட்டிற்கும் விரிவுபடுத்தப்படும்.

எதிர்வரும் காலங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்ற மொடியுல்கள் மூலம் பாடசாலைகளின் சகல கல்விசார் பணியாளர்களின் மனிதவள முகாமைத்துவத்தினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது

இத்திட்டமானது பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கல்வித் துறையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான செயலணி, மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகள், தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய சகல தரப்பினர்களும் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்குச் சமாந்தரமாக ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS), பற்றிய முன்னோடி திட்டமும் வெளியிடப்பட்டதோடு, இது டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்தி மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டுச் செயன்முறைகளை மேம்படுத்த வழிவகுக்கும்.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

கல்விக் கட்டமைப்பின் ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறாக தனிமையில் இயங்குவதற்கு பதிலாக நாம்,"கல்வி நிர்வாகம், கற்பித்தல் செயன்முறை மற்றும் கல்வி உள்ளடக்கங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, கல்விக் கட்டமைப்பின் பிரிவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்திருக்கின்றோம். நாம் ஆரம்பித்த அந்த செயலானது எளிதான ஒன்று அல்ல.

எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரை டிஜிட்டல் மயமாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாமும் மாற்றம் பெற்று முன்னோக்கிச் செல்ல வேண்டும். அரச சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களுக்கு வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியம் என நாம் நம்புகிறோம். குறிப்பாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தங்களுக்குத் துல்லியமான தரவுகள் அவசியமாகின்றன. இந்தத் தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் (NEMIS) ஊடாகத் துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்வதுடன், கல்வியின் வெளிப்படைத்தன்மையையும் தரத்தையும் உறுதிப்படுத்த முடியும்.

அனைத்துத் தேசிய பாடசாலைகளும் மிக விரைவில் இந்த முறைமைக்குள் உள்வாங்கப்படும். ஏற்கனவே சில மாகாணங்களின் ஆசிரியர்களின் தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளை மிகவும் வெளிப்படையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

அரச சேவைகளை இவ்வாறு டிஜிட்டல் முறைமைக்கு மாற்றும்போது, அவற்றைப் பயன்படுத்தக்கூடிய அறிவுள்ள பிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும். அதன் பிரதான பொறுப்பு கல்வித் துறையையே சாரும். அதனாலேயே, ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமையின் மூலமாக மனிதவளத்தை மேம்படுத்தும் செயன்முறையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

டிஜிட்டல் மயமாக்கல் என்பது ஆசிரியருக்கு மாற்றீடு அல்ல. கல்வி என்பது ஒன்றோடொன்று தொடர்புடையதாகும். வகுப்பறைகளில் எவ்வளவு தொழில்நுட்பக் கருவிகள் இருந்தபோதிலும், கற்றல் நடவடிக்கைகள் தானாகவே நிகழ்ந்துவிடாது. மாணவர்களுடன் அன்யோன்யமாகச் செயல்படுவது ஆசிரியர்களே ஆகையினால் ஆசிரியர்கள் இந்தத் டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பத்தைத் தமக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். இது ஆசிரியரின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும்.

டிஜிட்டல் மயமாக்கலை பயன்படுத்தி குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு உயர்ந்த தரத்திலான கல்வியைப் பெற்றுக்கொடுப்பது எவ்வாறு, அனைத்துப் பாடசாலைக்கும் சிறந்த ஆசிரியர்களின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வித் துறையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது எவ்வாறு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். தீர்வுகாண டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துகிறோம். மனிதநேயமிக்க, நாகரிகமான, எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குள்ள பிரஜைகளை உருவாக்கும் பயணத்தை டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம், எனத் தெரிவித்தார்.

அத்தோடு,இதன்போது, தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் முதலாம் கட்டத்தை வடிவமைக்கப் பங்களிப்பை வழங்கிய சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாண அதிகாரிகளுக்கும், இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கும் பிரதமர் நினைவுச் சின்னங்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, மாகாண பிரதம செயலாளர்கள், விமானப்படைத் தளபதி, மாகாண கல்வி செயலாளர்கள், கல்வி அதிகாரிகள், பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான செயலணியின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வணக்கத்துக்குரிய வல்பொல விமலஞான மகாநாயக்க தேரர் மகாநாயக்க பதவியேற்பு

பேலியகொடை கங்காராம விகாராதிபதி, அக்கமஹா சத்தம்மஜோதிகதஜ, தம்மசேனாபதி, பாஷாந்தர விஷாரத, அதிவணக்கத்துக்குரிய பண்டித வல்பொல விமலஞான மகாநாயக்க தேரர், மகாவிஹார வம்சிக இலங்கை அமரபுர மகா நிகாயவின் ஆரியவன்ச சத்தம்மயுக்திக பிரிவின் மகாநாயக்க பதவியேற்பு நிகழ்வும், அதற்கான ஸ்ரீ சன்னஸ்பத்திர வழங்கும் நிகழ்வும் 06 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மகாவிஹார வம்சிக இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க, அதிவணக்கத்துக்குரிய கரகொடை உயன்கொட மைத்ரீ மூர்த்தி மகாநாயக்க தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மகாநாயக்க பதவியுயர்வுக்கான ஸ்ரீ சன்னஸ்பத்திரத்தைப் பிரதமர் அவர்கள் விமலஞான மகாநாயக்க தேரரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முப்பிரிவுகளையும் சார்ந்த மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க உள்ளிட்ட அதிதிகள் மற்றும் பௌத்த பக்த பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே என்றும், அதற்காக அரசாங்கம் விசேட தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

திறந்த பல்கலைக்கழக குருநாகல் பிராந்திய நிலையத்தின் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் 2026 ஜூன் 05 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் கிளையில் நீண்டகாலமாக நிலவிவரும் இடவசதியின்மை, விரிவுரை மண்டபங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய குறைபாடுகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,

திறந்த பல்கலைக்கழகத்தின் இடவசதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான காணி ஏற்கனவே கிடைத்துள்ளதால், அதன் அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிட வேண்டும். நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொண்டு, திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை நாம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். கல்விச் சீர்திருத்தங்கள் நிறுத்தப்படவில்லை. 2027 ஆம் ஆண்டில் 06 ஆம் தரம் மற்றும் 02 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தரக் கல்விச் சீர்திருத்தத்திற்குத் தேவையான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைப் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் நாம் வெளியிட்டுள்ளோம். அடுத்த ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சியையும் ஆரம்பிக்க இருக்கின்றோம்.

ஆசிரியர் வினைத்திறன்கான் தடைதாண்டல் பரீட்சைகள் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டிற்குள் அந்தப் பிரச்சினைக்கும் தீர்வை வழங்கத் தயாராக உள்ளோம்.

அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குக் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய அமைச்சு தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க, குருநாகல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் பிராந்திய நிலையத்தின் பணிப்பாளர் அனுஷ்க பண்டார உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பெருமளவு அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

As a government, we are committed to ensuring the quality of Early Childhood Education. - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister and Minister of Education, Higher Education and Vocational Education, Dr. Harini Amarasuriya, stated that preschool education is considered the most critical stage in shaping a child’s future educational journey, and the government is committed to ensuring quality of Early Childhood Education. The Prime Minister further emphasized the need for proper supervision and monitoring of early childhood education programmes across all provinces.

The Prime Minister made these remarks while participating in a certificate awarding ceremony held on June 05 at the Kurunegala Provincial Council Auditorium for diploma holders of the 2023/2024 Preschool Teacher Training Diploma Programme conducted by the North Western Preschool Teacher Training College during her education inspection tour in the Kurunegala District.

The diploma awarding ceremony was jointly organized by the Early Childhood Education Development Authority and the North Western Provincial Council. The North Western Preschool Teacher Training College is one of Sri Lanka’s leading state training institutions dedicated to strengthening early childhood education, particularly within the North Western Province.

During the event, invited speakers briefed the newly qualified diploma holders on the Government’s policy direction regarding early childhood development.

Addressing the gathering after presenting diploma certificates to the Diploma Holders, the Prime Minister stated:

We are planning to establish stability in early childhood education over the next few years. In order to achieve this, we are working in collaboration with the National Education Commission, the Ministry of Women and Child Affairs, and the Ministry of Education to develop policies, standards for teacher training, and the regulatory mechanisms required for effective monitoring and implementation.

We are also making arrangements to commence preschool teacher training programmes this year. Through these efforts, we expect to introduce a common curriculum for preschools across the country by 2027. It is equally important to create a proper understanding within society about the purpose and value of preschool education.

The primary objective of preschool education is to prepare children for their future primary education. Therefore, preschool education should focus on developing essential skills such as motor abilities and other age-appropriate competencies.

As parents and adults, it is our responsibility to ensure the path for children to develop social skills and knowledge in ways that are suitable for their age, without placing unnecessary burdens on them. As preschool teachers, you play a significant role in communicating to society what we truly expect from early childhood education

The event was attended by the Governor of the North Western Province, Tissa Warnasuriya; Deputy Minister of Women and Child Affairs, Namal Sudarshana; Members of Parliament for the Kurunegala District, Dharmapriya Dissanayake and Ashoka Gunasekara; the Chief Secretary of the North Western Province; the Director and officials of the North Western Province Early Childhood Development Authority

Prime Minister’s Media Division