கிரேக்க நாட்டின் தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கிரேக்க நாட்டின் தூதுவர் அலிகி கோட்சொம்டொபோலோவுக்கும் (Aliki Koutsomitopoulou) இடையிலான சந்திப்பொன்று நேற்று (ஜூன் 5) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, கடல்சார் பிரச்சனைகள் மற்றும் கடல்வழிப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த கிரேக்கமும் இலங்கையும் அந்த நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கிரேக்கக் கப்பல்களில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தூதுவர் Kotsomitopoulou விடம் பிரதமர் கேட்டுக்கொண்டதுடன், இது தொடர்பில் கப்பல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தூதுவர் விருப்பம் தெரிவித்தார். அவர் தற்போது புதுடில்லியில் இருந்தவாறு இலங்கைக்கான கிரேக்க நாட்டின் தூதுவராக செயற்பட்டுவருகிறார்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு