பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த நியுசிலாந்து அரசு.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் க்ரெகரி பைன் ஆகியோருக்கிடையில் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது பிரதமருக்கு நியுசிலாந்து அரசின் வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

பிரதமர் ஊடக பிரிவு