நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் வியட்நாம் தூதுவர்...

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் வியட்நாம் தூதுவர் தீ தான் ட்ரூக், இன்று (2024.06.07) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தார்.

அவரது பதவிக் காலத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு