வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் மேசை கதிரைகள் வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் எஸ்வத்த தெற்கு கணிஷ்ட பாடசாலையில் இடம்பெற்றது.

கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சீதாவக்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களும் சேதமடைந்தன.

இந்நிகழ்வில் சீதாவக்கை பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு