பாதுகாப்பு குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்த்ர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (24) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

பிரதமர் ஊடக பிரிவு