பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வாழும் எமது சகோதரிகளுக்கும் சிறுமிகளுக்கும், இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையினால் இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான உலகளாவிய கருப்பொருளாக, “Rights. Justice. Action. For ALL Women and Girls” (அனைத்துப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உரிமையும் நீதியும் கிடைப்பதற்கான செயற்பாடு) எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைச் சமூகத்தினதும் பொருளாதாரத்தினதும் உண்மையான உயிர்நாடியாக எமது பெண்களே விளங்குகின்றனர். குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்கள் ஆற்றும் பணி, இன்று ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தீர்க்கமான காரணியாக மாறியுள்ளது. எமது அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக, பெண்களை வெறும் பயனாளிகளாக மாத்திரம் கருதாமல், நாட்டின் அபிவிருத்தியின் செயல்திறன்மிக்க பங்காளிகளாகக் கருதி, அவர்களுக்குரிய கௌரவத்தையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எமது கொள்கைத் திட்டத்தில் பெண்களுக்காக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் சில முக்கிய விடயங்களை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்,

ஒரு இல்லத்தரசியாக அவர் வழங்கும் பொருளாதாரப் பங்களிப்பை மதித்தல், பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் அவர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை விரிவுபடுத்துதல் என்பன எமது முக்கிய இலக்குகளாகும். அத்துடன் பொதுப் போக்குவரத்து, பணியிடம் மற்றும் குடும்பத்திற்குள் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும், தேசிய மட்டம் முதல் பிரதேச மட்டம் வரையிலான தீர்மானங்களை இயற்றும் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பின்னணியை உருவாக்குவதிலும், பெண்களின் ஊட்டச்சத்து, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான விசேட திட்டங்களைச் செயற்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

பெண்கள் என்பவர்கள் இரக்கத்தை எதிர்பார்ப்பவர்கள் அல்ல, மாறாக அவர்கள் அறிவு, சகிப்புத்தன்மை மற்றும் படைப்பாற்றல் மிக்க சமூகப் பங்காளிகளாவர். ஒரு பெண் அச்சமின்றி வீதியில் பயணிக்கக்கூடிய, அவளது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடிய, அதேவேளை கௌரவமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு "வளமான நாட்டை" உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

இந்த சர்வதேச மகளிர் தினம், இந்நாட்டுப் பெண்கள் அனைவரதும் நற்கனவுகள் நனவாகும், அவர்களது கௌரவத்தை உலகுக்கு பறைசாற்றும் ஒரு புதிய யுகத்தின் ஆரம்பமாக அமையட்டும் என நான் மனதாரப் பிரார்த்திக்கின்றேன்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு

Improving Bhikkhu education is not merely about producing graduates. The government’s objective is to nurture a generation of Bikkhu who stand for social justice and compassion, equipped with Dhamma, discipline, and scholarly learning. — Prime Minister Dr. Harini Amarasuriya

The Prime Minister Dr. Harini Amarasuriya stated that improving Bhikkhu education is not merely about producing graduates, and that the government’s objective is to nurture a generation of Bikkhu who stand for social justice and compassion, equipped with Dhamma, discipline, and scholarly learning.

The Prime Minister made these remarks while attending the opening ceremony of the newly constructed multi-purpose auditorium complex at the Bhiksu University of Sri Lanka in Anuradhapura, and the felicitation ceremony held in honour of the Atamasthanadhipathi Chief Incumbent on 07 of March.

Marking the opening of the new multi-purpose auditorium complex, the commemorative plaque was unveiled by Prime Minister Dr. Harini Amarasuriya. On this occasion, tribute awards were also presented in appreciation of the services rendered by Atamasthanadhipathi Ven. Dr. Pallegama Hemarathana Nayaka Thero, Senior Professor C. M. Madduma Bandara, and State Counsel Mahinda Ralapanawa.

Addressing the gathering, the Prime Minister further stated:

When we look back at our history, university education was never something unfamiliar to Buddhist monks.

World-renowned institutions such as Nalanda and Vikramashila were established through the contributions of Buddhist monks.

Likewise, the Mahavihara and Abhayagiri in Anuradhapura once functioned as internationally renowned centres of Buddhist Learning.

The scholarly heritage that declined during the period of foreign domination was revived through the leadership of Weliwita Sri Saranankara Sangaraja Thero.

A decisive step in this journey was the elevation of Vidyodaya and Vidyalankara Pirivenas to university status in 1959.

Today, our effort is to carry forward that heritage in a manner suited to the modern world, grounded in scientific and rational foundations. The policy of our government is to further strengthen free education while ensuring quality education for every citizen, and to establish education as a universal human right while enhancing the international recognition of Sri Lanka’s education system.

The Bhiksu University of Sri Lanka holds a unique position within the country’s higher education system, as its administration and academic affairs are entrusted to the Buddhist clergy themselves. The primary objective of this university should not be limited to producing graduates alone. Rather, it should aim to nurture a generation of Bikkhu who stand for social justice and compassion, equipped with Dhamma, discipline, and scholarly learning.

We are also prepared to extend our fullest support in enabling monks to promote Buddhist philosophy internationally by providing them with knowledge of classical languages such as Pali and Sanskrit, along with the linguistic skills and technological tools required to engage with the modern world.

The newly opened multi-purpose auditorium complex is viewed as a national asset. With seating capacity for approximately 1,100 persons, and equipped with modern sound and lighting systems, this facility will enable Sri Lanka to emerge as a centre for global Buddhist education.

Furthermore, the language training centre and the international relations unit established here will facilitate the organization of Dhamma missionary activities.

This is not merely a physical structure. We see it as a public space that will open up opportunities for research, cultural engagement, and intellectual dialogue for the people of the North Central Province in the future.

Our goal is to build an intellectually vibrant society grounded in strong values. For this purpose, effective coordination between religious institutions and universities is essential.

Prime Minister Dr. Harini Amarasuriya also expressed her confidence that the Bhiksu University of Sri Lanka will become a pioneer in promoting national unity, coexistence, and an ethical society.

The event was attended by the Chancellor of the Bhiksu University of Sri Lanka and Supreme Mahanayaka of the Sri Lanka Amarapura Maha Nikaya, Most Venerable Karagoda Uyangoda Maithree Murthi Thero; the Anunayake Thero of the Malwathu Chapter, Most Venerable Niyangoda Vijithasiri Nayaka Thero; Mahopadhyaya Senior Professor Ven. Kanattegoda Saddharathana Anunayaka Thero; Chief Sanghanayaka of Nuwara Kalaviya and Atamasthanadhipathi of Anuradhapura, Ven. Dr. Pallegama Hemarathana Nayaka Thero; Governor of the North Central Province Wasantha Jinadasa; Minister of Trade, Commerce and Food Security Wasantha Samarasinghe; Members of Parliament Sena Nanayakkara, P.D.M.K. Palihena, and Susantha Kumara Nawarathna and academic and non-academic staff of the Bhiksu University of Sri Lanka.

Prime Minister’s Media Division

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகள் வழங்கப்படும்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, கல்வித் துறையில் நிலவும் வெற்றிடங்கள் குறித்த புள்ளிவிபரங்களை முன்வைத்த பிரதமர், தற்போதைய நிலையை பின்வருமாறு விளக்கினார்,

இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) 903 வெற்றிடங்கள்.

இலங்கை அதிபர் சேவை (SLPS) 3,790 வெற்றிடங்கள்.

இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்ட பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனங்களைப் பொறுப்பேற்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, 2026 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் நேர்முகத் தேர்வுகளை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2021 முதல் 2025 வரையான காலப்பகுதியில் புதிதாக உருவான வெற்றிடங்களுக்காக, அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் எதிர்காலத்தில் போட்டிப் பரீட்சைகளை நடாத்தி புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும்.

அதிபர் சேவையில் இணைந்துகொள்வது தற்போது ஒரு புதிய ஆட்சேர்ப்பாகக் கருதப்படுவதால், சம்பள நிர்ணயத்தின் போது எழுந்துள்ள சிக்கலுக்குத் தீர்வாக, அதிபர் சேவைக்கான நியமனத்தை ஒரு "பதவி உயர்வாகக்" கருதிச் சம்பள மாற்றங்களைச் செய்வதற்குத் தேவையான அனுமதியைப் பெற புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கல்வித் துறையில் மாத்திரமன்றி, ஏனைய பல துறைகளிலும் நிலவும் சம்பள நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வு அவசியமாகும். அதற்காக அரசாங்கத்தினால் புதிய சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இவ்வருடத்தில் அந்த ஆணைக்குழுவினூடாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய அதிபர்களின் திறன் விருத்திக்காகப் பின்வரும் பயிற்சித் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன

ஆரம்பக் கடமைப் பயிற்சி. இரண்டாம் தரம் மற்றும் முதலாம் தரத்திற்குப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர் வழங்கப்படும் கொள்ளளவு அபிவிருத்திப் பயிற்சிகள்.மாகாண மற்றும் வலய மட்டத்தில் நடாத்தப்படும் காலோசிதமான விழிப்புணர்வுத் திட்டங்கள்.

அதிபர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் நிர்வாகச் சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்த முடிவுகளின் அடிப்படையில் அமைச்சரவையினூடாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு

அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அவ்வாறு அடக்குமுறை இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையாவது சுட்டிக்காட்டுமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (06) நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கோ அல்லது போராட்டங்களை நடத்துவதற்கோ உள்ள ஜனநாயக உரிமையின் மீது எவ்விதத் தடைகளும் விதிக்கப்படவில்லை.

அடக்குமுறை என்பதை வெறும் சொல்லாக மாத்திரம் உச்சரிக்காது, கடந்த மூன்று மாதங்களில் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்ட அல்லது அடக்குமுறைக்கு உள்ளான நபர்கள் எவராவது இருப்பின் அவர்கள் பற்றிய தகவல்களைச் சமர்ப்பியுங்கள். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன, ஆயினும் அதற்கு எதிராக எவ்வித அடக்குமுறைகளையும் பிரயோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போதைய அனர்த்த நிலையின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக வீதிகள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பேணுவதற்கு இந்தச் சட்டப் பின்னணி தேவைப்படுகிறது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டமைப்பு (புகையிரதப் பாதைகள் உட்பட) மற்றும் பாடசாலைக் கட்டடங்களை மீண்டும் சீரமைக்கும்போது, அவற்றை முன்பு இருந்த நிலைக்கு மாத்திரம் கொண்டு வராமல், எதிர்கால அனர்த்தங்களைத் தாங்கக்கூடிய வகையில் விஞ்ஞான ரீதியான முறையின்கீழ் நவீனமயப்படுத்துவதற்கு முப்படையினரை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இத்தகைய தேவைகளுக்காகவே நாம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றோம்.

அனர்த்த நிவாரணங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதியினால் விசேட செயலணி (Task Force) ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இந்த மாதம் எமக்குக் கிடைக்கும். அதற்கமைய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படும்.

அதேபோல், தற்போதும் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் குறித்துக் கண்டறிந்து, அவர்களை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகையினால், அரசியல் இலாபத்திற்காக “அடக்குமுறை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாது, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெண்களின் உழைப்பை மதிக்கும் நியாயமான சமூகத்தையும், தேசிய பராமரிப்புக் கொள்கையையும் நிறுவுவது அவசியமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் (National Care Policy) நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட, ’தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும்’ என்ற பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இன்று (05) பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றைப் பரிந்துரைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை குறித்து உரையாற்றக் கிடைத்தமை இட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, ஆறு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் எனது கன்னி உரையை நிகழ்த்திய போது, ’பராமரிப்பு பொருளாதாரம்’ (Care Economy) பற்றி நான் பேசிய வேளையில், இச்சபையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களே இருந்தனர். அன்று அந்தத் தலைப்பைப் பற்றிப் பேசுவதே ஒரு புதிய விடயமாகக் கருதப்பட்டது.

ஆனால், ஆறு வருடங்களின் பின்னர் இன்று இத்தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் ஒரு பலமான குழு எமக்கு இருப்பையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த உரையாடல் இன்று எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால், எமது தேசியக் கொள்கை வரைவுக்கான ஒரு முன்மொழிவை முன்வைக்கும் அளவுக்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இக்கருத்தாடல் வலுவடைந்திருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவம், சமூக நிறுவனங்கள், அரச சேவை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள ஒரு சூழலில், இவ்வாறானதொரு தீர்க்கமான அதே நேரத்தில் மிக முக்கியமான தலைப்பு குறித்து உரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.

பொதுவாக இத்துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டுமாயின், பெண்களின் உழைப்பை அங்கீகரித்து, ஒரு பிரஜையாக அனைத்துத் துறைகளிலும் சமமாகவும் கௌரவமாகவும் தனது விருப்பத்திற்கமைய பங்கெடுப்பதற்கான அவரது உரிமையை ஏற்றுக்கொண்டு, அதற்கான பிரதான தடைகளை நீக்குவதற்கு நாம் செயற்பட வேண்டும்.

பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், பெண்கள் பிரஜைகளாக சமூகம், அரசியல் மற்றும் கலாசார ரீதியில் அச்சமின்றி கௌரவமான முறையில் செயற்பட வேண்டுமாயின், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பரப்புகளிலும் அவர்களின் கௌரவம் பேணப்படும் வகையிலும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையிலும் அந்தத் தளங்கள் ஒழுங்கமைக்கப்படுவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, இது சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒரு சமூக மாற்றத்தின் ஊடாகவே நிகழ வேண்டும். அந்தச் சமூக மாற்றத்தினூடாக பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதுடன், அனைத்துப் பிரஜைகளும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சம வாய்ப்புகளுடனும் வாழக்கூடிய ஒரு சமூகத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம், எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரச சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்புகள் முன்னெடுப்பு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாகத் தொடர்ந்து வருவதாகவும், அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் முறையாக நடைபெறாமையே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போது நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தகைமைகளின் அடிப்படையில் சரியான நடைமுறைகளைப் பின்பற்றி ஆட்சேர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அரச அச்சகம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் இன்று (04) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்

இலங்கை அச்சக சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய, தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்த திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தற்போது அரசு அச்சகத் திணைக்களத்தில் இல்லாமையினால், திணைக்களத்தின் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அமைச்சரவை அனுமதியுடன் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள தகுதியும் அனுபவமும் மிக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, இரகசிய மற்றும் பாதுகாப்பு அச்சுப் பணிகள் உள்ளிட்ட இணையவழியில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு பணிகளும் குறைக்கப்படவில்லை. இப்பணிகளின் தரம், இரகசியத்தன்மை மற்றும் நடைமுறைகளைப் பேணுவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அத்துடன், முழுநேர அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாக நீடித்த ஒன்றாகும். அதற்கான தெளிவான காரணங்களை நாம் அறிவோம். அரச சேவையில் முறையான ஆட்சேர்ப்புகள் இடம்பெறாமையே பிரதான காரணமாகும். இது அரசு அச்சகத்திற்கு மாத்திரமின்றி, பல அரச நிறுவனங்களிலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம், எனப் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து, இம்முறை பெரும் போக நெல் கொள்வனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

2025/2026 பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லினை ’நாடு’ அரிசி 120 ரூபாவிற்கும், ’சம்பா’ 130 ரூபாவிற்கும், ’கீரி சம்பா’ 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்வனவிற்கென உறுதிப்படுத்தப்பட்ட விலை நிர்ணயிக்கப்பட்டு, தரமான நெல் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும். இதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கொள்ளளவை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மெட்ரிக் தொன் வரை அதிகரித்து, நெல் கொள்வனவிற்கான தேவையான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பெப்ரவரி 16 முதல் 20 வரை இந்தியாவில் நடைபெற்ற ’2026 செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு’குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர் பின்வருமாறு பதிலளித்தார்,

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ’தெற்கு பூகோள’ பிராந்தியத்தில் நடத்தப்பட்ட முதலாவது உச்சிமாநாடு இதுவாகும். மக்கள், உலக சமூகம் மற்றும் தரம் ஆகிய துறைகள் செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்துக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.

மனித மூலதனம், சமூக வலுவூட்டலுக்கான உள்ளடக்கம், பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அறிவியல், மீளெழும் திறன், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன், செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகப்படுத்துதல், பொருளாதார மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகிய துறைகள் குறித்து அங்கு ஆராயப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடைந்ததுடன், பொறுப்புமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அரச தலைவர் மட்டத்தில் இலங்கையின் பங்கேற்பு அமைந்திருந்ததால், இலங்கையின் நிலைப்பாட்டையும் இத்துறை மீதான ஆர்வத்தையும் சர்வதேச ரீதியாக வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது, எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு