பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

තීරණයක් ගතහැකි වගකිවයුතු නිලධාරීන් දිස්ත්‍රික් සංවර්ධන කමිටුවට සම්බන්ධ වෙන්න... - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

සංවර්ධන ව්‍යාපෘතිවල වියදම, ප්‍රගතිය හා ප්‍රතිලාභ නිවැරැදිව සමාලෝචනය කර ඉදිරිපත් කරන්න...

සංවර්ධන ව්‍යාපෘති සඳහා වෙන් වූ මුදල් පිළිබඳව ප්‍රමාණාත්මක දත්ත ගෙනහැර දැක්වීමට වඩා එම ව්‍යාපෘති හරහා මෙතෙක් සිදු වූ ප්‍රතිලාභ හා බලපෑම් පිළිබඳව නිවැරැදි අවබෝධයෙන් කටයුතු කිරීම සහ ප්‍රගතිය සමාලෝචනය කර ඉදිරිපත් කිරීම ඉතා වැදගත් බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය කොළඹ දිස්ත්‍රික් සංවර්ධන කමිටුවේ දී ප්‍රකාශ කරන ලදී.

කොළඹ දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුව අග්‍රාමාත්‍යතුමියගේ සහභාගිත්වයෙන්, සම්බන්ධීකරණ කමිටු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්‍රී ලක්ෂ්මන් නිපුණාරච්චි මහතාගේ මූලිකත්වයෙන් ජුලි 15 වැනි දා කොළඹ දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ දී පැවැත්විණි.

මෙහි දී විමධ්‍යගත අයවැය වැඩසටහන, ග්‍රාමීය මාර්ග සංවර්ධන වැඩසටහන, බස්නාහිර පළාත් දිස්ත්‍රික් සංවර්ධන සැලැස්ම, දිස්ත්‍රික් සංවර්ධන වැඩසටහන, වැවිලි සහ ප්‍රජා යටිතල පහසුකම් අමාත්‍යංශය යටතේ කොළඹ දිස්ත්‍රික්කය තුළ යෝජිත ව්‍යාපෘති වැඩසටහන් යටතේ, 2025 වසර සඳහා යෝජිත ව්‍යාපෘතිවල මේ වන විට ලබා ඇති ප්‍රගතිය පිළිබඳව මූලිකව සාකච්ඡා කෙරිණි.

එහි දී අදාළ සංවර්ධන ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සම්බන්ධව වෙන වෙනම සිදුකරන ලද පැහැදිලි කිරීම් වෙත අවධානය යොමු කළ අග්‍රාමාත්‍යතුමිය, තීරණයක් ගතහැකි වගකිවයුතු නිලධාරීන් දිස්ත්‍රික් සංවර්ධන කමිටුවට සම්බන්ධ වීමේ වැදගත්කම අවධාරණය කළා ය.

තවද මෙම වසරට අදාළව දිස්ත්‍රික්කය තුළ සිදුකිරීමට නියමිත සංවර්ධන ව්‍යාපෘතීන්වල ප්‍රගතිය නිවැරැදිව සමාලෝචනය කරගැනීම එළඹෙන වසර සඳහා සැලසුම් ගොඩනැගීමේ දී ඉතා වැදගත් වන බව අග්‍රාමාත්‍යවරිය විසින් පෙන්වා දෙන ලදී.

මෙහිදී අග්‍රාමාත්‍යවරිය විසින් ගෙන ආ යෝජනාවක් අනුව, මෙම වසරට අදාළ කොළඹ දිස්ත්‍රික්කයේ සම්පූර්ණ සංවර්ධන ව්‍යාපෘතිවල ප්‍රගතිය අගෝස්තු මාසයේ දී නැවත අධීක්ෂණයට ලක් කිරීම පිළිබඳව කොළඹ දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති, පාර්ලිමේන්තු මන්ත්‍රී ලක්ෂ්මන් නිපුණාරච්චි මහතාගේ අවධානය යොමු විය.

තවද මෙම සංවර්ධන කමිටු රැස්වීමේ දී ප්‍රවාහන, මහාමාර්ග, වරාය හා සිවිල් ගුවන්සේවා අමාත්‍යංශයේ විශේෂ ව්‍යාපෘතියක් ලෙස ක්‍රියාත්මක කිරීමට නියමිත නාගරික ප්‍රවාහන ප්‍රතිපත්තිය පිළිබඳව කමිටු සාමාජිකයන් වෙනුවෙන් විශේෂ හඳුන්වාදීමක් ද සිදුකරන ලදී.

මෙම අවස්ථාවට කොළඹ දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන සමන්මලී ගුණසිංහ, අරුණ පනාගොඩ, අසිත නිරෝෂණ, නිතීඥ සුසන්ත දොඩාවත්ත, දේවානන්ද සුරවීර යන මහත්මහත්මීන් ද කොළඹ දිස්ත්‍රික්කයට අයත් පළාත් පාලන ආයතනවල සභාපතිවරුන් හා උපසභාපතිවරුන් ඇතුළුව කොළඹ දිස්ත්‍රික් ලේකම් ප්‍රසන්න ජනක කුමාර මහතා මෙන්ම දිස්ත්‍රික් සංවර්ධන කමිටු සාමාජිකයන් සම්බන්ධ වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

அரசாங்கத்தின் மேலும் ஒரு வாக்குறுதியை யதார்த்தமாக்கிய ’அர்த்த’ தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் அங்குரார்ப்பண விழா

எந்த ஒரு பிள்ளையும் கைவிடப்படுதல் ஆகாது, சகல பிள்ளைகளினதும் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் கருத்துக்கு அமைய, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் சமுதாயத்துடன் பகிரப்பட்ட, தற்போது அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ’அர்த்த’ என்னும் திட்டத்தை யதார்த்தமாக்கும் முதல் படி இன்று எடுத்து வைக்கப்பட்டது.

சிறுவர் இல்லங்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் வாழ்ந்து வருகின்ற சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அச்சிறுவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நல்வாழ்வுத் திட்டத்தின் அங்குரார்ப்பண விழா ஜூலை மாதம் 15 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்றது.

சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் தலைமையில் செயல்படுத்தப்படுகின்ற ’அர்த்த’ திட்டத்தின் உத்தியோகபூர்வ வங்கியாக இந்த நாட்டின் புகழ்பெற்ற அரசு வங்கியான தேசிய சேமிப்பு வங்கி கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களுக்கு மாதாந்தம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாயில் 3000 ரூபாய் அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் வாழ்ந்து வருகின்ற சிறுவர் இல்லங்களின் நிர்வாகத்திற்கு வழங்கப்படுவதோடு, எஞ்சிய 2000 ரூபாய் பணம் அச்சிறுவர்களின் பெயரில் வங்கிக் கணக்கில் சேமிக்கப்படும். அவர்கள் இச்சமுதாயத்தில் அடியெடுத்து வைக்கும் போது அவர்களின் எதிர்கால கல்விக்காகவோ அல்லது தொழில் சார்ந்த தேவைகளுக்காகவோ பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலேயே இந்த சேமிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் அவர்கள்:

"பல்வேறு காரணங்களினால், பல்வேறு சந்தர்ப்பங்களில், குடும்பத்தோடு சமுதாயத்தில் பெற்றோரின் அரவணைப்போடு தமது இல்லத்தில் வாழ வேண்டிய வாய்ப்பை இழக்கின்ற சிறுவர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற கடைசித் தேர்வாகவே சிறுவர் இல்லமோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையங்களோ அமைகின்றன. அத்தகைய இடங்களில் வசித்து வருகின்ற சிறுவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று நாம் கருதுகின்றோம்.

ஒரு அரசாங்கம் என்ற வகையில் இந்த சிறுவர்களின் கல்வியை உறுதிப்படுத்துதல், அவர்களின் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. ஆகையினால் அனைத்துப் பிள்ளைகளையும் பிள்ளைகளாகக் கருதி, அந்த அனைத்து சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கத்தால் நழுவி விட இயலாது. அந்த வகையிலேயே இந்த ’அர்த்த’ என்னும் செயல்திட்டம் அர்த்தமுள்ள தேசிய செயல்திட்டமாக அமைகின்றது. இந்த சிறுவர் இல்லங்களில் வசித்து வருகின்ற பிள்ளைகளின் அடையாளத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் அவர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதே எமது இந்த ’அர்த்த’ செயல்திட்டத்தின் முக்கிய நோக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும்."

இவ்வாறு பாதுகாப்பு இல்லங்களில் வாழ்ந்து வருகின்ற பிள்ளைகளையும் எமது பிள்ளைகளாகவே கருத வேண்டும். ஏனைய சிறுவர்களுக்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இச்சிறுவர்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அச்சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதே இந்த ’அர்த்த’ செயல்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இச்சிறுவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவது எம் அனைவரிடமும் இருக்கும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுப் பிரதமர், இச்சிறுவர்களின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு இருப்பதாகவும் ஆகையினால் அவர்கள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

இச்செயல்திட்டத்திற்கு என அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருப்பதோடு, அதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் இருக்கின்ற 356 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வசித்து வருகின்ற, கைவிடப்பட்ட, அனாதையான, அல்லது நீதிமன்றங்கள் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட என மொத்தமாக ஒன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஒன்று (9191) சிறுவர்களுக்கு ’அர்த்த’ செயல்திட்டத்தின் மூலம் மாதாந்தம் 5000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில்:

"தமது சொந்த வீட்டை விட்டுப் பிரிந்து சிறுவர் இல்லத்திலோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையத்திலோ வசித்து வருகின்ற பிள்ளைகளின் பொறுப்பினை ஏற்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற வகையில் இத்தகைய செயல்திட்டம் ஒன்றினைச் செயல்படுத்துவது வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும்" என்று கூறினார். அத்தோடு இது மனிதநேயம் மிக்க பொறுப்பாகும் என்றும் அதற்கு இந்நாட்டின் சகல குடிமக்களும் தமது பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள் என்றும் மேலும் கூறினார்.

பங்கேற்பாளர்கள்:

இந்நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கர, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ. ஓல்கா, தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்கள், பிரதேச செயலாளர்கள், அரசு உத்தியோகத்தர்கள், ’அர்த்த’ பயனாளிகளான சிறுவர் இல்லங்களின் காப்பாளர்கள் அத்தோடு இந்த விழாவை அலங்கரிக்க தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளின் மேம்பாட்டில் நட்பின் அடிப்படையில் அல்லாமல் மாவட்ட மேம்பாட்டுக் குழுவின் அனுமதியுடன் பாடசாலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். -

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் பாடசாலையை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிலொன்றைப் பெறுவதற்கும், பட்டம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.

கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளின் மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கும்போது நட்பின் அடிப்படையில் அல்லாமல் மாவட்ட மேம்பாட்டுக் குழுவின் அனுமதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வேலையைப் பெறுவதற்கு அல்லது பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜூலை 13 ஆம் தேதி கிழக்கு மாகாண சபையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துகளை வெளியிட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய:

இது நாம் அனைவருக்கும் கிடைக்கும் வரலாற்று வாய்ப்பு. உலகத்திற்கு ஏற்ற தரமான கல்வியை வழங்குவதற்கு கல்வி சீர்திருத்தத்தின் மூலம் நம்மால் முடியும். அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலைக் கல்வி முடிக்கும் போது வேலையைப் பெறுவதற்கு தேவையான வகையில் NVQ சான்றிதழ் கிடைக்கும்.

நிலவும் கல்வி முறையில் மாணவர்கள் வேலைக்குச் செல்லும்போது திறமைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் பல்கலைக்கழகங்களுக்கு மென்மையான திறமைகளை மேம்படுத்த வேண்டியதாக உள்ளது. அது பாடசாலைகளில் செய்யப்பட வேண்டும்.

9 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் செய்ய வேண்டிய தொழில் என்ன என்பதை முடிவு செய்வதற்கும் அதற்கான அனுபவத்தைப் பெறுவதற்கும் புதிய சீர்திருத்தத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்கும். 11 ஆண்டுகளாக அல்லது 13 ஆண்டுகளாகக் கல்வி பெற்று பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு தேவையானால் வேலை செய்யவும் முடியும், தேவையானால் பட்டம் பெறவும் வாய்ப்பு உள்ளது. விரும்பினால் வேலை செய்யும்போதே பட்டம் பெறவும் வாய்ப்பு உள்ளது.

கல்வி சீர்திருத்தத்தினுள் பாடத்திட்டம் மட்டுமல்லாமல் பாடசாலை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், சீர்திருத்தம் பற்றி மக்களிடையே கருத்தாடலொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட பணத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள். அதுபோல் கஷ்டப் பிரதேச ங்பாடசாலைகளின் மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கும்போது கிராமத்தவர் என்ற முறையில் அல்லது தனிப்பட்ட உறவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டாம். சரியான முறையைக் கடைபிடித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் செய்யுங்கள். கஷ்டப் பிரதேச பாடசாலைகளின் மாணவர்களைக் பின்தங்கிய கிராமங்களில் சிறைப்படுத்தி தரமான கல்வி வழங்க முடியாது.

கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளில் கல்வி அமைச்சு மாகாண சபை, மாகாண கல்வித் திணைக்களம் போன்று வலய அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கூறினார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஷான் அக்மீமன, எஸ். குகனாதன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பிரமுகர்களும் , கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் , தேசிய கல்வி நிறுவகம், மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Our perspective on education is extremely narrow, and the evaluation of education is measured solely based on exam results. That approach should be changed. – Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that the current perspective on education is extremely narrow and that the practice of evaluating education solely based on exam results is flawed and in need of change.

The Prime Minister made these remarks while attending the “Pankaja Student Summit 2025” of the Polonnaruwa District, held on July 13 at Royal Central College, Polonnaruwa aiming for the development of virtues among children by fostering the fundamental aspects of higher education.

Prime Minister Dr. Amarasuriya attended the event as Minister of Education, in response to an invitation from Praveen Maneesha Watthegama, the student Prime Minister representing Royal Central College in the National Student Parliament.

Addressing the event, Prime Minister Dr. Harini Amarasuriya stated;

We are committed to transforming the exam-centered education system to one that allows talented children to move forward through their abilities and skills.

Our President constantly emphasizes the need to build a compassionate society by nurturing sensitive children with good values. It is not enough to raise individuals who only fulfill their own duties and needs, what matters is producing students who work for the betterment of society in mind.

Today, seeing the creativity and skills of these students, I truly feel happy. I am confident that there is a highly capable group of young people ready to take on the future leadership of our country. Our goal is to nurture not only creativity but also children who are enriched with humanity. Seeing your talents has given me further encouragement. You are the ones who give us the strength to keep working. Let us all join together and commit ourselves to building a compassionate and value-driven society.

Speaking at the same event, Praveen Maneesha Watthegama, the student Prime Minister of the National Student Parliament presented his views:

We have named this student summit ’Pankaja’ (lotus), a flower that rises from the mud to symbolize the emergence of a noble new generation from a troubled society.

As a representative of the student community, I hope to present three key proposals to the Minister of Education, Higher Education, and Vocational Training.

Firstly, to implement the concept of student parliaments effectively in schools; secondly, to introduce a system where physical punishment is replaced with a skill-based point deduction method as a form of discipline; and thirdly, to investigate the possibility of implementing value-based programs in Sunday Dhamma schools that help shape students’ attitudes.

The event was graced by the presence of the Maha Sangha and clergy of other religions, Speaker of Parliament Dr. Jagath Wickramarathna, Deputy Minister of Housing Development, Construction and Housing T.B. Sarath, Members of Parliament for Polonnaruwa District Padmasiri Bandara and Sunil Rathnasiri, Principal of Royal Central College Mr. Ravilal Wijewansa, members of the school academic staff, students, and a large number of parents.

Prime Minister’s Media Division

ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களின் சமப்படுத்தலை விரைவுபடுத்துக. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வட மத்திய மாகாணத்தின் ஆசிரியர் அதிபர் பிரச்சினையை அடுத்த 3 மாதங்களிற்குள் தீர்க்க வேண்டும்

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக மாகாண, வலய மற்றும் கோட்ட மட்ட கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தெளிவூட்டல் கலந்துரையாடல் தொடரின் முதல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று இன்று (12) வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பாடத்திட்ட திருத்தங்கள், கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு செயன்முறைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆசிரியர் அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்களைக் குறைத்தல், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல், மாகாண சபை அளவில் இருக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு விரைவான தீர்வுகள் வழங்குதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தற்போது இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், டிஜிட்டல்மயமாக்கலையும் மேற்கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக இந்த சீர்திருத்தத்தை தனித்தனியாகப் பார்க்க வேண்டாம், ஒட்டுமொத்த செயன்முறையிலும், அமைப்பிலும் இங்கு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எப்போதும் இந்த நாடு வளர்ச்சியடைந்துவரும் நாடு என்று மட்டும் கூறினால் போதாது, அந்த முறையை மாற்ற வேண்டும். அதை நாம் தான் செய்ய வேண்டும். இதனை மாற்ற வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர்கள் மட்டுமல்ல நிர்வாக துறையினர், பெற்றோர்கள் உட்பட அனைவரும் ஈடுபட வேண்டும். இந்த சீர்திருத்தத்தைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வெளியேறும் போது பல்கலைக்கழகம், உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி மூலம் முன்னேறிச் செல்ல இதன் மூலம் வழியமைக்கப்படுகிறது. நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் கட்டாயமாக கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் இந்த செயன்முறையில் அரச சேவைக்குரிய இடமாற்றங்களை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்களைச் சரியான முறையில் சமப்படுத்த வேண்டும்.

மாகாண அளவில் ஆசிரியர் அதிபர் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மாகாண சபை மூலம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட திருத்தங்களை அமைச்சு மூலம் மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைத்து பாடசாலைகளும் நமதே, நமது பிள்ளைகள் தான் இருக்கிறார்கள்.

தற்போது பாடசாலைகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் பொறுப்புகூற வேண்டும், அதற்காக பாடசாலைகளின் நிலைமையை சரி செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க நாம் இணங்கி வேலை செய்வோம்.

அரசாங்கம் என்ற வகையில் கல்வி சீர்திருத்தத்திற்கு நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக கல்விக்காக ,மனித வளத்தை மேம்படுத்த, அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி வசதிகளை வழங்குவேன் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நமக்கு இருப்பது இந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதுதான். முதல் ஆண்டு நமக்கு கடினமாக இருக்கும் ஆனால் மூன்று நான்கு ஆண்டுகள் செல்லும்போது எளிதாக செய்ய முடியும்.

மாகாண அளவில் இந்த செயன்முறையை முன்னெடுக்கும் போது இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்த கலந்துரையாடல் முக்கியமானது . நம் பிள்ளைகளுக்காக இந்த மாற்றத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மேலும்

குறிப்பாக ,வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்ஹ பேசுகையில்,

வட மத்திய மாகாணத்தில் கல்வி பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக இதுவரை நீண்ட காலமாக வலயக் கல்வி பணிப்பாளர் நியமனங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை. அதிபர்களை சரியான முறையில் நியமிக்கவில்லை. அவை அனைத்தையும் தீர்க்க வேண்டும். கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மாகாண அளவில் இருக்கும் கல்வி பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மத்திய மாகாணத்தில் சில பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அதிபர் தரங்களில் உள்ள 46 பேர் மேலதிகமாக உள்ளனர். 16 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார் .ஆனால் பாடசாலைகளில் இருந்து கூறுகிறார்கள் ஆசிரியர்கள் இல்லை என்று . இந்த நிலைமை விரைவில் மாற்றப்பட வேண்டும். சரியாக இடமாற்றங்களை மேற்கொண்டு. நேர்முக பரீட்சை நடத்தி முறையாக நியமனங்கள் பெறாத அதிகாரிகளுக்கு சரியான முறையில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான பாக்ய ஸ்ரீ ஹேரத், நிமல் பலிஹேன, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாஸ, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, வட மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜே.எம்.ஆர்.பி. ஜயசிங்ஹ, மாகாண கல்வி பணிப்பாளர் எம்.எம். டபிள்யூ. சமரகோன் ஆகியோர், கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், வட மத்திய மாகாண சபை, மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஸ்ரீ சோபித நாஹிமிகம வீட்டுத்திட்டம் பொதுமக்களிடம் கையளிப்பு

அநுராதபுர மாவட்டத்தின், எல்பத்கம, ஒயாமடுவவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ சோபித நாஹிமிகம வீட்டுத்திட்டம், அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜூலை 12 ஆம் திகதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இதன் போது,இத் திட்டத்தின் 115 வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்த வீட்டுத்திட்டம் அதி வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு அறக்கட்டளையினாள், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டில், இந்திய அரசாங்கங்கத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.

நினைவுப்பலகையைத் திறந்து வைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வீட்டுப் பயனாளர்களுக்கு அடையாளமாக வீட்டுச் சாவிகளை கையளித்த பிரதமர், விகாரை வளாகத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டினார். அதை அடுத்து விழாவில் உரையாற்றிய பிரதமர்,

"மறைந்த மதிப்பிற்குரிய மாதுலுவாவே சோபித தேரர் உயிரோடு இருந்த சமயத்தில் தமது வாழ்க்கையில் இந்தக் கிராமத்திற்காக குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்புகளை செய்தார். அன்னாரின் மறைவை அடுத்து இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, தேரரின் நினைவு அறக்கட்டளை, இலங்கை இந்திய அரசாங்கங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அன்னாரின் மக்கள் சேவையை முன்னெடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

சிறுவயதிலிருந்தே எனக்கு மதிப்பிற்குரிய சோபித தேருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடமிருந்தே பௌத்த மதத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டேன். அநீதிக்கு எதிராக எழுந்து நிற்கவும, நீதிக்காக போராடவும் அவரிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன்.

பௌதீக ரீதியிலும், பொருளாதாரரீதியாகவும் சிறுவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் நாம் தற்போது கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றோம். உத்தேச கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் சிறுவர்களை இந்த நாட்டின் அடுத்த தலைமுறையின் தலைவர்களாக மாறத்தக்க தரமான கல்வியை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க நாம் உறுதிகொண்டுள்ளோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீ சோபித விகாரையின் தலைமைத் தேரர், மதிப்பிற்குரிய எல்பத்தகம ரேவத அவர்கள்,

"அந்தக் காலத்தில், வணக்கத்துக்குரிய சோபித தேரர் அவரது விகாரைக்கு கிடைத்த சீனி மற்றும் தேயிலை போன்ற பொருட்களைக் கூட இந்தக் கிராமத்திற்கு பெற்றுக்கொடுத்தே இக்கிராமத்தைப் போசித்தார். அந்த அளவிற்கு அன்னார் ஒரு முன்மாதிரியாக இருந்தார்.

2017 இல் இந்தத் திட்டத்தை ஆரம்பித்த போது, அரசியல்வாதிகள் இந்த கிராமத்திற்கு வந்தனர் ஆயினும் அவர்கள் விரும்பிய படி செயல்பட வாய்ப்பு கிடைக்காததால் அவர்கள் இத்திட்டத்தை கைநழுவி விட்டார்கள். மரங்களை வெட்டவோ, விலங்குகளை கொலை செய்யவோ, மணல் அகலவோ நாம் அவர்களுக்கு இடம் அளிக்காததாலேயே அவர்கள் இத் திட்டத்தைக் கைவிட்டனர்.

2017 இல், இந்த கிராமத்துக்கு ஒரு கால அட்டவணைக்கு அமைய முறையான பஸ் சேவையினை பெற்றுத் தருமாறு கேட்பதற்கு ஒரு குறிப்பிட்ட அமைச்சரைச் சந்திக்க நான் சென்றேன். எனினும் அந்த சந்திப்பின் போது, அவர் என் கடிதத்தை என் முகத்தில் வீசினார். உன்னைய அரசாங்கங்கள் இந்த ஏழை மக்களை அவ்வாறே நடத்தினார்கள்

ஆயினும் 2025 மே மாதத்திற்குள் இந்தத் வீட்டு திட்டத்தை பூர்த்தி செய்து தருமாறு தனிப்பட்டரீதியில் நான் தற்போதைய ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டேன். இன்று அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றார், பிரதமரிடம் பொறுப்பை ஒப்படைத்து முன்னெடுக்கச் செய்தார். வீட்டமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, வீடு வீடாக சென்று மிகுந்த கரிசனையுடன் பணிகளை முன்னெடுத்து. கோரப்பட்ட தேதியில் திட்டத்தை பூர்த்தி செய்து தருவதற்காக சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார். தற்போதைய அரசாங்கம் இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றப் பெரும் ஆதரலை அளித்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். எனக் கூறினார்"

நிகழ்வில் பங்கேற்ற வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுகையில்,

"இதுபோன்ற நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவமனைகள், குளங்கள் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை பெற்றுக் கொடுப்பது கட்டாயத் தேவையாகும்.இவற்றைப் பெற்றுக் கொடுப்பது எமது அரசாங்கத்தின் பொறுப்பாகும், அத்தோடு கூட்டுறவு முறையின் கீழ் கிராம உற்பத்திகளைப் பரந்த சந்தைகளுடன் இணைப்பதற்கான ஒரு நடைமுறை திட்டத்தையும் நாம் வகுத்திருக்கின்றோம்" என அவர் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, "தேசிய மக்கள் சக்தி யின் கொள்கைகளின் கீழ் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வீட்டு வசதிகளை வழங்க நாம் செயல்பட்டு வருகின்றோம். இந்த ஆண்டில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கென நாம் பெரும் தொகைப் பணத்தை முதலீடு செய்துள்ளோம். இந்தக் கிராமத்தைப் பார்வையிட நாம் வந்த போது, மக்களின் துன்பத்தைக் நேரடியாகவே கண்டோம். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமென எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது." எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்:

இது இந்தியா, ’நாம் ஒற்றுமையாக உயர்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் முன்னேறிக்கொண்டிருக்கிற தருணமாகும், இலங்கையும் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் நாட்டை மறுசீரமைக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த உதாரணமாகும்

பௌத்த தர்மத்தினால் புடம் போட பட்டமை இரு நாடுகளுக்கிடையிலான வலுவான உறவுக்கு காரணமாகும். அத்தோடு பொருளாதாரம் உதவியை பெற்றுக் கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மட்டும் இலங்கை அரசுகள் இணைந்து மேற்கொண்ட இந்த செயல்திட்டமானது பௌத்த தர்மத்தில் வருகின்ற கருணை குணத்தை மேலோங்க செய்கின்றது. என தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் தந்திரிமலே ராஜமஹாவிகாரையின் தலைமைத் தேரர் அதி வணக்கத்துக்குரிய தந்திரிமலே சந்திரரத்ன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், வீடு அபிவிருத்தி கட்டுமானம் மற்றும் வீட்டுவசதிப் பிரதியமைச்சர், டீ.பி. சரத், முன்னாள் சபாநாயகர் திரு. கரு ஜயசூரிய, அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேன நாணயக்கார, மாதுலுவாவே சோபித தேரர் அறக்கட்டளையின் தலைவர் திரு. ரவி ஜயவர்தன, வீட்டுப் பயனாளர்கள், மற்றும் பெரும் எண்ணிக்கையிலான உள்ளூர் குடியிருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு