பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ජනතාවට බරක් නොවී වියදම රජය දරාගෙන තිරසර බලශක්ති කළමනාකරණ ක්‍රියාවලියක් අනුගමනය කළා - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

අර්බුධය තවම අවසන් නැහැ

වෙසක් සතිය සඳහා විදුලිය අවශ්‍ය පරිදි ලබා දෙන්න අවශ්‍යයි

වෙන රටවල මෙන් බලශක්ති අර්බුධය ජනතාවට පීඩාවක් නොවෙන ලෙස කළමනාකරණය කරමින්, ජනතාවට බරක් නොවී වියදම රජය දරාගෙන තිරසර කළමනාකරණ ක්‍රියාවලියක් අනුගමනය කළ බවත්, එහෙත් අර්බුධය තාම අවසන් නොමැති බවත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

අග්‍රාමාත්‍ය කාර්යාලයේ අද (15 ) දින පැවති රාජ්‍ය සේවය ක්‍රමවත්ව පවත්වාගෙන යාම සම්බන්ධයෙන් පත්කළ කමිටුවේ හයවන රැස්වීමේ අදහස් දක්වමින් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මේ බව සඳහන් කළාය.

අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියගේ ප්‍රධානත්වයෙන් පැවැති මෙම රැස්වීමේදී තිරසර බලශක්ති කළමනාකරණය සහ ඒ වෙනුවෙන් ගතයුතු ඉදිරි ක්‍රියාමාර්ග සම්බන්ධයෙන් සාකච්ඡා කෙරිණි.

රාජ්‍ය ආයතන තුළ බලශක්තිය ඉතිරි කිරීම සඳහා සෑම ආයතනයකටම ’බලශක්ති කළමනාකරුවෙකු’ (Energy Manager) පත් කිරීම පිළිබඳවත්, පුනර්ජනනීය බලශක්ති ප්‍රභවයන් වෙත යොමු වීමටත් තීරණය විය. තවද, ’clean sri lanka’ ජාතික වැඩසටහන යටතේ රාජ්‍ය ගොඩනැගිලි හරිත සංකල්පයට (Green Building Concept) අනුව සකස් කිරීමට අවශ්‍ය පියවර ගැනීම පිළිබඳවත් මෙහිදී සාකච්ඡා විය.

ඉදිරියේදී ඉන්ධන සහන ලබා දීමට ඇති අවස්ථා පිළිබඳව මෙන්ම මෙතෙක් ඉන්ධන නිකුත් කරනු ලබන ඔත්තේ සහ ඉරට්ටේ ක්‍රමය ඉවත් කර QR කේතය යටතේ ඉන්ධන ලබා දීම සහ ඉන්ධන කෝටාව වැඩි කිරීම පිළිබඳවත් අවධානය යොමු කෙරිණ. ලබන අගෝස්තු මාසය දක්වා ප්‍රමාණවත් ඉන්ධන පවතින අතර මේ වසරේ ඉදිරි මාස සඳහා අවශ්‍ය ඉන්ධන ප්‍රමාණය ද ඉල්ලුම් කර ඇති බව නිලධාරීන් මෙහිදී පැවසීය.

විදුලි පරි⁣භෝජනය තිරසර ලෙස කළමනාකරණය කිරීම අරමුණු කර ගනිමින් Clean Sri lanka වැඩසටහන යටතේ පාසල් දරුවන් දැනුම්වත් කිරීම සහ විදුලි පරිභෝජනය කළමනාකරණය කරගන්නා නිවෙස් විධිමත්ව තෝරාගෙන පාසල් දරුවන් ඇගයීමේ වැඩසටහනක් සහ පාසල් දරුවන් හරහා විදුලි පරිභෝජනය කළමනාකරණය කර ගත හැකි ක්‍රමවේද පිළිබඳ දැනුම්වත් කිරීම වැනි ක්‍රමවේද පිළිබඳව ද ⁣අවධානය යොමු විය.

ඉදිරියේදී සිදු කරනු ලබන ඉදිකිරීම්වලදී Green Building සංකලපය හදුන්වා දීම වෙනුවෙන් ගත යුතු ක්‍රියාමාර්ග පිළිබඳවද මෙහිදී සාකච්ඡා කෙරිණි.

රජය නිසි පරිදි බලශක්ති කළමනාකරණය කිරීම හේතුවෙන් ජනතාව පවතින අර්බුධය පිලිබඳ වැඩි අවධානයක් යොමු කර නැහැ. වෙනත් රටවල ඉන්ධන පෝලීම්, විදුලිය කප්පාදු කිරීම් සිදු වෙනවා. නමුත් අපි ඒ අර්බුධය නිසි පරිදි කළමනාකරණය කළා. අර්බුධය තාම අවසන් නැහැ ඒ නිසා අපි නිරන්තර අවධානයෙන් කටයුතු කළ යුතුයි. තිරසර බලශක්ති කළමනාකරණය සහ ජනතාව ඒ වෙනුවෙන් දැනුම්වත් කිරීම් සිදු කළ යුතුයි. වෙසක් සතිය තුළ අවශ්‍ය පරිදි විදුලිය ලබා දෙන්න අවශ්‍ය බවද මෙහිදී අදහස් දක්වමින් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

අග්‍රාමාත්‍ය ලේකම් ප්‍රදීප් සපුතන්ත්‍රී, ජනාධිපති කාර්ය මණ්ඩල ප්‍රධානී බී.කේ ප්‍රභාත් චන්ද්‍රකීර්ති, ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම් ජී.ජී.එස්.පී රෝෂන් යන මහත්වරුන් ඇතුළු රාජ්‍ය පරිපාලන, සෞඛ්‍ය, ප්‍රවාහන හා බලශක්ති යන අමාත්‍යාංශවල ලේකම්වරුන්, සභාපතිවරුන් ඇතුළු නිලධාරීන් පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

A Sustainable, Inclusive and Globally Competitive Tourism Industry can build through close partnership and collaboration - Prime Minister Dr. Harini Amarasuriya

’Sancharaka Udawa 2026 inaugurated’ under the patronage of Prime Minister

The 13th Edition of Sancharaka Udawa 2026, Sri Lanka’s foremost Travel & Tourism Fair Held under the patronage of Prime Minister Dr. Harini Amarasuriya at Sirimavo Bandaranaike Memorial Exhibition Centre - BMICH, Colombo on 15 th of May.

Organized by the Sri Lanka Association of Inbound Tour Operators (SLAITO) in collaboration with the Sri Lanka Tourism Promotion Bureau (SLTPB), the exhibition will be held on 15 and 16 th of May at the BMICH.

The exhibition brought together over 250 exhibitors and 300+ stalls with the participation of more than 100 international agents featuring in B2B meetings, panel discussions , and workshops designed to foster collaboration and knowledge-sharing.

This year’s exhibition welcomed foreign hosted buyers for the first time, creating unprecedented opportunities for local stakeholders to connect with international markets.

During the event, the Prime Minister Dr. Harini Amarasuriya officially opened the Exhibition Sancharaka Udawa 2026 for the public.

Addressing the occasion, the Prime Minister stated that the government’s vision is to build a sustainable, inclusive, and environmentally conscious tourism industry, while emphasizing the need for the sector to adapt to environmental, political, economic, and global challenges. The Prime Minister also highlighted the importance of positioning Sri Lanka competitively in the global tourism arena and strengthening the country’s international brand as a unique destination.

Highlighting the importance of developing human capital and capacity within the sector, the Prime Minister underscored the role of ongoing education reforms in preparing young people for future opportunities. The Prime Minister stated that reforms in education should enable young people to access multiple pathways and gain exposure to industries such as tourism. In this regard, closer collaboration between the tourism sector and educational institutions was identified as essential.

The Prime Minister also stressed the importance of strengthening domestic tourism and improving the overall tourism experience.

Emphasizing the future development of the sector, the Prime Minister noted that close partnership and collaboration between the government and the private sector are vital to achieving sustainable progress in the tourism industry.

The opening ceremony was attended by Prof. Ruwan Ranasinghe, Deputy Minister of Tourism, Prof. Anil Jayantha Fernando, Deputy Minister of Finance and Planning, Ms. Aruni Ranaraja, Secretary, Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism, Mr. Nalin Jayasundera, President, SLAITO, Mr. Buddhika Hewawasam, Chairman, SLTPB/SLTDA and representatives of Diplomatic core, agents and exhibitors.

Prime Minister’s Media Division

Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero was conferred the title of Chief Sanghanayaka

The official ceremony to present Sannas Patra to Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero, who was conferred the title of Chief Sanghanayaka of Wellassa, Bintenne and the Eastern Three Provinces, was held on 14 of May at the historic Pothubandhana Rajamaha Viharaya in Bibile, with the participation of Prime Minister Dr. Harini Amarasuriya.

The ceremony was held under the patronage of the Anunayake of the Malwathu Chapter, Most Venerable Dimbulkumbure Vimaladhamma Nayaka Thero. During the ceremony Prime Minister Dr. Harini Amarasuriya presented the official Sannas Pathraya conferring the title of Chief Sanghanayaka of Wellassa, Bintenne and the Eastern Three Provinces to Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero.

Addressing the gathering, Prime Minister Dr. Harini Amarasuriya stated that the Nayaka Thero, who entered monastic life in 1982, has rendered exemplary service to Buddhism and society for over four decades, setting a model for the entire community. She noted that the contributions made by the Veneration Thero by continuing the Sri Saranankara and Sri Saddhatissa Dhamma Schools, as well as the service carried out as the Chief Prelate of the Deegavapi Pirivena, are highly commendable.

The Prime Minister further stated that the humanitarian assistance extended annually by providing educational equipment to hundreds of children is commendable and strengthens the government’s efforts towards realizing educational policies. The Prime Minister appreciated the efforts of the venerable Nayaka Thero toward the restoration of the historic Deegavapi Maha Seya and the development of other temples.

The Prime Minister also highlighted that initiatives such as the construction of a Bhikkhu ward at the Ampara Hospital demonstrate selfless dedication of the venerable Thero through actions. The Prime Minister further emphasized that religious leaders who work for the spiritual and social upliftment of the people in historically significant regions such as Wellassa and Bintenne are essential to the country, and that the conferring of this title by the Malwathu Chapter is an honour not only to the Thero but also to the people of those regions.

The occasion was graced by the presence of members of the Maha Sangha representing the three Nikayas, and attended by the Minister Samantha Viddyarathna, Deputy Minister R.M. Jayawardena, Opposition Leader Sajith Premadasa, the Governor of Uva Province, government officials, and a large gathering of devotees.

Prime Minister’s Media Division

தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026 மிகவும் முக்கியமானதாகும் , ஏனெனில் அது இத்துறைக்குக் கொள்கை, தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒரு அரசாங்கம் என்ற வகையில், தொடர்ச்சியான செயற்பாட்டை இதனுள் கொண்டுவருவதும், கூட்டுறவை வளர்க்கும் சூழலை உருவாக்குவதும், அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அவர்கள் புத்தாக்கத் தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எமது கடமையாகும்.

மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026, பற்றிய உரையாடலின் இரண்டாம் நாளில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SME) பலப்படுத்தும் நோக்கில் “தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026” இன் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா, 13ஆம் திகதி கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கட்டமைப்பானது, “வளமான நாடு — அழகான வாழ்க்கை” எனும் தேசியக் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி ஆலோசனைக் குழு மற்றும் முக்கிய பங்குதாரர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு, தொழில்முயற்சியாளர்களுக்குத் தமது வர்த்தகத்தினை இலகுவாகப் பதிவு செய்யவும், நவீன தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ளவும், விசேட நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளவும், பாரம்பரிய முறையிலிருந்து விலகி இலவசமாக வழங்கப்படும் நேரடி ஆலோசனைச் சேவைகளைப் பெறவும் வழிவகுக்கிறது.

இரண்டாம் நாள் நிகழ்வில், “தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பின் (2026)” அமலாக்கம் மற்றும் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தியதோடு, தொடர் குழு விவாதங்களும் இடம்பெற்றன. தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026 அறிக்கையைப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பிரதமருக்கு வழங்கிவைத்தார்.

அங்கு உரையாற்றிய பிரதமர்,

உலகளாவிய நிலையற்ற சூழல் மற்றும் சீர்குலைவு நிறைந்த காலகட்டத்தில் நாடு தனது மாற்றுச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிட்டதோடு, குறிப்பாகச் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறையில் தகவமைப்பு, நிலைத்தன்மை மற்றும் மீட்சி அடைதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிக் கொள்கைக் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இத்துறையில் தொடர்ச்சியான செயற்பாடு, நிலைத்தன்மை மற்றும் கூட்டுறவை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் எனத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இந்தக் கட்டமைப்பு முக்கியமானது ஏனெனில் இது இத்துறைக்குத் தொடர்ச்சியான கொள்கை மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது. இந்தக் கட்டமைப்பானது கொள்கை பற்றியதாகும். துறையில் நிலைத்தன்மையை நிலைநாட்டுவது, கூட்டுறவை வளர்ப்பது மற்றும் கொள்கைகள் ஆகியன குறுகியகால நிகழ்ச்சி நிரல்களாக அல்லாது, சான்றுகளின் அடிப்படையிலும் நீண்டகாலத் தொலைநோக்கு மூலமாகவும் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியனவே இதன் சாரம்சமாகும். கொள்கை நிலைத்தன்மையால் இயக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் சிறந்த முறையில் ஒருமைப்படுத்தப்பட்ட தளமாக, சிதறிக் கிடக்கும் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத ஒரு துறையை ஒன்றிணைப்பதற்கு இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு அரசாங்கம் என்ற வகையில், நிலைத்தன்மையைக் கொண்டுவருவதும், ஒத்துழைப்பை வளர்த்து குழுப்பணிக்கு வழிவகுக்கும் ஒரு சூழலை ஏற்படுத்துவதும், துணிந்து செயற்படவும் புதுமைகளைப் புகுத்தவும் தக்க வகையில் மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதுமே அடிப்படையில் எமது பொறுப்பாகும் என நாம் நம்புகிறோம்.

அடிக்கடி கொள்கைகள் மாறாது என்றும், அரசாங்கமே சீர்குலைவின் ஆதாரமாக அமையாது என்றும் மக்கள் உணரக்கூடியதாக இருக்க வேண்டும். தொடர் செயற்பாடு, நிலைத்தன்மை மற்றும் அவை பெற்றுக்கொடுக்கும் நம்பிக்கையின் மூலமே நாம் இந்த முயற்சியை உண்மையான வெற்றியை நோக்கி இட்டுச் செல்லக் கூடியதாக அமையும். இந்த மிக முக்கியமான முயற்சியை மேற்கொண்ட உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்விச் சீர்திருத்தங்களில் தொழில்முயற்சி மனப்பான்மையை ஒருங்கிணைக்கும் தேவை குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இளைஞர்கள் தமது திறன்களையும் ஆற்றல்களையும் அடையாளம் காணவும், தமது எதிர்காலத்திற்கான பல்வேறு பாதைகளைக் கண்டறியவும் உதவும் கல்வி முறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 6ஆம் தரம் முதல் கைத்தொழில் மற்றும் நிதி பற்றிய அறிவைப் புகட்டும் கல்வியை அறிமுகப்படுத்துவதை முன்னிலைப்படுத்தியதோடு, மாணவர்களுக்கு நடைமுறை அனுபவங்களையும் வாய்ப்புகளையும் வழங்குவதில் தொழில்துறையின் ஆதரவு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகர் திருமதி Ruth Baird, தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம். திலகா ஜயசுந்தர மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள், வணிகச் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இனங்களுக்கு இடையிலான சகவாழ்வைப் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இன்றியமையாதது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் ஆனைமடுவ போன்ற பல்லினப் பண்பாட்டுப் பிரதேசங்களில், இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லிணக்கத்தையும் மேலும் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவம் அவசியமானது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த தலைமைத் தேரருக்கு ராஜவன்னி மற்றும் குமாரவன்னி ஆகிய இரு பிரதேசங்களுக்குமான பிரதம சங்கநாயக்கர் பதவியை வழங்குவதை முன்னிட்டு, 13ஆம் திகதி ஆனைமடுவ சுதம்பாயவில் நடைபெற்ற ’சன்னஸ் பத்திரம்’ கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மல்வது விஹாரை பீடத்தின் அநுநாயக்கர் நியாங்கொட விஜிதசிறி தலைமைத் தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் குறித்த ‘சன்னஸ் பத்திரம்’ ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த தலைமைத் தேரரிடம் கையளிக்கப்பட்டது. ’விஜினிபத’ எனும் விசிறியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த நாயக்க தேரர், சுமார் 50 ஆண்டுகாலத் துறவற வாழ்விலும் 35 ஆண்டுகால ஆசிரியர் சேவையிலும் பௌத்த சாசனத்திற்கும் நாட்டின் கல்வித் துறைக்கும் அளப்பரிய சேவையாற்றிய ஒரு துறவியாவார். அவர் வெறுமனே மதச் சடங்குகளுக்கு மாத்திரம் தம்மை மட்டுப்படுத்திக்கொள்ளாது, இப்பிரதேச சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் இன்ப துன்பங்களின்போது நிழல் போல உடனிருப்பவர். குறிப்பாக, கடந்த ஆண்டு திடீர் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அவர் வழங்கிய மனிதநேயத் தலைமைத்துவமானது முழுப் பிரதேசத்திற்கும் பெரும் சக்தியாக அமைந்ததை நினைவுபடுத்த வேண்டும்.

அத்தோடு, பரமாகந்த ரஜமகா விஹாரை உள்ளிட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற புனிதத் தலங்களைப் புனரமைத்து, அவற்றை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதில் அவர் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பரிவுமிக்க மக்களைக் கொண்ட ’புதிய மறுமலர்ச்சி யுகத்தை’ நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் அரசாங்கத்தின் நோக்கத்தை அடைந்துகொள்வதில், இத்தேரரைப் போன்ற நடைமுறைச் சாத்தியமான மதத் தலைவர்களின் வழிகாட்டலும் ஆசீர்வாதமும் அரசாங்கத்திற்குப் பெறுமதிமிக்கதாகும்" எனப் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முப்பிரிவின் மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், வடமேல் மாகாண ஆளுநர், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, தியவதன நிலமே நிலங்க தேல பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளுடன், பெருமளவு பக்தர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, கொழும்பு மாவட்டச் செயலகத்தில் மே மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு மாவட்டத் திட்டமிடல் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், கிராமப்புற வீதி அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பரவலாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் 2026ஆம் ஆண்டிற்காக 195 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான தமது முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். இதற்கமைய, பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கனவே 240 திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 127 மில்லியன் ரூபா பெறுமதியான 126 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் வீதி வலையமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதில் அபாயகரமான இடங்களில் பாதுகாப்பு வேலிகள் மற்றும் சமிக்ஞைப் பலகைகளை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு கிராமப்புறப் பாலங்களை நிர்மாணிப்பதற்காக 100 மில்லியன் ரூபாவும், 50 கிலோமீற்றர் நீளமான வீதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உத்தியோகத்தர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

வறுமையை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "பிரஜா சக்தி" திட்டத்திற்காக 1,036 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அத்திட்டங்கள் அனைத்தையும் 2026 நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு பிரதமர் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், விளையாட்டு அமைச்சின் பங்களிப்புடன் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல், புத்தசாசன மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கீழ் விசேட திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, அசித நிரோஷன, கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு