கொழும்பு மாவட்ட செயலகத்தினால் இன்று (15.12.2023) டவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கொலோம்தொட்ட அபிநந்தன - 2023” கொழும்பு மாவட்ட இலக்கிய கலை விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, பிரேமநாத் சி. தொலவத்த, மதுர விதான, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி மற்றும் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.