சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று (2024.05.12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அரச சேவை தாதியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, யதாமினி குணவர்தன, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால மற்றும் தாதியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு