இலங்கை சோசலிச இயக்கத்தின் ஸ்தாபகரும் தேசிய மாவீரருமான பிலிப் குணவர்தனவின் 123வது ஜனன தினம் இன்றாகும் (2024.01.11). அதனை முன்னிட்டு, அவிசாவளை பொரலுகொடவில் அமைந்துள்ள பிலிப் குணவர்தனவின் சமாதிக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கொழும்பு முன்னாள் மேயர் பிரசன்ன குணவர்தன, முன்னாள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, மக்கள் ஐக்கிய முன்னணி இளைஞர் அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி சகலசூரிய குணவர்தன, மக்கள் பிரதிநிதிகள், மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர்கள், மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.